search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Expert Group"

    • மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.
    • ஸ்டான்லி மருத்துவமனை நிபுணர்கள் நெல்லையில் தங்கியிருக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகிய 2 பேரும், சக பள்ளி மாண வர்கள் உள்ளிட்ட கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேருக்கும் நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்களும் நேரடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவருக்கு ஆறுதல் தெரிவித்து உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

    நேற்று மதியம் மாணவர் சின்னத்துரையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து டாக்டர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்த அவர், மாணவர் சின்னத்துரையின் கையில் பலத்த வெட்டுக்காயங்கள் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மாணவரை இங்கிருந்து இடமாற்றம் செய்வதில் சிரமம் உள்ளதால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டு மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.

    தொடர்ந்து அமைச்சரின் உத்தரவின்பேரில், ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜியின் அறிவுறுத்தலின்படி இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து கை அறுவை சிகிச்சை செய்வதில் நிபுணத்துவம் பெற்ற 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழு விமானம் மூலம் தூத்துக்குடி வந்தனர். அங்கிருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு வரும் அந்த குழு, முதல் கட்டமாக மாணவருக்கு இதுவரை அளிக்கப்பட்டுள்ள சிகிச்சைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.

    அதன்பின்னர் மாணவரின் கையில் ஏற்பட்டுள்ள வெட்டு காயங்களின் தன்மை, தற்போதைய நிலை உள்ளிட்டவற்றை அறிந்து கை அறுவை சிகிச்சை செய்வது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவருக்கு அறுவை சிகிச்சை முடியும் வரை ஸ்டான்லி மருத்துவமனை நிபுணர்கள் நெல்லையில் தங்கியிருக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • பத்து ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் டீசலால் இயங்கும் மாநகர பேருந்துகளை குறைக்கவும் பரிந்துரைத்து உள்ளனர்.
    • அதிகரித்து வரும் எத்தனால் கலந்த எரிபொருளுக்கான கொள்கைக்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

    புதுடெல்லி:

    காற்று மாசுபடுவதை தடுப்பதற்காக மத்திய எண்ணெய் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் தருண் கபூர் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு மத்திய எண்ணெய் அமைச்சகத்துக்கு பல்வேறு பரிந்துரைகளை அறிக்கையாக அளித்துள்ளது.

    அதில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் டீசலில் இயங்கும் 4 சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதை இந்தியா 2027-ம் ஆண்டிற்குள் தடை செய்ய வேண்டும். மின்சார மற்றும் எரிவாயு எரிபொருள் வாகனங்களுக்கு மாற உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    2035-ம் ஆண்டிற்குள் உள் எரிப்பு எந்திரங்கள் கொண்ட மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் 3 சக்கர வண்டிகளை படிப்படியாக நிறுத்தவும் அந்த குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் பத்து ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் டீசலால் இயங்கும் மாநகர பேருந்துகளை குறைக்கவும் பரிந்துரைத்து உள்ளனர்.

    அதேபோல் 2035-ம் ஆண்டிற்குள் உள் எரிப்பு எந்திரத்துடன் கூடிய 2 மற்றும் 3 சக்கர வாகனங்களை படிப்படியாக வெளியேற்றுவதற்கு உகந்த தீர்வாக, இடைப்பட்ட காலத்தில், அதிகரித்து வரும் எத்தனால் கலந்த எரிபொருளுக்கான கொள்கைக்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

    பயணிகள் கார்கள் மற்றும் டாக்சிகள் உட்பட 4 சக்கர வாகனங்கள், ஒவ்வொரு வகையிலும் கிட்டத்தட்ட 50 சதவீத பங்கைக் கொண்ட பகுதியளவு மின்சாரத்திற்கும், பகுதி எத்தனால் கலந்த பெட்ரோலுக்கும் மாற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். பெட்ரோலால் இயக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களை படிப்படியாக நிறுத்தவும் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

    நாட்டில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க, மின்சாரம் மற்றும் கலப்பின வாகனங்களின் விரைவான தத்தெடுப்பு மற்றும் உற்பத்தி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகைகளை மார்ச் 31-ந்தேதிக்கு அப்பால் அரசாங்கம் "இலக்கு நீட்டிப்பு" செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    2024-க்குள் சரக்குகளை கையாள்வதற்கு ரெயில்வே மற்றும் எரிவாயு மூலம் இயங்கும் டிரக்குகளை அதிக அளவில் பயன்படுத்தவும் பரிந்துரை செய் துள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு இதுவரை ஏற்கவில்லை. ஆனால் அதை நோக்கிய பயணத்துக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் 6 கேள்வி பதில் தவறாக உள்ளதாக புகார்கள் வந்ததையடுத்து நிபுணர் குழு மூலம் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    நகராட்சி கமி‌ஷனர் உள்ளிட்ட 1200 காலி இடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் மூலம் (டி.என்.பி.எஸ்.சி) கடந்த 11-ந்தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதை 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

    இந்த தேர்வு 2 பிரிவாக நடந்தது. பொது அறிவுக்கு 100 கேள்வியும், மொழி பாடத்தில் இருந்து 100 கேள்விகளும் கேட்கப்பட்டன.

    இதற்கான விடை ‘ஆன்சர் கீ’ வடிவில் கொடுக்கப்பட்டிருந்தது.

    இந்த தேர்வுக்கான 200 கேள்விக்கும் சரியான விடையை தேர்வாணையம் கடந்த 13-ந்தேதி வெளியிட்டிருந்தது. கேள்வி பதிலில் தவறு இருந்தால் ஆன்-லைனில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டது.

    இதில் 6 கேள்வி பதில் தவறாக உள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 2 ஆயிரம் பேர் டி.என்.பி.எஸ்.சி.யிடம் முறையிட்டுள்ளனர்.

    இதுபற்றி டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் நடராஜன் சுப்பிரமணியன் கூறியதாவது:-

    கடந்த 11-ந்தேதி நடைபெற்ற குரூப்-2 தேர்வில் கொடுக்கப்பட்டிருந்த கேள்வி-பதிலை சரிபார்த்த போது 6 கேள்வி-பதில் தவறாக உள்ளது. அதில் 153-வது கேள்வியில் நேபாள்-இந்தியா இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை எந்த இடத்தில் நடந்தது என்பதற்கு சரியான பதில் கொல்கத்தா என்று கொடுத்துள்ளனர். அது தவறு. உண்மையான பதில் காத்மாண்டு.

    அடுத்ததாக உணவு தானிய உற்பத்தியில் தஞ்சாவூர் தான் முதன்மை இடத்தில் உள்ளதாக கொடுத்துள்ளனர். அது தவறு. 2013-2014 ஆண்டு மாவட்ட கலெக்டரின் அதிகார பூர்வ இணையதளத்தில் விழுப்புரம் என்றும் இந்த மாவட்டத்தில்தான் 10 சதவீதம் உற்பத்தி அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    139-வது கேள்வியான புலித்தேவருக்கு உதவியது பிரெஞ்சுபடை. ஆனால் இவர்களின் விடையில் டச்சுப்படை உதவியதாக கூறி உள்ளனர். இது தவறு.

    11-வது கேள்வியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை எத்தனை நாட்கள் என்று கேட்டு 50, 100, 150 என கேட்டுள்ளனர். இதற்கு சரியான விடை 100 என டி.என்.பி.எஸ்.சி. கூறி உள்ளது. ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் 150 நாட்கள் என உயர்த்தி இருந்தனர்.

    எனவே 100 என்று எழுதி இருந்தாலும், 150 என்று எழுதி இருந்தாலும் சரி தான்.

    183-வது கேள்வியில் தேசிய விவசாய கொள்கையின் அடிப்படையில் எவ்வளவு வளர்ச்சியை எதிர்பார்த்தனர் என்பதற்கு 4 சதவீதம் என்பதில் கூறி உள்ளனர். ஆனால் 4 சதவீதத்துக்கும் மேல் வர வேண்டும் என்று எதிர்பார்த்தனர். எனவே 6 அல்லது 8 என்று எழுதினால் சரியான பதிலாகும்.

    மற்றொரு கேள்வியான ‘பிங் புல்வாம்’ என்ற ஒரு பூச்சியின் பெயரை குறிப்பிட்டுள்ளனர். இதில் எழுத்து தவறு உள்ளது.

    எனவே மேற்கண்ட 6 கேள்விக்கான பதிலை எழுதியவர்களுக்கு 9 மதிப்பெண் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது சம்பந்தமாக தேர்வாணைய அதிகாரி நந்தகுமார் கூறுகையில், குரூப்-2 தேர்வு வினா-விடை தவறு சம்பந்தமாக 2 ஆயிரம் பேர் முறையிட்டு உள்ளனர்.

    அவர்கள் சொன்ன பதில்களை நிபுணர் குழு வைத்து ஆய்வு செய்வோம். டி.என்.பி.எஸ்.சி.யின் கேள்வி பதில் தவறாக இருந்தால் அதை எழுதியவர்களுக்கு உரிய மதிப்பெண் கிடைக்க ஆலோசிப்போம் என்றார். #tamilnews
    சென்னை - சேலம் பசுமை விரைவு சாலைத் திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்ற நிபுணர் குழு அமைத்திட வேண்டும் என்று தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #ChennaiSalemHighway
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    “சென்னை - சேலம் 8 வழி பசுமை விரைவுச்சாலை” அமைக்கும் திட்டத்தை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயிகள், பாரம்பரியமாகத் தங்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையான விளை நிலங்கள் பறிபோகின்றனவே என்று மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

    இந்த திட்டத்தை, “எப்படியும் நிறைவேற்றியே தீருவேன்” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதிக்க எண்ணத்துடன் அதீத ஆர்வமும் அளவில்லா வேகமும் காட்டுவதன் பின்னணி என்ன?.

    நீர் ஆதாரமே தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கின்ற நிலையில், இந்தத் திட்டத்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிணறுகள், நூறுக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், குட்டைகள் அழித்து நாசமாக்கப்படும் என்று வெளிவரும் செய்திகளை, கடமை உணர்வும் பொறுப்பும் உள்ள, மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஓர் அரசு புறந்தள்ளிவிட்டு, இத்திட்டத்தை நீர் ஆதாரங்களை அழித்து மண்மேடாக்கி நிறைவேற்றத் துடியாய்த் துடிப்பது ஏன்?.

    தி.மு.க. சார்பில் மக்களிடம் கருத்துக்கேட்பு நடத்துங்கள் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்த பிறகு, ஆங்காங்கே நீர்த்துப்போன வெற்றுக் கருத்துக்கேட்பு என்ற கண்துடைப்பு நாடகம் மட்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் ஏனோதானோவென நடத்திவிட்டு, விவசாய நிலங்களுக்குள் கல் ஊன்றுவதைத் தொடருவது ஏன்?.

    திட்டத்திற்கு எதிராக நியாயமான கருத்துகளைச் சொல்லும் மக்களை கைது செய்வதையும் மிரட்டுவதையும் நிறுத்தாதது ஏன்?. அ.தி.மு.க. அரசின் இந்த அப்பட்டமான அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. 5 மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் மிக முக்கியம் என்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இனியாவது உணர முன்வரவேண்டும்.

    சொந்த மாவட்ட மக்களின் போராட்டத்தைப் பார்த்தாவது, அவர் இந்தத் திட்டத்தை எதிர்க்கும் மக்களின் வீரியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே விவசாய நிலங்களோ, நீர் ஆதாரங்களோ, பசுமை நிறைந்த மலைகளோ பாதிக்கப்படாத வகையில், இந்த சென்னை - சேலம் பசுமை விரைவு சாலைத் திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்றுவதற்கு ஏற்றதொரு திட்டத்தைத் தயாரிப்பதற்கு அல்லது இப்போது பயன்பாட்டில் உள்ள சாலைகளில் ஒன்றை அகலப்படுத்துவதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்கு, உடனடியாக ஒரு நிபுணர் குழுவை அமைத்திட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #ChennaiSalemHighway
    ×