search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், நாளை மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    தஞ்சையில், நாளை மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்- கலெக்டர் தகவல்

    • 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம்.
    • முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

    இதுநாள் வரை மாற்றுத்திறனா ளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு தஞ்சை மாவட்டத்தில் 3 இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி தஞ்சை கோட்டத்தில் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) முகாம் நடைபெறுகிறது.

    கும்பகோணம் கோட்டத்தில் கும்பகோணம் கே.எம்.எஸ்.எஸ். வளாகத்தில் வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), பட்டுக்கோட்டை கோட்டத்தில் வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் எதிரில் உள்ள கிராம சேவை கட்டிடத்திலும் நடைபெறுகிறது.

    இம்முகாமில் எலும்பு முறிவு டாக்டர், காது மூக்கு தொண்டை பிரிவு டாக்டர், மன நல மருத்துவர் மற்றும் கண் டாக்டர் ஆகிய அரசு டாக்டர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்க உள்ளார்கள்.

    மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

    எனவே தஞ்சை மாவட்டத்தில் இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்றவேண்டும்.

    தஞ்சை மாவட்டத்தில் மேற்படி தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் உரிய ஆவணங்களுடன் இதுநாள் மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் நேரில் வந்து கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×