search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருட்டு வழக்கில் தொடர்புடைய 2 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
    X

    திருட்டு வழக்கில் தொடர்புடைய 2 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

    • திருட்டு வழக்கில் தொடர்புடைய 2 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • மேற்கண்ட தகவலை மதுரை தெற்குவாசல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜக்குபாய் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை கீழவெளி வீதி, சுங்கம் பள்ளி வாசல், பதிமுத்து இல்லத்தை சேர்ந்தவர் அப்துல்ஹமீது. இவரது மகன் சம்சுதீன் (வயது30). இவர் 2003-ம் ஆண்டு கீழவாசல் பஸ் நிறுத்தம் முன்பு 4 ½ பவுன் நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

    அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    மேலும் கோர்ட்டில் ஆஜராகாததால் சம்சுதீனை மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளார். இந்த வழக்கில் வருகிற 12-ந் தேதி சம்சுதீன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    மற்றொரு வழக்கு

    திருப்பூர் முருகப்பாளையபுரம், குமார் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ஸ்டீபன் (37). இவர் 2008-ம் ஆண்டு மதுரை தெற்காவணி மூல வீதி எம்.எஸ். தங்க மாளிகை நகை கடை முன்பு நின்ற இருசக்கர வாகனத்தின் மீது வைத்திருந்த சுமார் 520 கிராம் தங்க நகைகள் கொண்ட பையை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

    அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமைறைவாகி விட்டார்.பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    மேலும் கோர்ட்டில் ஆஜராகாததால் ஸ்டீபனை மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளார். இந்த வழக்கில் வருகிற 12-ந் தேதி ஸ்டீபன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்குவாசல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜக்குபாய் தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×