search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கல்
    X

    சிறுமி ஒருவருக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

    பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கல்

    • 3 மாதத்திற்கு அபராதம் இன்றி முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
    • முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    சிவசேனா உத்தவ் பால் தாக்கரே கட்சி மாநில முதன்மை செயலாளர் சுந்தர வடிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் முகக் கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

    இதனை வரவேற்கிறோம். 3 மாதத்திற்கு அபராதம் இன்றி முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

    புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டத்துக்கு அதிகளவில் பக்தர்கள், கூற்றுலுா பயணிகள் வருவர். இவர்களின் நலன் கருதி இலவச மருத்துவ முகாம்கள் கூடுதலாக அமைக்கப்பட வேண்டும்.

    குறிப்பாக வேளாங்கண்ணியில் அதிகளவில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக சிவசேனா உத்தவ் பால் தாக்கரே கட்சி மாநில முதன்மைச் செயலாளர் சுந்தர வடிவேலன்தலைமையில் நாகை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டு முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் செல்வகுமார் மற்றும் சிவசேனா கட்சி, தமிழ்நாடு சமூக ஆர்வலர்கள் தன்னார்வளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×