என் மலர்
நீங்கள் தேடியது "CoronoVirus"
- தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- கொரோனா பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 60-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே, கொரோனா பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கொரோனா பரவாமல் தடுக்கவும், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
- வானதி சீனிவாசனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை, தனியார் மருத்துவமனையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வானதி சீனிவாசனுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கொரோனா உறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.






