search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஆஸ்பத்திரியில் 85 படுக்கை வசதி
    X

    ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த கொரோனா முன்னேற்பாடு ஒத்திகையை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.

    அரசு ஆஸ்பத்திரியில் 85 படுக்கை வசதி

    • ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 85 படுக்கை வசதிகளுடன் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • பொது இடங்களில் செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா முன்னேற்பாடு தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதனை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. தற்போது ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரும் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.

    கொரோனா முன்னேற்பாடு நடவடிக்கை யாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 70 படுக்கை வசதிகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் 15 படுக்கை வசதிகள் என மொத்தம் 85 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

    மேலும் ஆக்சிஜன், மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க மருத்து வர்கள் ஆலோச னையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். குறிப்பாக பொது இடங்களில் செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும். சிறிய வர்கள் முதல் பெரியவர்கள் வரை சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடலில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும் போது எந்த நோயும் அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது.

    இவர் அவர் பேசினார்.

    இந்த ஆய்வின் போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் செந்தில் குமார், மருத்துவமனை கண்காணிப் பாளர்கள் மலர்வண்ணன், மனோஜ்குமார், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திலீப் குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×