என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூட நம்பிக்கை"

    • பிரயாக்ராஜில் உள்ள கரேலியில் பதுங்கி இருந்த சரண்சிங்கை போலீசார் கைது செய்தனர்.
    • எனது குடும்பத்துக்கு யாரோ கெடுதல் செய்து இருப்பதால்தான் இவ்வாறு நடந்துவிட்டது என்று சிலர் கூறினர்.

    உலகம் நாகரிக வளர்ச்சி அடைந்தாலும், மூடநம்பிக்கையில் இருந்து இன்னமும் ஒரு சிலர் விடுபடவே இல்லை என்பதற்கு உதாரணமாக நடந்த இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் காமினி, இவருடைய மகன் பியூஷ் (வயது 17), அங்குள்ள சரஸ்வதி வித்யா மந்திரி பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற பியூஷ் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த காமினி, தனது மகனை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பியூஷை தேடிவந்தனர்.

    இந்தநிலையில் அங்குள்ள ஒரு ஓடையில் துண்டிக்கப்பட்ட தலை கிடப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு சென்று, அந்த தலையை மீட்டனர். பின்னர் அதே ஓடையின் வெவ்வேறு பகுதிகளில் மற்ற உடல் பாகங்கள் தனித்தனியாக கிடந்தன. அவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.

    கைப்பற்றப்பட்ட உடல்பாகங்களையும், காமினி கூறிய அடையாளத்தையும் வைத்து போலீசார் ஒப்பிட்டு பார்த்தபோது, அது மாயமான மாணவர் பியூஷ் என்பதை உறுதி செய்தனர்.

    பின்னர் நடத்திய விசாரணையில், யாரோ ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் துணியால் சுற்றப்பட்ட எதையோ அந்த ஓடையில் வீசிச்சென்றதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அவர்கள் கூறிய அடையாளத்தை வைத்து, அதே பகுதியை சேர்ந்த சரண்சிங் என்பவரை போலீசார் தேடினர். அவருடைய தம்பியின் பேரன்தான் பியூஷ் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    பிரயாக்ராஜில் உள்ள கரேலியில் பதுங்கி இருந்த சரண்சிங்கை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் தனது தம்பியின் பேரனை கொன்றதை ஒத்துக்கொண்டார்.

    பின்னர் போலீசாரிடம் அவர் கூறியதாவது:-

    என்னுடைய மகன் கடந்த 2023-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு அடுத்த ஆண்டு என்னுடைய மகளும் தற்கொலை செய்து கொண்டனர்.

    எனது குடும்பத்துக்கு யாரோ கெடுதல் செய்து இருப்பதால்தான் இவ்வாறு நடந்துவிட்டது என்று சிலர் கூறினர். இதனால் அதனை சரிசெய்ய உள்ளூரில் இருக்கும் மந்திரவாதி ஒருவரை சந்தித்தேன். அவர் உனது தம்பியின் பேரனால்தான் உனக்கு இந்த துன்பம் நேர்ந்துள்ளது. அவனை கொன்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றார்.

    அவரது ஆலோசனைப்படி பியூசை நரபலி கொடுக்க முடிவு செய்தேன். இதையடுத்து பியூசை கடத்தி, அவனது தலையை துண்டித்து கொன்றேன். பின்னர் உடல் பாகங்களையும் துண்டு, துண்டாக வெட்டி ஓடையில் வீசினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து சரண்சிங்கை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நரபலி சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெற்றோர் எனக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர்
    • ஷாரோன்ராஜ் என் நெற்றியில் குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

    திருவனந்தபுரம்:

    குமரி மாவட்ட எல்லையான பாறசாலை முறியன் கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23). இவர் குமரிமாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று காதலை வளர்த்தனர். இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி ஷாரோன்ராஜ், நண்பர் ஒருவருடன் காதலி வீட்டுக்கு சென்றார்.

    அங்கிருந்து திரும்பி வந்தவர், வயிறு வலிப்பதாக நண்பரிடம் கூறியுள்ளார். உடனே அவர் பாறசாலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஷாரோன்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி ஷாரோன் ராஜின் பெற்றோர் பாறசாலை போலீசில் புகார் கொடுத்தனர். அதில் தனது மகன் ஷாரோன்ராஜை அவரது காதலி குடும்பத்தினர் திட்டமிட்டு கொன்று விட்டதாக கூறியிருந்தனர்.

    மேலும் ஷாரோ ன்ராஜின் காதலிக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும், அவருக்கு திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்து விடுவார் என ஜாதகத்தில் கூறப்பட்டதால், தனது மகனை திட்டமிட்டு கொன்றுவிட்டு, கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவரை திருமணம் செய்து கொடுக்க நிச்சயம் செய்து இருப்பதாகவும் கூறினார்.

    இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து போலீஸ் ஏடிஜிபி அஜித் குமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அவர்கள் ஷாரோன்ராஜின் காதலி கிரீஸ்மாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் காதலன் ஷாரோன்ராஜூக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். காதலனை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி போலீசாரிடம் அவர் கூறியதாவது:-

    ஷாரோன் ராஜூம் நானும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தோம். அடிக்கடி இருவரும் வெளியூர்களுக்கு சென்று வந்தோம். ஷாரோன் ராஜ் என்னை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார்.

    இதையடுத்து அவரை நான் அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்து சென்றேன். அங்கு அவர் என் நெற்றியில் குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

    இதற்கிடையே பெற்றோர் எனக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். இதனை நான் ஷாரோன் ராஜிடம் தெரிவித்தேன். மேலும் என்னை மறந்து விடும்படியும் கூறினேன்.

    ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்தார். இதனால் நான் அவரை வீட்டுக்கு அழைத்து குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபற்றி போலீஸ் ஏ.டி.ஜி.பி. அஜித்குமார் கூறும்போது, ஷாரோன் ராஜின் தந்தை மூடநம்பிக்கை காரணமாக தனது மகனை கொன்றுவிட்டதாக கூறியுள்ளார்.

    அதாவது கிரீஷ்மாவுக்கு திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்து விடுவார் என ஜாதகத்தில் கூறியிருப்பதாகவும், அதற்காக அவருக்கு இன்னொருவருடன் திருமண ஏற்பாடு செய்து விட்டு தனது மகனை கிரீஷ்மாவின் குடும்பத்தினர் திட்டமிட்டு கொன்று விட்டதாகவும் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பற்றியும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம், என்றார்.

    கேரளாவில் ஏற்கனவே 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் இப்போது மூடநம்பிக்கை காரணமாக வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மூட நம்பிக்கையால் இது போன்ற சம்பவங்கள் கூட்டுக் கரீம் நகர் மாவட்டத்தில் அரங்கேரி வருவதாக பகுதி மக்கள் தெரிவித்தனர்
    • எலும்புகளை திருடி செல்லும் சம்பவம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம் சுல்தானாபாத்தில் சுடுகாடு உள்ளது. இங்கு எரிக்கப்படும் பிணங்களில் இருந்து மண்டை ஓடு,எலும்புகளை சிலர் திருடி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆனால் பிணங்களை எரிக்கும் உறவினர்கள் அவர்களது அஸ்தியை கரைப்பதற்காக மீண்டும் சுடுகாட்டிற்கு வந்து பார்க்கும் போது எலும்புகள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை 2 வாலிபர்கள் பைக்கில் சுடுகாட்டிற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த பையில் சுடுகாட்டில் எரிக்கப்பட்ட பிணங்களில் இருந்து எலும்புகளை சேகரித்து பைகளில் எடுத்துச் செல்ல முயன்றனர். அப்பகுதியில் இருந்த மக்கள் இதனைக் கண்டு வாலிபர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராஜ்குமார் வினோத்குமார் என தெரிய வந்தது.

    அதேபோல் நேற்று முன்தினம் 2 பெண்கள் சுடுகாட்டில் இருந்த எலும்புகளை சேகரித்து எடுத்துச் செல்ல முயன்றனர் இதனைக் கண்ட நகராட்சி ஊழியர்கள் 2 பெண்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிபட்ட 4 பேரிடமும் எலும்புகளை எதற்காக தேடி செல்கிறார்கள்.

    மாய மந்திரம் மாந்திரீகம் செய்ய திருடி செல்கிறார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மூட நம்பிக்கையால் இது போன்ற சம்பவங்கள் கூட்டுக் கரீம் நகர் மாவட்டத்தில் அரங்கேரி வருவதாக பகுதி மக்கள் தெரிவித்தனர்

    வழிபாடு, மாய மந்திரம், பில்லி சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளை பார்த்து கேட்டு இருக்கிறோம். ஆனால் எரிக்கப்பட்ட பிண்ங்களிலிருந்து மண்டை ஓடு, எலும்புகளை திருடி செல்லும் சம்பவம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×