என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அதிகரிக்கும் கொரோனா பரவல்: முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
    X

    அதிகரிக்கும் கொரோனா பரவல்: முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

    • தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • கொரோனா பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 60-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இதற்கிடையே, கொரோனா பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

    மேலும், கொரோனா பரவாமல் தடுக்கவும், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×