search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stanley hospital"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்டான்லி ஆஸ்பத்திரி கல்லூரி முதல்வர் பாலாஜி கேண்டீனில் ஆய்வு செய்தார்.
    • வீடியோ வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கேண்டீனை இழுத்து மூட மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி உத்தரவிட்டார்.

    பெரம்பூர்:

    சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு பல்வேறு இடங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்கு வரும் ஏழை மக்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் தனியார் மூலம் கேண்டீன் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த கேண்டீனில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பஜ்ஜி, வடை, போண்டா சுட்டு விற்பனைக்காக கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது. அந்த பெட்டியில் எலிகள் சுற்றி திரிந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கேண்டீன் ஊழியர் ஒருவரிடம் கேட்டனர். அதற்கு அவர் உரிய பதில் அளிக்காமல் கண்ணாடி பெட்டியில் விளையாடி கொண்டிருந்த எலியை விரட்டி விட்டு பஜ்ஜி, வடை போன்றவற்றை எடுத்து அகற்றினார்.

    இதுகுறித்து ஸ்டான்லி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து ஸ்டான்லி ஆஸ்பத்திரி கல்லூரி முதல்வர் பாலாஜி கேண்டீனில் ஆய்வு செய்தார். பின்னர் கேண்டீனை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார்.

    வீடியோ வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கேண்டீனை இழுத்து மூட மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி உத்தரவிட்டார். உத்தரவின்பேரில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்த தனியார் கேண்டீன் மூடி சீல் வைக்கப்பட்டது

    இந்நிலையில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள கேண்டீன்களையும் ஆய்வு செய்ய மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    • கேண்டீனில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பஜ்ஜி, வடை, போண்டா சுட்டு விற்பனைக்காக கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது.
    • கண்ணாடி பெட்டியில் விளையாடி கொண்டிருந்த எலியை விரட்டி விட்டு பஜ்ஜி, வடை போன்றவற்றை எடுத்து அகற்றினார்.

    பெரம்பூர்:

    சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு பல்வேறு இடங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்கு வரும் ஏழை மக்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் தனியார் மூலம் கேண்டீன் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த கேண்டீனில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பஜ்ஜி, வடை, போண்டா சுட்டு விற்பனைக்காக கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது. அந்த பெட்டியில் எலிகள் சுற்றி திரிந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கேண்டீன் ஊழியர் ஒருவரிடம் கேட்டனர். அதற்கு அவர் உரிய பதில் அளிக்காமல் கண்ணாடி பெட்டியில் விளையாடி கொண்டிருந்த எலியை விரட்டி விட்டு பஜ்ஜி, வடை போன்றவற்றை எடுத்து அகற்றினார்.

    இதுகுறித்து ஸ்டான்லி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து ஸ்டான்லி ஆஸ்பத்திரி கல்லூரி முதல்வர் பாலாஜி கேண்டீனில் ஆய்வு செய்தார். பின்னர் கேண்டீனை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார். கேண்டீனில் பஜ்ஜி வைக்கப்பட்ட கண்ணாடி பெட்டியில் எலி சுற்றித் திரியும் வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.
    • ஸ்டான்லி மருத்துவமனை நிபுணர்கள் நெல்லையில் தங்கியிருக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகிய 2 பேரும், சக பள்ளி மாண வர்கள் உள்ளிட்ட கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேருக்கும் நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்களும் நேரடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவருக்கு ஆறுதல் தெரிவித்து உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

    நேற்று மதியம் மாணவர் சின்னத்துரையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து டாக்டர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்த அவர், மாணவர் சின்னத்துரையின் கையில் பலத்த வெட்டுக்காயங்கள் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மாணவரை இங்கிருந்து இடமாற்றம் செய்வதில் சிரமம் உள்ளதால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டு மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.

    தொடர்ந்து அமைச்சரின் உத்தரவின்பேரில், ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜியின் அறிவுறுத்தலின்படி இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து கை அறுவை சிகிச்சை செய்வதில் நிபுணத்துவம் பெற்ற 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழு விமானம் மூலம் தூத்துக்குடி வந்தனர். அங்கிருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு வரும் அந்த குழு, முதல் கட்டமாக மாணவருக்கு இதுவரை அளிக்கப்பட்டுள்ள சிகிச்சைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.

    அதன்பின்னர் மாணவரின் கையில் ஏற்பட்டுள்ள வெட்டு காயங்களின் தன்மை, தற்போதைய நிலை உள்ளிட்டவற்றை அறிந்து கை அறுவை சிகிச்சை செய்வது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவருக்கு அறுவை சிகிச்சை முடியும் வரை ஸ்டான்லி மருத்துவமனை நிபுணர்கள் நெல்லையில் தங்கியிருக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    2 கைகளை இழந்த வாலிபருக்கு மூளைச்சாவு அடைந்தவரின் கைகளை பொருத்தி ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    சென்னை:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை அடுத்த போடிக் காமன்வாடி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (30). ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் கட்டிட வேலை செய்து வந்தார்.

    கொத்தனாரான இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி சித்தையன் கோட்டை என்ற இடத்தில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். கான்கிரீட் போடுவதற்காக ஒரு நீண்ட கம்பியை தூக்கினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் வயரில் அந்த கம்பி உரசியது. இதில் அவரது 2 கைகளும் முழங்கைக்கு கீழே கருகியது. கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இருந்தும் பலனில்லை. 2 கைகளையும் இழந்துவிட்டார். அவரால் வேலைக்கு செல்ல முடியாததால் குடும்பம் வறுமையில் வாடியது.

    இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் டி.ஜி. வினய்யை சந்தித்தார். அப்போது அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சென்று சிகிச்சை பெறுமாறு ஆலோசனை வழங்கினார்.

    அவரது உதவியுடன் கடந்த ஆண்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டர்களை சந்தித்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் தானமாக பெற்று உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் 2 கைகளையும் மீண்டும் பொருத்த முடியும் என நம்பிக்கை அளித்தனர்.

    இதற்கிடையே மரணம் அடைந்த ஒருவரின், 2 கைகளையும் தானமாக வழங்க அவரது உறவினர்கள் முன் வந்தனர். உடனே கடந்த ஆண்டு பிப்ரவரி 7-ந்தேதி மதுரையில் இருந்து விமானம் மூலம் நாராயணசாமி சென்னை வந்தார்.

    அங்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் வி.ரமாதேவி தலைமையில் 75 பேர் அடங்கிய குழுவினர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். 13 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து கடந்த ஓராண்டாக அவருக்கு தொடர் சிகிக்சையும், தொடர் கண்காணிப்பும் அளிக்கப்பட்டது. தற்போது பூரண குணமடைந்த அவர் நேற்று வீடு திரும்பினார்.

    அது குறித்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ரமாதேவி கூறியதாவது:-

    ஸ்டான்லி ஆஸ்பத்திரி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறை இந்திய அளவில் புகழ் பெற்ற முதல் நிலை மையமாகும். இருந்தாலும் மூளை சாவு ஏற்பட்டவரின் கைகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது அரசு மருத்துவமனையில் இதுவே முதல் முறையாகும்.உலகம் முழுவதும் 87 ஆஸ்பத்திரிகளில் இதுவரை 110 பேருக்கு இந்த வகை அறுவை சிகிச்சை மூலம் மறு வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

    உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 2 கைகளும் பொருத்தப்பட்ட நாராயணசாமியால் சில பணிகளை சிறப்பாக செய்ய முடியும். பிசியோ தெரபி சிகிச்சையை கட்டாயம் அவர் தொடர்ந்து செய்ய வேண்டும். அதன் மூலம் தான் அவரது கைகள் சரியாக செயல்படுத்த முடியும்.

    தற்போது அவரால் கைகளை உயரே தூக்க முடியும், செல்போன் மற்றும் டெலிபோனில் கால் செய்ய முடியும். கோப்பை உள்பட பாத்திரங்களை எடுக்க முடியும். தமிழ்நாட்டிலேயே இவருக்குதான் முதன் முறையாக அரசு ஆஸ்பத்திரியில் இத்தகைய ஆபரேசன் மூலம் மாற்று கைகள் பொருத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம் என்றார்.

    ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் பொன்னம்பலம் நமசிவாயம் கூறும் போது, “முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட இத்தகைய அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது. அது தொடர வேண்டுமெனில் மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் கைகளை தானம் செய்ய பொதுமக்கள் விருப்பம் தெரிவிக்க வேண்டும்.

    மேலும் கைகள் துண்டிக்கப்பட்ட சுமார் 6 மணி நேரத்துக்குள் அறுவை சிகிச்சை மூலம் நோயாளிகளுக்கு பொருத்த வேண்டும். தாமதம் ஏற்பட்டால் மீள்சி திறன் குறையும் என்றார்.

    இதற்கிடையே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 2 கைகளும் பெற்ற நாராயணசாமிக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

    அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணியிடத்திற்கான அரசாணையை வழங்கினார். அதை அவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். #tamilnews
    உயிருக்கு போராடும் தந்தையிடம் ஆசி பெறுவதற்காக மகன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #Stanleyhospital #Marriage
    பிராட்வே:

    சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியை சேர்ந்தவர் சுதேஷ் (வயது 60). வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், பிரகாஷ், சரவணன், சதீஷ்(28) ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.

    சதீசுக்கும், திருவொற்றியூர் சன்னதி தெருவைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்ணுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டு, அடுத்த மாதம் (பிப்ரவரி) 15-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது.

    இந்தநிலையில் கடந்த 11-ந்தேதி திருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற சுதேஷ் மீது அந்த வழியாக சென்ற மின்சார ரெயில் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுதேஷ், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவரது இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகள் அகற்றப்பட்ட நிலையில் அவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். இன்று (சனிக்கிழமை) அதிகாலை அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர். அறுவை சிகிச்சையில் ஏதும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் தனது தந்தை கண் முன்னே தனது திருமணம் நடக்காதே?, அவரிடம் ஆசீர்வாதம் பெற முடியாதே? என சதீஷ் மனம் குமுறினார்.

    தனது தந்தை இருக்கும்போதே அவரது கண் எதிரேயே தனது திருமணத்தை நடத்த வேண்டும் என தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். தந்தை மீதான அவரது பாசத்தை பார்த்து நெகிழ்ந்த இருவீட்டாரும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர்.



    இதையடுத்து சதீஷ் நேற்று இரவு ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருவீட்டார் ஒத்துழைப்புடன் உறவினர்கள் முன்னிலையில் சித்ராவின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்றார்.

    தந்தை பாசத்தில் மகன் செய்த இந்த திருமண நிகழ்வு மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. #Stanleyhospital #Marriage
    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Swineflu
    சென்னை:

    சென்னையில் டெங்கு, பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 165 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபோல பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கும்மிடிப்பூண்டியை சேர்ந்த குமுதா (23), ராயபுரத்தை சேர்ந்த பூங்காவனம் (26) ஆகியோர் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய தனிமையான வார்டில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அவர்கள் இருவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று மருத்துவமனை டீன் பொன்னப்ப நமச்சிவாயம் தெரிவித்தார்.

    ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் வார்டில் 82 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 10 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்படுவதாக டீன் ஜெயந்தி தெரிவித்தார்.

    எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியிலும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Swineflu
    சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 9-ம் வகுப்பு மாணவனுக்கு நவீன கல்லீரல் ஆபரேசன் நடைபெற்றது.
    ராயபுரம்:

    தர்மபுரியை சேர்ந்தவர் முருகானந்தம். கூலித்தொழிலாளி. இவரது மகன் உதயகுமார் (15). 9-ம் வகுப்பு படித்து வருகிறான். 2 மாதங்களுக்கு முன்பு பள்ளியில் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் உதயகுமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    ஆபத்தான நிலையில் மாணவனை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதனையில் உதயகுமாருக்கு கல்லீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. இண்டர்வென்‌ஷனல் ரேடியாலஜி பிரிவில் உதயகுமாருக்கு ஆபரேசன் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    கல்லீரல், குடல் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுகுமார் தலைமையிலான குழுவினர் மாணவனுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன முறையில் ஆபரேசன் செய்தார். தொடையில் சிறிய ஓட்டை போட்டு ரத்த நாளங்களில் நுண்குழாய் செலுத்தி கல்லீரலில் ஏற்பட்ட ‘ரத்த’கசிவு சரி செய்யப்பட்டது.

    இதுகுறித்து ஆஸ்பத்திரி டீன் பொன்னம்பல நமச்சிவாயம் கூறியதாவது:-

    இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு சிறுவனுக்கு நவீன சிகிச்சை மூலம் கல்லீரலில் இருந்த ரத்த கசிவு அகற்றப்பட்டு உள்ளது. ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உயர்தர அதிநவீன மருத்துவ கருவிகள் உள்ளன.

    தனியார் ஆஸ்பத்திரியைவிட சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையை தனியார் ஆஸ்பத்திரியில் பெற்றால் ரூ.4 லட்சம் வரை செலவாகும். முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது என்றார்.
    ×