search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women suffering"

    • மகளிர் உரிமை தொகைக்கு மேல்முறையீடு செய்ய முடியாமல் பெண்கள் தவித்து வருகின்றனர்.
    • பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மானாமதுரை

    மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு வந்த குறுஞ் செய்தியை வைத்து 30 நாட்களுக்குள் தாலுகா அலுவலகங்கள், இ-சேவை மையங்களில் மேல்முறையீடு செய்யலாம் எனவும், ஏற்கனவே விண்ணப் பிக்காதர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்தது.

    இந்த நிலையில் ஏராளமான பெண்கள் மானாமதுரை தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அங் குள்ள இ-சேவை மையத் தில் தங்களது மேல்முறையீடு விண்ணப்பங்களை அளித்தனர். அப்போது அலுவலர்கள் அந்த மேல் முறையீடு செய்பவர்களின் விண்ணப்பங்களை பதிவு செய்தபோது அவர்களின் விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வந்தது.

    தொடர்ந்து அவர்களின் மேல்முறையீடு விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியவில்லை. இதனால் இ-சேவை மைய அலுவலர்களும் மேல்முறையீடு செய்ய வந்த பெண்களும் குழப்பம் அடைந்தனர்.

    இதே குழப்பத்தின் காரணமாக இளையான்குடி தாலுகாவிலும் மேல்முறையீடு செய்ய வந்த பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்த பின்னரும் இணையத்தில் பரிசீலனையில் இருப்பதாக தகவல் உள்ளதால் மீண்டும் பரிசீலனை ஏற்கப்பட்டு தங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்குமா? அல்லது கட்டாயம் மீண்டும் மேல்முறையீடு செய்ய வேண்டுமா? என்ற குழப்பத்தில் பெண்கள் தவித்து வருகின்றனர்.

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Swineflu
    சென்னை:

    சென்னையில் டெங்கு, பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 165 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபோல பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கும்மிடிப்பூண்டியை சேர்ந்த குமுதா (23), ராயபுரத்தை சேர்ந்த பூங்காவனம் (26) ஆகியோர் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய தனிமையான வார்டில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அவர்கள் இருவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று மருத்துவமனை டீன் பொன்னப்ப நமச்சிவாயம் தெரிவித்தார்.

    ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் வார்டில் 82 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 10 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்படுவதாக டீன் ஜெயந்தி தெரிவித்தார்.

    எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியிலும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Swineflu
    ×