search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "masks"

    • ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 85 படுக்கை வசதிகளுடன் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • பொது இடங்களில் செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா முன்னேற்பாடு தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதனை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. தற்போது ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரும் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.

    கொரோனா முன்னேற்பாடு நடவடிக்கை யாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 70 படுக்கை வசதிகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் 15 படுக்கை வசதிகள் என மொத்தம் 85 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

    மேலும் ஆக்சிஜன், மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க மருத்து வர்கள் ஆலோச னையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். குறிப்பாக பொது இடங்களில் செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும். சிறிய வர்கள் முதல் பெரியவர்கள் வரை சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடலில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும் போது எந்த நோயும் அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது.

    இவர் அவர் பேசினார்.

    இந்த ஆய்வின் போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் செந்தில் குமார், மருத்துவமனை கண்காணிப் பாளர்கள் மலர்வண்ணன், மனோஜ்குமார், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திலீப் குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம்.
    • முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

    இதுநாள் வரை மாற்றுத்திறனா ளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு தஞ்சை மாவட்டத்தில் 3 இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி தஞ்சை கோட்டத்தில் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) முகாம் நடைபெறுகிறது.

    கும்பகோணம் கோட்டத்தில் கும்பகோணம் கே.எம்.எஸ்.எஸ். வளாகத்தில் வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), பட்டுக்கோட்டை கோட்டத்தில் வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் எதிரில் உள்ள கிராம சேவை கட்டிடத்திலும் நடைபெறுகிறது.

    இம்முகாமில் எலும்பு முறிவு டாக்டர், காது மூக்கு தொண்டை பிரிவு டாக்டர், மன நல மருத்துவர் மற்றும் கண் டாக்டர் ஆகிய அரசு டாக்டர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்க உள்ளார்கள்.

    மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

    எனவே தஞ்சை மாவட்டத்தில் இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்றவேண்டும்.

    தஞ்சை மாவட்டத்தில் மேற்படி தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் உரிய ஆவணங்களுடன் இதுநாள் மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் நேரில் வந்து கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வருகிறது
    • பரப்பப்பட்டது வதந்தி என்பதை உறுதிசெய்த போலீசார் இத்தகைய விஷமத்தில் ஈடுபட்டவர்களையும் கைது செய்தனர்

    திருப்பூர் : 

    தமிழகத்தில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வருகிறது என எச்சரிக்கை அலர்ட் விடுத்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம், அரசு மருத்துவமனையில் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். திருப்பூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க முக கவசம் அணிவது மட்டுமே சிறந்த தற்காப்பு என்ற என்ற நிலையில், மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளோம். வார்டுகளில் இதுகுறித்த விழிப்புணர்வு வாசகங்களும் எழுதி வைத்துள்ளோம் என்றனர்.இந்தநிலையில் திருப்பூரில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள், தமிழக தொழிலாளர்களால் தாக்கப்படுகின்றனர் என பரவிய வதந்தியால் பதற்றம் ஏற்பட்டது.அதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை. பரப்பப்பட்டது வதந்தி என்பதை உறுதிசெய்த போலீசார் இத்தகைய விஷமத்தில் ஈடுபட்டவர்களையும் கைது செய்தனர். தமிழகம் மட்டுமின்றி, வட மாநிலங்களிலும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் ஹோலி கொண்டாட சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் திருப்பூர் திரும்ப துவங்கினர். தற்போது வருகை அதிகரித்துள்ளது.திருப்பூர் ரெயில் நிலையத்தில் 24 மணி நேரமும், உள்ளூர் மற்றும் உளவுப்பிரிவு போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் 3 ஷிப்ட்களாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.ரெயிலில் வரும் வட மாநில தொழிலாளர்கள், எந்த ஊரில் இருந்து வருகின்றனர் என்பதை உறுதிப்படுத்தி கணக்கெடுக்கின்றனர்.போலீசார் கூறுகையில், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து அதிகளவில் தொழிலாளர்கள் குடும்பத்தோடு திருப்பூர் திரும்ப துவங்கியுள்ளனர். தினமும் 600 முதல் 1,000 தொழிலாளர்கள் வரை வருகின்றனர் என்றனர்.பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து திருப்பூருக்கு தினமும் நூற்றுக்கணக்கில் தொழிலாளர்களும், பொது மக்களும் வரும் நிலையில்,அவர்களில் 90 சதவீதம் பேர் முக கவசம் அணிவதில்லை. ெரயில்வே ஊழியர்களிடம் கேட்ட போது, பயணிகள், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற அறிவுரையை வழங்க தங்களுக்கு எவ்வித உத்தரவும் வரவில்லை என்கின்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 18 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின் றனர் என சுகாதாரத் துறையினர் கணக்கு கூறுகின்றனர். தொற்றுப்பரவல் அதிகரிக்கும் முன் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது அவசியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.அரசு மருத்துவமனை வாசலில் முக கவசம் வியாபாரம் செய்து வரும் வியாபாரி ஒருவர் கூறுகையில், கொரோனா சமயத்தில் அதிகளவில் வியாபாரம் நடந்தது. தினமும், 500 முதல் 600 ரூபாய் வருமானம் கிடைத்தது. தற்போது, அனைத்து கடைகளிலும் முக கவசம் விற்கப்படுவதால், வியாபாரம் மந்தம் தான். தற்போது முக கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் விற்பனை அதிகரிக்கும் என நம்புகிறேன் என்றார்.திருப்பூர் சந்திப்பு சாலையில், சாலையோரம் கடை அமைத்து முக கவசம் விற்று வரும் பெண் வியாபாரி கூறுகையில், கொரோனாவுக்கு முன், மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்தேன். கொரோனா ஊரடங்கில் முக கவசம் விற்பனையில் ஈடுபட்டேன். சிறு குழந்தைகள் துவங்கி மாணவ, மாணவிகள், பெண்கள், ஆண்கள், வயது முதிர்ந்தோர் என அனைவருக்குமான முக கவசம் விற்கிறேன். கடந்த சில மாதங்களாக முக கவசம் விற்பனை மந்தமாகவே உள்ளது என்றார்.  

    ×