search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "welfare fund"

    • தொழிலாளர் நல நிதி சட்டம் 1972 பிரிவு 2(டி)-ன் படி தொழிற்சாலைகள் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலாளியின் பங்கு ரூ.20-ம், வேலை அளிப்பவர் பங்காக ரூ.40-ம் சேர்த்து ரூ.60 வீதம் தொழிலாளர் நல நிதி பங்கு தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும்
    • தொழிலாளர் நலநிதி செலுத்த தவறினால் தொழிலாளர் நலநிதி சட்டம் வருவாய் வரி வசூல் சட்டத்தின் கீழ் அந்த தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப் பிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் நல வாரியம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர் நல நிதி சட்டம் 1972 பிரிவு 2(டி)-ன் படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்களில் ஐந்தும், அதற்குமேல் தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள், உணவு நிறுவனங்களில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலாளியின் பங்கு ரூ.20-ம், வேலை அளிப்பவர் பங்காக ரூ.40-ம் சேர்த்து ரூ.60 வீதம் தொழிலாளர் நல நிதி பங்கு தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும். அதன்படி 2022-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நலநிதியை வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.

    2022-ம் ஆண்டில் குறைந்தது 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நலநிதி செலுத்த வேலையளிப்பவர் கடமைப்பட்டவர் ஆவார். தொழிலாளர் நலநிதி செலுத்த தவறினால் தொழிலாளர் நலநிதி சட்டம் வருவாய் வரி வசூல் சட்டத்தின் கீழ் அந்த தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே 2022-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நலநிதி தொகையை வருகிற 31- ந் தேதிக்கு முன்பு The Seretary, Tamilnadu Labour Welfare Board, Chennai-600006 என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×