search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women stir"

    பொன்னமராவதி சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பெண்கள் துடைப்பத்துடன் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
    பரமக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் குறிப்பிட்ட சமுதாய பெண்களை தரக்குறைவாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் அந்த சமுதாய மக்கள் இடையே கொந்தளிப்பு ஏற்பட்டு பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வழிமறிச்சான் கிராம மக்கள் திடீரென பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

    பார்த்திபனூர்–கமுதி செல்லும் சாலையில் 150 பெண்கள் உள்பட 250–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு துடைப்பம், மிதியடிகளுடன் சுமார் 1 மணி நேரமாக பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குறிப்பிட்ட சமுதாய பெண்களை தரக்குறைவாக பேசி சமூக வலைதளங்களில் பகிர்வு செய்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பஸ்கள், லாரிகள் உள்பட ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தன.

    தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பரமக்குடி சங்கர், கமுதி சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
    பு.புளியம்பட்டி அருகே சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள எலங்காட்டு பாளையம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் தண்ணீருக்காக மிகவும் சிரமம்பட்டு வந்ததாக பொதுமக்கள் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று அந்த பகுதியை சேர்ந்த 40 பெண்கள் உள்பட 100-க்கு மேற்பட்ட பொதுமக்கள் புஞ்சை புளியம்பட்டி காவிலிபாளையம் ரோட்டுக்கு வந்தனர். அவர்கள் திடீரென காலி குடங்களுடன் எலங்காட்டு பாளையம் காலனி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, அந்த பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் டேங்க் சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் தற்காலிகமாக தண்ணீர் வழங்க முடியவில்லை. விரைவில் இந்த பணி முடித்து சீரான குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    ×