என் மலர்
நீங்கள் தேடியது "முகக்கவசம்"
- குவாடலஜாரா முழுவதும் உள்ள பள்ளிகளில் முகக்கவசம் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- மெக்சிகோ நாடு முழுவதும் 2,143 தட்டம்மை பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
மெக்சிகோ தட்டம்மை நோய் பரவல் காரணமாக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம், பள்ளிகளில் சுகாதாரப் பரிசோதனைகளை அதிகரித்துள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முகக்கவசம் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாநிலத்தில் கடந்த வாரம் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மெக்சிகோவின் இரண்டாவது பெரிய நகரமான குவாடலஜாரா முழுவதும் உள்ள பள்ளிகளில் முகக்கவசம் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ நாடு முழுவதும் 2,143 தட்டம்மை பாதிப்புகள் பதிவாகி உள்ளன. மேலும் 6,000 பேருக்கு நோய் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுநோய்களில் பாதிக்கும் மேற்பட்டவை ஜலிஸ்கோவில் பதிவாகின. இருப்பினும் இப்போது மெக்சிகோவின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்கு எல்லைகள் வரை நோய் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடுத்த 30 நாட்களுக்கு ஏழு குறிப்பிட்ட சுற்றுப்புறங்களில் உள்ள குவாடலஜாரா பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் என்று ஜலிஸ்கோ சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
- கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
- முற்றிலும் குளிரூட்டப்பட்ட அரங்கு சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. மதுரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அரங்கின் முகப்பு தோற்றம் சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
பொதுக்குழு கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கூட்டம் அலைமோத வாய்ப்புள்ளது.
இந்நிலையில், மதுரையில் நாளை நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் முகக்கவசம் அணிந்துவர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டத்திற்கு வரும் 50 வயது கடந்த மூத்த நிர்வாகிகள் முகக்கவசம் அணியவும், முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது கொரோனா குறித்து அச்சம் தேவையில்லை எனவும் பாதுகாப்பிற்காக முகக்கவசம் அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- கொரோனா பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 60-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே, கொரோனா பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கொரோனா பரவாமல் தடுக்கவும், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- 2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
- எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றனர்.
கோவை,
கடந்த 2020-ம் ஆண்டு பரவத் தொடங்கிய ெகாரோனா தொற்று பரவல் காரணமாக கோவையில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், உருமாறிய ெகாரோனா தொற்று பரவல் குறித்து மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை காரணமாக தொழில் நிறுவனங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன.
இதுகுறித்து கோவை உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் கூறும்போது:-
மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தல்களை தொடர்ந்து முகக்கவசம் அணிந்து பணியாற்றுவது, சமூக இடைவெளி பின்பற்றுதல்,அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தொழிலாளர்கள் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளோம். அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளோம் என்றார்.
குறு, சிறு வார்ப்பட உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறும்போது,
உருமாறிய ெகாரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம். கோவையில் உள்ள வார்ப்பட தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களில் 90 சதவீதத்தினர் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள். பெரும்பாலானவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
முன்பு சிறப்பு முகாம்கள் நடத்தியதை போல பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்துள்ளோம். அலட்சியம் காட்டினால் பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் தொழில் நிறுவனத்தினர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றனர்.
- 3 மாதத்திற்கு அபராதம் இன்றி முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
- முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:
சிவசேனா உத்தவ் பால் தாக்கரே கட்சி மாநில முதன்மை செயலாளர் சுந்தர வடிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் முகக் கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இதனை வரவேற்கிறோம். 3 மாதத்திற்கு அபராதம் இன்றி முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டத்துக்கு அதிகளவில் பக்தர்கள், கூற்றுலுா பயணிகள் வருவர். இவர்களின் நலன் கருதி இலவச மருத்துவ முகாம்கள் கூடுதலாக அமைக்கப்பட வேண்டும்.
குறிப்பாக வேளாங்கண்ணியில் அதிகளவில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சிவசேனா உத்தவ் பால் தாக்கரே கட்சி மாநில முதன்மைச் செயலாளர் சுந்தர வடிவேலன்தலைமையில் நாகை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டு முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் செல்வகுமார் மற்றும் சிவசேனா கட்சி, தமிழ்நாடு சமூக ஆர்வலர்கள் தன்னார்வளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.
- மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தல்
காரைக்கால்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இதேபோல் புதுச்சேரி, காரைக்காலிலும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த மூன்று நாட்களில் 20க்கு மேற்பட்டவருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. காரைக்காலில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், காரைக்கால் மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். மேலும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கொரோனாவுக்கான அறிகுறி இருப்பவர்கள் வெளியே செல்லவேண்டாம்.
- முககவசம் அணிவது கொரோனாவுக்கு மட்டுமின்றி, சுவாசநோய்கள் வராமல் இருப்பதற்கும் பாதுகாப்பானதாக இருக்கும்
சென்னை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலுக்கு கடிவாளம் போடும்வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கொரோனா பரவல் சங்கிலியை உடைத்தெறிய பொதுமக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே கடந்த 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் முககவசம் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் கொரோனா பரவல் எதிரொலியாக முககவசம் அணிவது மேலும் சில இடங்களிலும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அச்சமடையும் வகையில் இல்லை. மிதமான அளவில்தான் இருக்கிறது. தற்போதைய சூழலில் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துவருகிறோம். ஆஸ்பத்திரிகளில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தியேட்டர்கள், குளிர்சாதன வசதி கொண்ட அரங்குகள், மூடப்பட்ட அரங்குகள் உள்பட மக்கள் அதிகமாக கூடும் அரங்குகளில் இருப்பவர்கள் அனைவரும் முககவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை உத்தரவாக பிறப்பிக்காமல் அறிவுறுத்தலாக வழங்கியிருக்கிறோம். ஏனென்றால் மூடப்பட்ட அறைகளில் அதிக நேரம் இருப்பதால் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
கொரோனாவுக்கான அறிகுறி இருப்பவர்கள் வெளியே செல்லவேண்டாம். வெளியே கட்டாயம் செல்லவேண்டும் என்றால் அவசியம் முககவசம் அணிந்து செல்லவேண்டும். மேலும் அறிகுறி இருப்பவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு, உடனடியாக பரிசோதனை செய்யவேண்டும். வயதானவர்கள், இணைநோய் உள்ளவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே அவர்களுக்கு தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அவர்களை வெளியே அழைத்துச் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு முககவசம் அணிந்து அழைத்துச்செல்லவேண்டும். காற்றோட்டத்துடன் திறந்தவெளி அரங்கமாக இல்லாமல் மூடப்பட்ட அறைகளில் இருப்பவர்கள் அனைவரும் முககவசம் அணியவேண்டும். முககவசம் அணிவது கொரோனாவுக்கு மட்டுமின்றி, சுவாசநோய்கள் வராமல் இருப்பதற்கும் பாதுகாப்பானதாக இருக்கும். எனவே முககவசம் அணியவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம்.
- முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
இதுநாள் வரை மாற்றுத்திறனா ளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு தஞ்சை மாவட்டத்தில் 3 இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.
அதன்படி தஞ்சை கோட்டத்தில் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) முகாம் நடைபெறுகிறது.
கும்பகோணம் கோட்டத்தில் கும்பகோணம் கே.எம்.எஸ்.எஸ். வளாகத்தில் வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), பட்டுக்கோட்டை கோட்டத்தில் வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் எதிரில் உள்ள கிராம சேவை கட்டிடத்திலும் நடைபெறுகிறது.
இம்முகாமில் எலும்பு முறிவு டாக்டர், காது மூக்கு தொண்டை பிரிவு டாக்டர், மன நல மருத்துவர் மற்றும் கண் டாக்டர் ஆகிய அரசு டாக்டர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்க உள்ளார்கள்.
மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
எனவே தஞ்சை மாவட்டத்தில் இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.
முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்றவேண்டும்.
தஞ்சை மாவட்டத்தில் மேற்படி தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் உரிய ஆவணங்களுடன் இதுநாள் மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் நேரில் வந்து கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மருத்துவ துறையினர், சுகாதார பணியாளர்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம்.
- நோயின் தீவிரத்தை பொருத்து நோயாளிகளை வகைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.
சென்னை:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பருவகாலத்தில் பரவும் இன்புளூயன்சா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட பொது சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ துறையினர், சுகாதார பணியாளர்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம். பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும். பருவ கால தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நோயின் தீவிரத்தை பொருத்து நோயாளிகளை வகைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோதனை செய்ய வேண்டும்.
- தீவிர பாதிப்புக்கு உள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும்.
சென்னை:
பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அண்மைக் காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
புளு வைரஸ்களால் பரவும் இன்புளுயன்சா காய்ச்சல் தற்போது பரவி வருகிறது. அவை நேரடியாக நுரையீரலைப் பாதிக்கக் கூடியது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோ தனை செய்ய வேண்டும்.
மற்றொருபுறம் மருத்துவா்கள் நோயின் தீவிரத்தைப் பொருத்து சிகிச்சைகளை வழங்குதல் அவசியம். மிதமான பாதிப்புகள் இருந்தால், ஆன்ட்டி வைரல் மருந்துகளோ அல்லது மருத்துவப் பரிசோதனைகளோ தேவையில்லை. ஒரு சில நாள்களுக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதேவேளையில், 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், நாள் பட்ட நுரையீரல் மற்றும் நரம்பு சாா்ந்த பிரச்சினைகளை எதிர் கொள்பவா்கள், கா்ப்பிணிகள், புற்று நோயாளிகள், உடல் பருமன் உள்ளவா்களுக்கு 'ஓசல்டா மிவிா்' எனப்படும் ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும்.
அதேபோன்று தீவிர பாதிப்புக்கு உள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதயத் துடிப்பு, வலிப்பு, சிறுநீா் அளவு குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். 'ஓசல்டாமிவிா்' உள்ளிட்ட மருந்துகளுடன் மருத்துவமனையில் அனுமதித்து அவா்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு தடுப்பூசிகள் வழங்கலாம்.
மருத்துவத்துறையினா், சுகாதாரக் களப்பணியாளா்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம். பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் மூன்று அடுக்கு முகக்கவசங்களை அணிய வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நாள்பட்ட நோய் உள்ளோர் காய்ச்சல், சளி, இருமல், சுவாசிப்பதில் பாதிப்பு இருந்தால் சிகிச்சை பெற வேண்டும்.
- இருமல், சுவாச பாதிப்பு போன்றவை இருந்தால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தல்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பொதுஇடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, தொற்று நோய்களில் இருந்து பாதுகாத்துகொள்ள பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். நாள்பட்ட நோய் உள்ளோர் காய்ச்சல், சளி, இருமல், சுவாசிப்பதில் பாதிப்பு இருந்தால் சிகிச்சை பெற வேண்டும். இருமல், சுவாச பாதிப்பு போன்றவை இருந்தால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
சீனாவின் வடக்கு பகுதியில் குழந்தைகளுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட நுரையீரல் நோய்க்கான அறிகுறிகள் தோன்றி, பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மைக்கோ பிளாஸ்மா நிமோனியாவால் ஏற்படும் நுரையீரல் தொற்று உள்ளவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக தோன்றலாம்.
- குழந்தைகள் பலர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகிறார்கள்.
சென்னை:
பருவமழை காலத்தில் பரவி வரும் வாக்கிங் நிமோனியா காய்ச்சல் மக்கள் மத்தியில் ஒருவிதமான பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த மைக்கோ பிளாஸ்மா நிமோனியாவால் ஏற்படும் நுரையீரல் தொற்று உள்ளவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக தோன்றலாம். லேசான அறிகுறிகளுடன் இருப்பதால் வீட்டிலோ அல்லது படுக்கையிலோ இருக்க மாட்டார்கள். நடமாடி கொண்டிருப்பார்கள். எனவே தான் வாக்கிங் நிமோனியா என்று பெயர் வைத்துள்ளார்கள்.
பொதுவான அறிகுறிகளாக உடல் சோர்வு, காய்ச்சல், தலைவலி, இருமல், தொண்டை வலி இருக்கும். குழந்தைகளை பொறுத்தவரை தும்மல், சுவாசிப்பதில் சிரமம், சளி, கண்களில் நீர்வடிதல் காணப்படும்.
நுரையீரல் தொற்று உள்ளவர்களுக்கு பொதுவாக குளிர், அதிகமான இருமல், சோர்வு காணப்படும். சிலர் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம். இந்த மாதிரி அறிகுறி இருப்பவர்கள் பி.சி.ஆர்., ஆன்டிபாடி பரிசோதனை செய்து கொள்வது அவசியம். தொற்று கண்டறியப்பட்டால் 'அசித்ரோமைசின்' மாத்திரை எடுத்து கொள்கிறார்கள்.
கடுமையான மூச்சு திணறலுடன் பலர் ஆஸ்பத்திரிகளுக்கு வருவதாகவும் அவர்களுக்கு ஆக்சிஜன் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார். குழந்தைகள் பலர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகிறார்கள்.
இந்த தொற்று ஏற்பட்டு இருப்பவர்கள் தும்மும் போதும், இருமும் போதும் வெளிப்படும் கிருமிகளால் மற்றவர்களுக்கும் இந்த தொற்று ஏற்படுகிறது.
நெருக்கமான இடங்களில் செல்பவர்கள், பள்ளி அல்லது கல்லூரி மாணவ-மாணவிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் எளிதில் இந்த தொற்றுக்கு ஆளாகிறார்கள். இந்த தொற்றில் இருந்து தப்பிக்க முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி மட்டுமே தீர்வு என்கிறார்கள்.






