search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மன்புரம் மூதாட்டி கொலையில் ஒரு வருடத்திற்கு பின் பேரன் கைது
    X

    அம்மன்புரம் மூதாட்டி கொலையில் ஒரு வருடத்திற்கு பின் பேரன் கைது

    • நாகூராள் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளதை கண்டு பழனிச்சாமி அதிர்ச்சியடைந்தார்.
    • ராஜா, நகைக்காக நாகூராளை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

    குரும்பூர்:

    தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள அம்மன்புரம் திருவள்ளூவர் மேலத்தெருவை சேர்ந்தவர் காசி என்ற பெருமாள். இவரது மனைவி நாகூராள் (வயது85). இவர்களது ஒரே மகள் இசக்கியம்மாளை உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அவருக்கு ராஜா (35), பழனிச்சாமி (31) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    காசி கடந்த 15 வருடங்களுக்கு முன் இறந்ததால் நாகூராள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு அவரது பேரன்கள் தினமும் சாப்பாடு கொண்டு வருவது வழக்கம். இதேபோல் கடந்த ஆண்டு ஜனவரி 7-ந்தேதி காலை பழனிச்சாமி, பாட்டி நாகூராளுக்கு சாப்பாடு கொண்டு வந்துள்ளார்.

    அப்போது அவரது வீட்டின் கதவு உள்ளே பூட்டாமல் இருந்தது. பாட்டி நாகூராளை அழைத்தும் அவர் வெளியே வராததால் பழனிச்சாமி கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது பாட்டி நாகூராள் பற்கள் உடைந்த நிலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினும் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவரது மகள் இசக்கியம்மாள் குரும்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். ஒரு வருடமாகியும் இந்த கொலை வழக்கில் குற்றவாளி சிக்காமல் இருந்துள்ளார்.

    இந்நிலையில் இந்த கொலை வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று எஸ்.பி. பாலாஜி சரவணன் தனிப்படையினருக்கு உத்தர விட்டார். இதனைத்தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட தனிப்படையினர் மூத்த பேரன் ராஜாவை நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் நகைக்காக பாட்டி நாகூராளை கொலை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் ராஜாவை கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×