என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![திருவள்ளூர் அருகே இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை- 2 வாலிபர்கள் கைது திருவள்ளூர் அருகே இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை- 2 வாலிபர்கள் கைது](https://img.maalaimalar.com/Articles/2019/Apr/201904161120552931_Tiruvallur-near-young-woman-harassment-2-youths-arrest_SECVPF.gif)
X
திருவள்ளூர் அருகே இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை- 2 வாலிபர்கள் கைது
By
மாலை மலர்16 April 2019 5:50 AM GMT (Updated: 16 April 2019 5:50 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திருவள்ளூர் அருகே இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த பட்டறை கிராமத்தில் சுமார் 17 வயதுடைய இளம்பெண் சுற்றி வந்தார். இதனை நோட்டமிட்ட 3 வாலிபர்கள் அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்தனர்.
திடீரென அவர்கள் இளம் பெண்ணை ஆட்டோவில் கடத்திச்சென்றனர். பின்னர் அதிகதூர் ஏரிக்கரைக்கு சென்று 3 வாலிபர்களும் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்.
இதனை கவனித்த அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் கூச்சலிட்ட படி திரண்டு வந்தனர். உடனே 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இளம்பெண் மயக்க நிலையில் கிடந்தார். அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இளம் பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த பெண் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் என்று தெரிகிறது. அவர் எதற்காக இங்கு வந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏகாட்டூர் பகுதியை சேர்ந்த பூபாலன், அதிகதூரை சேர்ந்த முனுசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
திருவள்ளூரை அடுத்த பட்டறை கிராமத்தில் சுமார் 17 வயதுடைய இளம்பெண் சுற்றி வந்தார். இதனை நோட்டமிட்ட 3 வாலிபர்கள் அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்தனர்.
திடீரென அவர்கள் இளம் பெண்ணை ஆட்டோவில் கடத்திச்சென்றனர். பின்னர் அதிகதூர் ஏரிக்கரைக்கு சென்று 3 வாலிபர்களும் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்.
இதனை கவனித்த அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் கூச்சலிட்ட படி திரண்டு வந்தனர். உடனே 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இளம்பெண் மயக்க நிலையில் கிடந்தார். அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இளம் பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த பெண் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் என்று தெரிகிறது. அவர் எதற்காக இங்கு வந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏகாட்டூர் பகுதியை சேர்ந்த பூபாலன், அதிகதூரை சேர்ந்த முனுசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)