search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "labor"

    • அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 100 நாட்கள் வேலை தருவதை உறுதி செய்ய வேண்டும் போன்ற கோரிக் கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களில் எழுப்பினார்கள்.

    திருவாடானை

    திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு சாலை பகு தியில் அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத் தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தாலுகா தலைவர் அருள்சாமி தலை மையில் மாவட்ட தலைவர் கலையரசன், தாலுகா செய லாளர் சேதுராமன், தாலுகா பொருளாளர் நாகநாதன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு போதுமான நிதியை வழங்க வேண்டும், வேலைக்கான சம்பளத்தை 15 நாட்களுக் குள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், வேலை திட்டத்தில் பணி செய்பவர்க ளுக்கு 100 நாட்கள் வேலை தருவதை உறுதி செய்ய வேண்டும் போன்ற கோரிக் கைகளை வலியுறுத்தி கண் டன கோஷங்களில் எழுப்பி னார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் தாலுகா நிர்வாகிகள் ரத்தி னம், முருகன், சகாயமாதா, சித்திரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி அருகே உள்ள வில்லி பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிர மணி
    • நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் வலது புறமாக சென்றுள்ளார். அப்போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சுப்பிரமணி சென்ற மொபட் மீது மோதியது

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள வில்லி பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிர மணி (வயது 48). கூலி தொழிலாளி. இவரது மனைவி பேபி (45).

    நேற்று சுப்பிரமணி பரமத்தி அருகே உள்ள கோனூருக்கு தனது மொபட்டில் சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து கந்தம்பாளையத்திற்கு மொபட்டில் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் வலது புறமாக சென்றுள்ளார். அப்போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சுப்பிரமணி சென்ற மொபட் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார்.

    இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோ தனை செய்த மருத்துவர்கள் சுப்பிரமணி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணி மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சேலம் சங்கர் நகரை சேர்ந்த மணிவண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழிலாளர்களின் சம்மதத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும்
    • 95 நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 53 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர்

    தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி, கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி ஆகியோர் அறிவுரையின்படி, திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தலைமையில் தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் திருப்பூர் மாநகரம், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் தேசிய பண்டிகை விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று, பணிக்கு அமர்த்திய தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக தொழிலாளர்களின் சம்மதத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அவ்வாறு தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா என்று ஆய்வு நடத்தினார்கள்.

    இதில் சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 52 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 32 உணவு நிறுவனங்கள், 11 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 95 நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 53 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    • குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழும்.
    • 2025-க்குள் மயிலாடுதுறையை குழந்தை தொழிலாளர் இல்லா மாவட்டமாக மாற்ற வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலககூட்ட ரங்கில் குழந்தை தொழி லாளர் முறையினை அகற்று வதற்காக உறுதிமொழி மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் எடுத்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

    குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலமாக திகழும் நிலையில் முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க 2025-ம் ஆண்டுக்குள் மயிலாடுதுறை மாவட்டத்தை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

    முன்னதாக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை முதல் கையொப்பமிட்டு மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன் , மயிலாடுதுறை தொழிலாளர் உதவி ஆணையர் ஞானபிரகாசம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கூலித்தொழிலாளி கடந்த 7ந் தேதி வரட்டுகரை காட்டுப்பகுதியில் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • முன்விரோதம் காரணமாக மோகனசுந்தரத்தை கொலை செய்தது தெரிய வந்தது.

    வெள்ளகோவில் :

    முத்தூர் அருகே உள்ள வரட்டு கரை பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 43) .கூலித்தொழிலாளி. இவர் கடந்த 7ந் தேதி அன்று வரட்டுகரை காட்டுப்பகுதியில் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன் விரோதம் காரணமாக மோகனசுந்தரத்தை வரட்டுகரை சக்திவேல் மகன் அன்பு குமார் (35), அதே பகுதியைச் சேர்ந்த நடராஜ் மகன் பிரவீன் குமார் (32), முத்தூர் பகுதியைச் சேர்ந்த குப்புராஜ் (44), சுரேஷ் (38) ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.

    நேற்று காலை போலீசார் அன்புக்குமாரை கைது செய்து காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மாதம் 23ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட சிறையில் அன்பு குமார் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள குப்புராஜ், சுரேஷ், பிரவீன் குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • அன்னூரில் இருந்து புளியம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
    • சேவூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவினாசி :

    ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி ஆம்பூதி பகுதியைச் சோ்ந்த அம்மாசை மகன் ராஜன் (வயது 50). இவா் அன்னூரில் இருந்து புளியம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். நீலிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, புளியம்பட்டியில் இருந்து அன்னூா் நோக்கி சென்ற லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து சேவூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • தினசரி சம்பளமாக 265 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு ஊரக வளர்ச்சி முகமை மூலம் வழங்கப்படுகிறது
    • தினமும் 40 ஆயிரம் பேர் வரை பணி செய்வர்.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புறம் தவிர்த்து அவிநாசி, பல்லடம், பொங்கலூர், தாராபுரம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத் தொழில் தான் பிரதானம்.தென்னை, வாழை, கரும்பு, பருத்தி, சோளம், நிலக்கடலை என அந்தந்த பகுதியின் மண், மழை வளத்துக்கேற்ப பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    சமீப ஆண்டுகளாக விவசாய நிலங்களில் உழவு செய்வது, களை எடுப்பது, உரமிடுவது, தண்ணீர் பாய்ச்சுவது, விளைபொரு ட்களை அறுவடை செய்வது, சந்தைக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள விவசாய தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதற்கு 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் தான் முக்கிய காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர். கிராமங்களில் கல், மண் வரப்பு, தென்னை மரங்களை சுற்றி அகழி எடுப்பது, உரக்குழி அமைப்பது, குளம், குட்டையோரம் மரக்கன்று நடுவது, சாலையோரம் உள்ள புதர் செடிகளை வெட்டுவது, நர்சரி பராமரிப்பு உள்ளிட்ட வேலைகளில் 100 நாள் திட்ட பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு தினசரி சம்பளமாக 265 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு ஊரக வளர்ச்சி முகமை மூலம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கூடுதலாக 50 நாள் வேலை நாள் உயர்த்தப்படும் என சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் கூறுகையில், 100 நாள் திட்டத்தில், ஊராட்சிகளில் வேலை அதிகமுள்ள சமயங்களில் தினமும் 40 ஆயிரம் பேர் வரை பணி செய்வர் என்றனர். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், 100 நாள் திட்டத்தில் பல இடங்களில் பணிகள் முறைப்படி நடப்பதில்லை.100 நாள் வேலை உறுதியளிப்பு திட் டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கட்டுமானப்பணி, சாலை அமைத்தல் போன்ற கடினமான பணிகள், தனியாருக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டு, உடல் உழைப்பு தொழிலாளர்கள் மூலமே மேற்கொள்ளப்படுகிறது.

    ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் 100 நாள் திட்ட தொழிலாளர்களின் பெயரில் வழங்கப்படுகிறது. விவசாய தொழிலாளர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் 100 நாள் திட்டம் தான். எனவே 100 நாள் திட்ட பணியாளர்களை விவசாய தொழிலில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்.

    அரசு வழங்கும் சம்பளத்துக்கு நிகரான சம்பளம் வழங்க விவசாயிகளும் தயாராக உள்ளனர். இதன் மூலம், தொழிலாளர்களுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும். விவசாயமும் செழிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தொழிலாளர் நல நிதி சட்டம் 1972 பிரிவு 2(டி)-ன் படி தொழிற்சாலைகள் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலாளியின் பங்கு ரூ.20-ம், வேலை அளிப்பவர் பங்காக ரூ.40-ம் சேர்த்து ரூ.60 வீதம் தொழிலாளர் நல நிதி பங்கு தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும்
    • தொழிலாளர் நலநிதி செலுத்த தவறினால் தொழிலாளர் நலநிதி சட்டம் வருவாய் வரி வசூல் சட்டத்தின் கீழ் அந்த தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப் பிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் நல வாரியம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர் நல நிதி சட்டம் 1972 பிரிவு 2(டி)-ன் படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்களில் ஐந்தும், அதற்குமேல் தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள், உணவு நிறுவனங்களில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலாளியின் பங்கு ரூ.20-ம், வேலை அளிப்பவர் பங்காக ரூ.40-ம் சேர்த்து ரூ.60 வீதம் தொழிலாளர் நல நிதி பங்கு தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும். அதன்படி 2022-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நலநிதியை வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.

    2022-ம் ஆண்டில் குறைந்தது 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நலநிதி செலுத்த வேலையளிப்பவர் கடமைப்பட்டவர் ஆவார். தொழிலாளர் நலநிதி செலுத்த தவறினால் தொழிலாளர் நலநிதி சட்டம் வருவாய் வரி வசூல் சட்டத்தின் கீழ் அந்த தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே 2022-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நலநிதி தொகையை வருகிற 31- ந் தேதிக்கு முன்பு The Seretary, Tamilnadu Labour Welfare Board, Chennai-600006 என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழிலாளர்கள் சங்க போராட்டம் கைவிடப்பட்டது
    • அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை தொடர்ந்து

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், பொது செயலாளர் முகமதுஅலிஜின்னா முன்னிலை வகித்தார்.

    அப்போது ஊராட்சியில் வேலை செய்யும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மோட்டார் ஆப்பரேட்டர்கள் மற்றும் தூய்மைப்ப ணியாளர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படியை அமுல்படுத்த வேண்டும். 7- வது ஊதியக்குழு ஊதியம் மற்றும் ஊதிய நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி மூலம் ஊதியம் நேரடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    போராட்டத்தினை தொடர்ந்து துறை அதிகாரிகள் உரிய பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்ததையடுத்து தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தில் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மோட்டார் ஆப்பரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தொப்பம்பட்டி ஹரிஜன காலனியைச் சோ்ந்தவா் நாட்டுதுறை, கூலி தொழிலாளி.
    • பீரோவில் இருந்த ரூ.6 ஆயிரத்தைத் திருடிச் சென்றுள்ளாா்.

     தாராபுரம் :

    தாராபுரத்தை அடுத்த தொப்பம்பட்டி ஹரிஜன காலனியைச் சோ்ந்தவா் நாட்டுதுறை (வயது 23), கூலி தொழிலாளி. இவரது வீட்டுக்கு அருகில் ராஜ் (60) என்ற முதியவா் வசித்து வருகிறாா்.

    இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு முதியவா் வீட்டில் இல்லாதபோது மேற்கூரையைப் பிரித்து அவரது வீட்டுக்குள் நுழைந்த நாட்டுதுறை, பீரோவில் இருந்த ரூ.6 ஆயிரத்தைத் திருடிச் சென்றுள்ளாா். இது குறித்து தாராபுரம் குற்றப் பிரிவில் ராஜ் புகாா் அளித்தாா்.இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார்நாட்டுதுறையை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    • சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க அமைப்புச்சாரா தொழிலாளர்களின் தேசிய தரவுதளம் என்ற ஒரு தரவுதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
    • தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்.

    சேலம்:

    சேலம் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க அமைப்புச்சாரா தொழிலாளர்களின் தேசிய தரவுதளம் என்ற ஒரு தரவுதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

    இந்த தரவு தளத்தில் கட்டுமான தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள், தச்சுவேலை செய்வோர், கல் குவாரி தொழிலாளர்கள், முடி திருத்துவோர், தெரு வியாபாரிகள் உள்ளிட்ட 156 வகையான இ.எஸ்.ஐ., பி.எப். பிடித்தம் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்யலாம்.

    அனைத்து பொது சேவை மையங்களிலும் மற்றும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. http://eshram.gov.in என்ற இணையதளத்தில் தொழிலாளர்கள் சுயமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களும் இத்தரவுதளத்தின் கீழ் பதிவு செய்ய வழிவகை உண்டு.

    பதிவு செய்து கொள்ளும் தொழிலாளர்களின் வயது 18 முதல் 59-க்குள் இருக்க வேண்டும். எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. பதிவேற்றம் செய்வதற்கு ஆதார் அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்ட செல்போன் எண் அல்லது கைரேகை மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

    வங்கி கணக்கு புத்தகம் போன்ற தேவையான விவரங்களும், இத்தரவுகளை பதிவேற்றம் செய்த பிறகு பயனாளிகளுக்கு 12 இலக்கு எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள், வேலை காரணங்களுக்காகவோ அல்லது வேறு எங்கும் புலம் பெயர்ந்தாலும் அரசிடம் இருந்து பெற வேண்டிய சலுகைகளை தொடர்ந்து பெற இந்த அடையாள அட்டை உதவியாக இருக்கும்.

    இந்த தரவுதளத்தில் இணைத்து கொள்ளும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்துக்கான விபத்து காப்பீடு வழங்கப்படும். எனவே, சேலம் மாவட்டத்தை சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த தரவு தளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழிலாளர் ஊதிய ஒப்பந்தம் குறித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொ.மு.ச நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • போக்குவரத்து தொழிலாளர்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளும் வகையில் சம்பள பேச்சு வார்த்தையின் முடிவுகள் அமையும் என்று தொ.மு.ச. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    சிவகாசி

    தமிழக போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் தலைவர் மு.சண்முகம் எம்.பி. மற்றும் பேரவையின் பொருளாளர் நடராஜன் ஆகியோருடன் சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனைக்கு பின் தொ.மு.ச. நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சீரழிக்கப்பட்ட போக்குவரத்து துறையை மறுசீரமைப்பு செய்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் ஆலோசனைப்படி போக்குவரத்துத்துறை அமைச்சர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறார்.

    பொதுவாகவே விடுப்பு எடுக்காமல் நீண்டகாலம் பணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்களின் மீது இதுவரை கடுமையான நடவடிக்கைகள்தான் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய அமைச்சர் அனைவரையும் வரவழைத்து அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்து வேலைக்கு திரும்ப வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

    அதுபோலவே போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை கடந்த ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு விரயம் செய்துவிட்டனர். தொழிலாளர்களின் பாதுகாவலனாக எப்போதுமே திகழ்கின்ற தி.மு.க. அரசு தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் விரைவாகக் கிடைப்பதற்கான நடவடிக்கைகளில் முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது.

    போக்குவரத்து தொழிலாளர்கள் தி.மு.க.வின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக தொ.மு.ச. நிர்வாகிகளுடன் இணைந்து அமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். போக்குவரத்து தொழிலாளர்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளும் வகையில் சம்பள பேச்சு வார்த்தையின் முடிவுகள் அமையும் என்று தொ.மு.ச. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×