என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
டிரைவரை வெட்டி கொலை செய்ய முயன்ற 5 பேர் கைது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த வெட்டுவானம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (வயது 38).
இவர், அதே பகுதியில் வழக்கறிஞர் கார்த்தி என்பவரின் கார் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார்.
வெட்டுவானம் அம்பேத்கர் நகரில் இருந்து பள்ளிகொண்டா நோக்கி விஜய் நேற்று காலை காரில் புறப்பட்டார். அப்போது, அவரை வழி மடக்கிய கும்பல் சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பினர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விஜய், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் விஜய்யை கத்தியால் வெட்டியதாக சுதர்சன், பாரத், சரத்குமார், பழனி, ஜெயபிரகாஷ் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறை வாக உள்ள சரண்ராஜ், பன்னீர்செல்வம் அவரது மனைவி வடிவழகி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இருதரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இதில் ஏற்பட்ட தகராறில் பன்னீர் தரப்பினர் வழக்கறிஞர் கார்த்தியின் கார் டிரைவரான விஜய்யை கொலை செய்ய முயன்றுள்ளனர்" என்று போலீசார் தெரிவித்தனர். இது ெதாடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்