search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி கவர்னர் கடிதம்
    X

    மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி கவர்னர் கடிதம்

    • ஆம்ஆத்மி மந்திரிகளான கோபால் ராய், கைலாஷ் கெலாட், உள்ளிட்டோருக்கு இந்த சந்திப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது.
    • துணை நிலை கவர்னர் அழைத்த கூட்டத்தை புறக்கணித்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    திகார் சிறையில் அடைக்கப்பட்ட போதும் இதுவரை அவர் பதவி விலகவில்லை.

    இதற்கிடையே டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனா நீர், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சுற்றுச்சூழல் மற்றும் வனம் போன்ற துறைகளின் கூட்டத்தை கூட்டினார்.

    ஆம் ஆத்மி மந்திரிகளான கோபால் ராய், கைலாஷ் கெலாட், அதிஷி, சவுரப் பரத்வாஜ் உள்ளிட்டோருக்கு இந்த சந்திப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் துணை நிலை கவர்னர் அழைத்த கூட்டத்தை புறக்கணித்தனர்.

    இதை தொடர்ந்து டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனா மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

    Next Story
    ×