search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mexico Violence"

    • சுமார் 8 ஆயிரம் இந்தியர்கள் மெக்சிகோவில் வசிக்கின்றனர்
    • காரை இடைமறித்து நிறுத்துமாறு மிரட்டியும், இந்தியர் பணிய மறுத்தார்

    வட அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள நாடு மெக்சிகோ. இதன் தலைநகரம் மெக்சிகோ சிட்டி.

    உலகில் குற்ற செயல்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் ஆள் கடத்தல், துப்பாக்கிச்சூடு, கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கமான ஒன்று.

    மெக்சிகோ நாட்டில் சுமார் 8 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கும் நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் மென்பொருள் சம்பந்தமான பணிகளுக்காக மெக்சிகோ சிட்டியில் வசித்து வருகின்றனர்.

    மெக்சிகோ சிட்டியின் மிகல் அலெமன் வயாடக்ட் (Miguel Aleman Viaduct) எனும் பகுதியில் 3 தினங்களுக்கு முன்பு ஒரு இந்தியர் மற்றொருவருடன், மெக்சிகோ சிட்டி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ஒரு பணப்பரிமாற்ற நிலையத்திலிருந்து சுமார் ரூ.8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை எடுத்து கொண்டு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 அடையாளம் தெரியாத நபர்கள், அவரது காரை இடைமறித்து நிறுத்துமாறு மிரட்டினர்.

    இதற்கு அந்த இந்தியர் பணியாததால், பணத்தை கொள்ளையடிக்க முயன்ற அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

    இதில் காரை ஓட்டிச்சென்ற இந்தியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொள்ளையர்கள், பணத்தை எடுத்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இதனையடுத்து அவருடன் பயணித்தவர் உடனே காவல்துறைக்கும், அவசர மருத்துவ சேவைக்கும் தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இறந்த இந்தியருடன் வந்த மற்றொருவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது.

    "இந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இறந்தவரின் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து கொண்டிருக்கிறோம். மெக்சிகோ நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய கோரியிருக்கிறோம்" என மெக்சிகோ நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இது குறித்து தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

    இறந்த இந்தியரின் பெயரோ மற்ற விவரங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை.

    • தெருக்களில் நடந்த வன்முறையில் வானொலி நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேர் கொல்லப்பட்டனர்.
    • கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஜுவாரசில் நடந்த பயங்கர கலவர காலத்தை நினைவுபடுத்தியது.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ எல்லைப்பகுதியில் உள்ள சியூதத் ஜூவாரஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இரு குழுவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர்.

    இந்த தகவல் வெளியில் பரவியதையடுத்து, நகர வீதிகளில் இரு குழுவினரிடையே கலவரம் மூண்டது. ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். பொதுமக்களும் தாக்கப்பட்டனர். வணிக நிறுவனங்களுக்கு தீவைக்கப்பட்டன. இந்த வன்முறையில், வானொலி நிலையத்தின் 4 ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த வன்முறையியானது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஜுவாரசில் நடந்த பயங்கர கலவர காலத்தை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது.

    மெக்சிகோவில் ஆதிக்கம் செலுத்தி வரும் போதைப்பொருள் விற்பனையாளர்கள், தொழிலை பாதுகாக்கவும், தங்களுக்கு போட்டியாக உள்ளவர்கள் மற்றும் எதிரிகளை பழிவாங்கவும், உள்ளூரில் செயல்படும் குழுக்களை பயன்படுத்துகின்றனர். இதனால் தொடர்ந்து வன்முறைகள் ஏற்படுகின்றன.

    இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் போதைக் கும்பல் தொடர்பான வன்முறையால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் விற்பனையாளர்களிடையே தொடர்ந்து மோதல் ஏற்படுகிறது. இந்த மோதல்களில் உயிரிழப்புகளும்  ஏற்படுகின்றன. எதிரிகளின் தலையை துண்டித்தும், உடல் உறுப்புகளை சிதைத்தும் கொடூரமாக கொல்லும் வன்முறைக் கும்பல், அந்த உடல்களை நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்களில் கட்டி தொங்கவிடுகின்றனர். இதனால் நெடுஞ்சாலை பகுதிகளில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கடந்த வாரம் ஜாகெட்கஸ் மாநிலத்தில் ஏற்பட்ட மோதல்களில் 10 பேர் கொல்லப்பட்டனர். 9 பேரின் உடல்கள் மேம்பாலத்தில் தொங்கிய நிலையிலும், ஒருவர் உடல்  சியுதத் கவுதமாக் நகரிலும் மீட்கப்பட்டன. 

    இந்நிலையில் ஜாகெட்கஸ் மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலை மேம்பாலத்தில் தொங்கிய 3 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன. சான் ஜோஸ் தி லால்டஸ் நகரில் இந்த உடல்கள் மீட்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைப்பு கூறி உள்ளது.

    இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் போதைக் கும்பல் தொடர்பான வன்முறையால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பை விட 3.4 சதவீதம் குறைவு  என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×