என் மலர்
நீங்கள் தேடியது "public meetings"
- கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
- முற்றிலும் குளிரூட்டப்பட்ட அரங்கு சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. மதுரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அரங்கின் முகப்பு தோற்றம் சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
பொதுக்குழு கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கூட்டம் அலைமோத வாய்ப்புள்ளது.
இந்நிலையில், மதுரையில் நாளை நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் முகக்கவசம் அணிந்துவர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டத்திற்கு வரும் 50 வயது கடந்த மூத்த நிர்வாகிகள் முகக்கவசம் அணியவும், முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது கொரோனா குறித்து அச்சம் தேவையில்லை எனவும் பாதுகாப்பிற்காக முகக்கவசம் அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடந்தது.
- காளையார்கோவில் தெற்கு ஒன்றியம் சார்பில் மறவமங்கலம் பஸ் நிலையம் முன்பு நடந்தது.
காளையார் கோவில்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மறவமங்கலம் பஸ் நிலையம் முன்பு தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் யோக.கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கென்னடி, ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் வக்கீல் அ.சரவணன் சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள் தோக்கப்பன், செல்லையா, திருநாவுக்கரசு, செல்வி மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அய்யப்பன் வரவேற்றார். மறவமங்கலம் கிளைச் செயலாளர் முகமது சக்கரியா நன்றி கூறினார்.
காளையார்கோவில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கொல்லங்குடியில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.கென்னடி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் யோக.கிருஷ்ணகுமார், ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள் முத்தூர் கருப்பையா, செல்லபாண்டி, கண்ணப்பன், தென்னரசு கண்ணாத்தாள், கண்ணன், அழகப்பன், சந்திரன், நேரு, தமிழ்ச்செல்வன், அசோக், இளைஞரணி சக்திதாசன், தகவல் தொழில் நுட்ப அணி ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.நாட்டரசன்கோட்டை பேரூர் செயலாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.






