என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl harassment"

    • செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018-ம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
    • வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாஷிவந்தை விடுவித்தனர்.

    போரூர் அருகே கடந்த 2017-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன் உடலை எரித்த வழக்கில் தஷ்வந்தை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

    இதனை தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த் தன் தாயை அதே ஆண்டு கொலை செய்து தப்பித்ததாக குற்றம்சாட்டிய போலீசார் மும்பையில் வைத்து தஷ்வந்த்தை கைது செய்தனர்.

    இதையடுத்து சிறுமி கொலை வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018-ம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவ்வழக்கில் இருந்து தஷ்வந்த்தை விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனிடையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

    தொடர்ந்து கடந்த மாதம், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தஷ்வந்த் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென கூறிய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்தும் தஷ்வந்த்தை விடுவித்தும் உத்தரவிட்டது.

    வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் சிறுமி வன்கொடுமை வழக்கில் இருந்து தஷ்வந்த் விடுதலை செய்த தீர்ப்பை று ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

    நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ரத்து செய்து வரை விடுவித்த தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரிய மனுவை, தீர்ப்பு வழங்கிய நீதிபதி விக்ரம்நாத் நாளை மறுநாள் விசாரிக்க உள்ளார். 

    • தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் வலிமையான ஆதாரங்களை காவல்துறை தாக்கல் செய்திருக்க வேண்டும்.
    • குழந்தைகள் தான் வாழும் தெய்வங்கள்.

    சென்னை:

    போரூர் அருகே 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, வழக்கில் இருந்து விடுதலை செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு அன்புமணி கண்டம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் என்ற இளைஞருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மனித மிருகங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத் தருவதில் நாம் எந்த அளவுக்கு வலிமையற்று இருக்கிறோம் என்பதற்கு இந்த வழக்கு வேதனையான எடுத்துக்காட்டு ஆகும்.

    வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன், தடயங்களை அழிக்கும் நோக்குடன் சிறுமியின் உடலையும் எரித்ததாக அதேபகுதியைச் சேர்ந்த தஷ்வந்த் என்ற மென்பொருள் பொறியாளர் கைது செய்யப்பட்டார். அடுத்த சில மாதங்களில் இந்த வழக்கில் பிணையில் வந்த தஷ்வந்த் தமது தாயையும் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் மும்பையில் கைது செய்யப்பட்ட அவருக்கு குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனையும், மொத்தமாக 46 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் செங்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இந்தத் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில் தான் உச்சநீதிமன்றத்தில் தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட காணொலி மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் போதுமானவை அல்ல, டி.என்.ஏ சோதனை முடிவுகள் ஒத்துப்போகவில்லை என்று கூறி அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. தமிழ்நாட்டின் குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள்!

    தாயை கொலை செய்த வழக்கிலும் பிறழ்சாட்சியத்தை பயன்படுத்தி கடந்த மாதம் தஷ்வந்த் விடுதலையான நிலையில், இப்போது இந்த வழக்கிலிருந்தும் விடுதலையாகியுள்ளார். இந்த வழக்கில் தஷ்வந்த் தவறு செய்யவில்லை என்றால் ஹாசினியை கொலை செய்தது யார்? என்ற வினா எழுகிறது. இந்த வழக்கில் தொடக்கத்திலிருந்தே விசாரணை சரியாக நடைபெறவில்லை. 3 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் தஷ்வந்துக்கு பிணை கிடைத்தது. அப்போதிலிருந்தே இந்த வழக்கு தடம் மாறத் தொடங்கி விட்டது.

    தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் வலிமையான ஆதாரங்களை காவல்துறை தாக்கல் செய்திருக்க வேண்டும். டி.என்.ஏ ஆய்வு முடிவுகள் கூட ஒத்துப்போகும் வகையில் இல்லாததால் தான் தண்டிக்கப்பட்ட குற்றவாளி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். குழந்தைகள் தான் வாழும் தெய்வங்கள். அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மனித மிருகத்துக்குக் கூட தண்டனை பெற்றுத்தர முடியவில்லை என்றால் நமது சட்ட செயலாக்க அமைப்பும், வழக்கு நடத்துவதற்கான கட்டமைப்பும் எந்த அளவுக்கு பலவீனமாக உள்ளன என்பதை புரிந்து கொள்ளலாம். இதற்காக அரசும், காவல்துறையும் தலைகுனிய வேண்டும்.

    இனிவரும் காலங்களிலாவது இது போன்ற கொடிய வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மறுஆய்வு மனுவை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

    • மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
    • வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    போரூர் அருகே 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, வழக்கில் இருந்தும் விடுதலை செய்தும் உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன் உடலை எரித்த வழக்கில் தஷ்வந்தை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த் தன் தாயை அதே ஆண்டு கொலை செய்து தப்பித்ததாக குற்றம்சாட்டிய போலீசார் மும்பையில் வைத்து தஷ்வந்த்தை கைது செய்தனர்.

    இதையடுத்து சிறுமி கொலை வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018-ம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவ்வழக்கில் இருந்து தஷ்வந்த்தை விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனிடையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

    இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தஷ்வந்த் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென கூறிய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்தும் தஷ்வந்த்தை விடுவித்தும் உத்தரவிட்டுள்ளது. வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    திருச்சியில் 6 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த சைக்கிள் கடைக்காரருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    திருச்சி:

    திருச்சி பீமநகரை சேர்ந்த 6 வயது சிறுமி ஷெரீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). யு.கே.ஜி. படித்து வந்தாள். அவளது வீட்டின் அருகே திருச்சி கூனிபஜார் கோரி மேடு பகுதியை சேர்ந்த அப்பாஸ் என்கிற முகமது இஸ்லாம் (43) என்பவர் சைக்கிள் கடை நடத்தி வந்தார். பக்கத்து வீடு என்பதால் ஷெரீனாவிடம் அப்பாஸ் நன்றாக பழகி வந்துள்ளார். கடைக்கு அழைத்து சென்று தின்பண்டங்களும் வாங்கி கொடுத்துள்ளார்.

    அப்பாசுக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்கள் உள்ள நிலையில், பெண் குழந்தை இல்லாததால் ஷெரீனாவிடம் மிகவும் பாசமுடன் பழகியுள்ளார். இதனால் அவளது பெற்றோர் அதனை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த 26.11.2017 அன்று ஷெரீ னாவை தனியாக அழைத்து சென்ற அப்பாஸ், அவளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

    இதையடுத்து அழுது கொண்டே வீட்டிற்கு வந்த ஷெரீனாவிடம் அவளது பெற்றோர் கேட்டபோது, நடந்த விவரத்தை கூறவே அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே அப்பாசிடம் சென்று தட்டி கேட்டபோது, நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் ஷெரீனாவை துண்டு துண்டாக வெட்டி கொன்று ஆற்றில் வீசி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து கடந்த 20.2.2018 அன்று திருச்சி கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஷெரீனாவின் தந்தை புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பாசை கைது செய்தனர். வழக்கு விசாரணை திருச்சி மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி மகிளினி முன்னிலையில் நடைபெற்று வந்த விசாரணை முடிவடைந்ததையடுத்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

    அதில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அப்பாசுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் 17 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார்.
    திருவள்ளூர் அருகே இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த பட்டறை கிராமத்தில் சுமார் 17 வயதுடைய இளம்பெண் சுற்றி வந்தார். இதனை நோட்டமிட்ட 3 வாலிபர்கள் அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்தனர்.

    திடீரென அவர்கள் இளம் பெண்ணை ஆட்டோவில் கடத்திச்சென்றனர். பின்னர் அதிகதூர் ஏரிக்கரைக்கு சென்று 3 வாலிபர்களும் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்.

    இதனை கவனித்த அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் கூச்சலிட்ட படி திரண்டு வந்தனர். உடனே 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இளம்பெண் மயக்க நிலையில் கிடந்தார். அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இளம் பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அந்த பெண் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் என்று தெரிகிறது. அவர் எதற்காக இங்கு வந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏகாட்டூர் பகுதியை சேர்ந்த பூபாலன், அதிகதூரை சேர்ந்த முனுசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
    சேலத்தில் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் களரம்பட்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்த முதியவர் சின்னசாமி என்பவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் பெற்றோர் சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், சின்னசாமி மீது புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சின்னசாமியை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் குடிபோதையில் மாணவியிடம் அத்துமீறியது தெரியவந்தது.

    இதையடுத்து சின்னசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
    கோவை சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய தொண்டாமுத்தூரை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #GirlHarassment
    கோவை:

    கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை ஒரு கும்பல் கடத்தி கொலை செய்தது. பிரேத பரிசோதனையில் சிறுமி ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும் மூச்சுத் திணறலால் உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது.

    கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர், பிளஸ்-2 மாணவர், ஆட்டோ டிரைவர் உள்பட பலரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் ஒரு வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அவர் மீது சந்தேகம் வலுக்கவே போலீஸ் அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

    இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.
    பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, துண்டு பிரசுரங்கள் அச்சடித்து வினியோகம் செய்தனர்.

    இந்நிலையில், கோவை சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக, 7 பேரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் அதில் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். #GirlHarassment
    கோவையில் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது. #GirlHarassment
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறயிருப்பதாவது:-

    கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி படுகொலை செய்துள்ள சம்பவம் மிகுந்த மன வேதனையளிக்கிறது. தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான பின்னணியில், அதே மாவட்டத்தில் மேலும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது இப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 25-ந்தேதி காணாமல் போன குழந்தை வீட்டுக்கு அருகிலேயே பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளன.

    சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்துள்ள இந்த கோரச் சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

    குரூரமான இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது, போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #GirlHarassment
    கோவையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. #GirlHarassment
    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி நேற்றுமுன்தினம் மாயமானார்.

    பலஇடங்களில் தேடி பார்த்தும் சிறுமி கிடைக்காததால் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை தேடி வந்தனர்.

    இந்நிலையில் வீட்டருகே நேற்று காலை சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தது. கை, கால்கள் டி-சர்ட்டால் கட்டப்பட்டு இருந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் கொலை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே சிறுமியின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி நுழைவு வாயில் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.

    ஆனால், சிறுமியை கடத்திக் கொலை செய்தவர்களை கைது செய்து உரிய தண்டனை கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று அவர்களது உறவினர்கள் கூறி கலைந்து சென்றனர். இந்நிலையில், கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்று இரவு 7.30 மணி அளவில் பன்னிமடை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கொலையாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம் என போலீசார் உறுதியளித்தனர். இதையேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு மறியலை கைவிட்டனர். எனினும், இன்று காலை வரை கொலையாளிகள் கைது செய்யப்படாததால் சிறுமியின் உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டு துடியலூர் பஸ் நிலைய சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.


    இதற்கிடையே, சிறுமி கொலை வழக்கு துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    மேலும் கொலையாளிகளை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டிய ராஜன் உத்தரவிட்டார். அதன்படி டி.எஸ்.பி. மணி மேற்பார்வையில் 4 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரை கொண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் சிறுமி படித்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் உள்பட பலரிடம் விசாரித்தனர். பஸ் நிலையம் உள்ளிட்ட அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இதுதொடர்பாக சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர்கள் உள்பட 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #GirlHarassment
    சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் விவசாயிக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள பொம்மனப்பாடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 33). விவசாயி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 6-ந் தேதி பொம்மனப்பாடியில் விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமியை காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    மேலும் நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், மீறி சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் சிறுமியை மிரட்டியுள்ளார். இது தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பு அளித்தார். அதில், ராஜாவுக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 5 ஆண்டுகளும், 3 மாதமும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ராஜா திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ராமாபுரத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை கைது செய்த இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.
    போரூர்:

    ராமாபுரம் குப்புசாமி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். அருகில் உள்ள வெல்டிங் கடையில் பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த அக்காள், தங்கையான 2 சிறுமிகள் தங்களது வீட்டின் மொட்டை மாடியில் நின்று விளையாடி கொண்டிருந்தனர்

    அப்போது அங்கு வந்த மணிகண்டன் சிறுமிகளிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

    இது குறித்து சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுபற்றி மணிகண்டனிடம் தட்டிக் கேட்டனர். அவர் சிறுமிகளின் பெற்றோரை தாக்கி மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து சிறுமியின் தந்தை வடபழனி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி வழக்குபதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் மயிலீஸ்(50). இவர் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி, அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். 

    புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குபதிவு செய்து, மயிலீசை கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், குற்றவாளியான மயிலீசுக்கு 5 வருட சிறைத்தண்டனை மற்றும் ரூ. ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜரானார்.
    ×