என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடை உரிமையாளர்"

    • சுலோச்சனா பாய் உயிரிழப்புக்கு சில மாதங்கள் முன்பாகவே கடை நிர்வாகத்தை அவரது அண்ணன் மகள் கவிதா எடுத்து நடத்தி வந்தார்.
    • நயன் சிங், கவிதா உள்ளிட்டோர் ஊதியம் பெறும் பணியாளர்களாகவே கடையில் பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர் ரத வீதியில் கடந்த 125 ஆண்டுகளுக்கு முன்பாக ராஜஸ்தானை சேர்ந்த ராம் சிங் தனது மகன்களுடன் இணைந்து இருட்டுக்கடையை தொடங்கினார்.

    ராம் சிங்கிற்கு 4 மகன்கள் இருந்த நிலையில் 3-வது மகனான கிருஷ்ணசிங் கடையை தனது தந்தையோடு இணைந்து நடத்தி வந்தார். இவரது மறைவிற்கு பிறகு கிருஷ்ணசிங்கின் மகன் பிஜிலி சிங் தனது மனைவி சுலோசனா பாய் உடன் இணைந்து கடையை நிர்வகித்து வந்தார். பிஜிலி சிங் 2000-ம் ஆண்டு உயிர் இழந்த நிலையில் அவரது மனைவி சுலோச்சனா பாய் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். அதுவரை இருட்டுக்கடையில் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை. ஒருவர் மீது ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதிலும் வெளிப்படையாக பிரச்சினை விவாதிக்கப்படவில்லை.

    சுலோச்சனா பாய் உயிரிழப்புக்கு சில மாதங்கள் முன்பாகவே கடை நிர்வாகத்தை அவரது அண்ணன் மகள் கவிதா எடுத்து நடத்தி வந்தார். தற்போது வரை இருட்டுக்கடை கவிதாவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அவரது மகள் திருமணத்திற்கு பிறகு கணவர் குடும்பத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து மகள் தனது தாய் (கவிதா) வீட்டில் வாழ்கிறார்.

    இந்த நிலையில் கவிதாவின் மருமகன் குடும்பத்தினர் கடையை தங்களுக்கு வரதட்சணையாக கேட்டதாக கூறப்பட்டதில் இருந்து முதன்முதலாக இப்பிரச்சனை வெளியே வந்தது.

    இதனிடைய கவிதாவின் சகோதரர் நயன் சிங் கடையில் தனக்கே உரிமை உள்ளது என பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதற்கு கவிதாவின் தரப்பு மறுப்பு அறிவிப்பை வெளியிட்டது. பிஜிலி சிங் - சுலோசனா பாய் தம்பதிகளுக்கு நேரடி வாரிசு இல்லாத நிலையில் சுலோச்சனா பாயின் சகோதரர் குழந்தைகளான கவிதா மற்றும் நயன் சிங் சொத்துக்காக மோதிக் கொள்ளும் நிலையில் தற்போது புதிதாக ஒருவர் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ஆரம்ப காலகட்டத்தில் கடையை நிர்வகித்து வந்த கிருஷ்ணசிங்கின் மூத்த சகோதரர் உதய் சிங். இவரது மகன் வழிப்பேரனான பிரேம் ஆனந்த் சிங் தற்போது சென்னையில் வசிக்கும் நிலையில் அவர் ஆண் வாரிசான தனக்கே கடை உரிமை உள்ளது என்ற அடிப்படையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    கிருஷ்ணசிங்கின் அண்ணன் பேரன் என்ற அடிப்படையில் உரிமை கோரும் அவர் நயன் சிங், கவிதா உள்ளிட்டோர் ஊதியம் பெறும் பணியாளர்களாகவே கடையில் பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளார்.

    சட்டப்பூர்வமாக கடையை கைப்பற்றுவேன் என்றும் இது தொடர்பாக கடந்த 2023-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், வழக்கு தற்போது விசாரணையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    சிறப்பு வாய்ந்த இருட்டுக்கடைக்கு ஏற்கனவே இருவர் உரிமை கொண்டாடும் நிலையில் 3-வது நபராக ஒருவர் தற்போது உரிமை கோரியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கூட்டப்புளி கிழங்குவிளையைச் சேர்ந்தவர் பிஜு (வயது 38) இவர் படந்தாலுமூட்டில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.

    இங்கு திருமணமான 20 வயது இளம்பெண் வேலை செய்து வந்துள்ளார். அவரை மிரட்டி அருகே நின்று, பிஜு போட்டோ எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கர்ப்ப மாக இருந்ததால், இளம் பெண் பணிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த பிஜு, இளம்பெண்ணுடன் தான் இருக்குமாறு எடுத்த போட்டோக்களை அவரது கணவர் மொபைல் போனுக்கு அனுப்ப போவ தாக மிரட்டி உள்ளார். மேலும் மற்றொரு மொபைல் போனிலிருந்து அந்தப் போட்டோக்களை பெண்ணின் கணவருக்கு அனுப்பி உள்ளார். இதனால் பெண்ணுக்கும் கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாயார் வீட்டுக்கு வந்த பெண் எறும்பு பொடி(விஷம்) யை தண்ணீரில் கலக்கி குடித்து உள்ளார்.

    இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து களியக்கா விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கு மார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து பிஜூவை தேடி வருகின்றனர்.

    • தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட மஞ்சள் சாணி பவுடர் அருந்தி அதிகமானோர் தற்கொலை செய்கின்றனர்
    • போலீசார் கடை உரிமையாளரான மாரிமுத்து என்பவரை கைது செய்தனர்.

    சூலூர்:

    சூலூர் அருகே சுல்தான்பேட்டையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட மஞ்சள் சாணி பவுடர் அருந்தி அதிகமானோர் தற்கொலை செய்கின்றனர் எனவும், இதற்கு முக்கிய காரணம் அப்பகுதியில் தங்குதடையின்றி சாணி பவுடர் கிடைப்பது தான் எனவும் புகார்கள் வந்தன.

    இதனையடுத்து நேற்று சாணி பவுடர் விற்கும் கடைகளில் சுல்தான்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது சுல்தான்பேட்டை பஸ் நிலையம் அருகே உள்ள மளிகைக் கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மஞ்சள் சாணி பவுடர் இருப்பது தெரியவந்தது.

    அதனை கைப்பற்றிய போலீசார் கடை உரிமையாளரான மாரிமுத்து என்பவரை கைது செய்து கடையில் இருந்த 10 பாக்கெட் பவுடரை பறிமுதல் செய்தனர்.

    ×