என் மலர்
நீங்கள் தேடியது "நினைவு நாணயம்"
- எப்போதெல்லாம் நயினார் நாகேந்திரன் பெயர் கூறப்படுகிறதோ உங்களிடத்தில் உற்சாகம் பொங்குவதை காண்கிறேன்.
- பெருவுடையாரை வழிபடும் பெரும் பேறு எனக்கு கிடைத்துள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர் மாமன்னன் ராஜேந்திர சோழன். இவரது பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு விழா ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா, தெற்காசியா நாடுகள் மீது படையெடுத்த ஆயிரமாவது ஆண்டு விழா, பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணிகள் தொடக்க ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 23-ந் தேதி தமிழக அரசு சார்பில் விழா தொடங்கப்பட்டது.
மத்திய அரசின் தொல்லியல்துறை, கலாச்சாரத்துறை சார்பில் கடந்த 5 நாட்களாக விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. இதன் நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
பின்னர் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றார். கோவிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலின் முக மண்டபம், அர்த்த மண்டபம், முன்மண்டபத்தை பார்வையிட்டார்.
பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து கொண்டுவந்த கங்கை நீரால் பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கோவிலின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த சைவ சித்தாந்தம் மற்றும் சோழர் கால கோவில்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இதையடுத்து விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடியை சைவ சித்தாந்த மடங்களைச் சேர்ந்த 25 ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் வரவேற்றனர். தொடர்ந்து 40 ஓதுவார்கள் பிரதமர் முன்னிலையில் தேவாரப்பாடலை பாடினர்.
பாராயணம் ஓதும் நிகழ்வில் கரங்களை கூப்பியபடி பிரதமர் மோடி கேட்டார்.
பின்னர் இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை பிரதமர் மோடி ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார். இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான ஓம் சிவோகம் பாடல் இசைக்கப்பட்டது.
ஓம் சிவோகம் பாடல் முடிந்தவுடன் இருக்கையில் இருந்து எழுந்துநின்று கைதட்டி இளையராஜா உள்ளிட்ட குழுவினரை வாழ்த்தினார்.
சிவபுராணத்தின் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்ற சிவபெருமான போற்றி பாடலை இசைஞானி இளையராஜா பாடினார்.
இதையடுத்து முப்பெரும் விழா தொடங்கியது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உரையாற்றினார்.
இதன் பின்னர் ராஜேந்திர சோழன் திருவுருவம் பொறித்த நாணயத்தையும், திருவாசகம் உரைநடை நூலையும் பிரதமர் மோடி வெளியிட்டார். சாகித்ய அகாடமியின் திருமுறை இசை புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி உள்ள பகவத் கீதையின் தமிழ் பாடல்கள் அடங்கிய தொகுப்பையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
இதையடுத்து பிரதமர் மோடி உரையாற்றினார். விழாவில் 'வணக்கம் சோழ மண்டலம்' எனக்கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
* 'நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க' என்ற வாசகத்தை கூறி வணங்கி உரையை தொடங்குகிறேன்.
* எப்போதெல்லாம் நயினார் நாகேந்திரன் பெயர் கூறப்படுகிறதோ உங்களிடத்தில் உற்சாகம் பொங்குவதை காண்கிறேன்.
* சிவபக்தி பாடல்களை கேட்டபோது எனக்கு உள்ளுக்குள்ளே பரவசமாக இருந்தது.
* இந்த ஆன்மிக அனுபவம் என் ஆன்மாவை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டது.
* பெருவுடையாரை வழிபடும் பெரும் பேறு எனக்கு கிடைத்துள்ளது.
* 140 கோடி மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்தேன். நாட்டின் நிரந்தர வளர்ச்சிக்காகவும் பிரார்த்தனை செய்தேன்.
* இங்கு ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியை கண்டபோது எனக்கு பெருமிதமாக இருந்தது.
* தமிழ் மொழியில் பகவத் கீதை இசை தொகுப்பை வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
* சிவனை வழிபாடு செய்பவன் சிவபெருமானில் கலந்து விடுகிறான் என நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன.
* சிவனை வழிபடுபவன் அவரை போலவே அழிவற்றவனாகி விடுகிறான் என கூறப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாராயணம் ஓதும் நிகழ்வில் கரங்களை கூப்பியபடி பிரதமர் மோடி கேட்டார்.
- இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான ஓம் சிவோகம் பாடல் இசைக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர் மாமன்னன் ராஜேந்திர சோழன். இவரது பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு விழா ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா, தெற்காசியா நாடுகள் மீது படையெடுத்த ஆயிரமாவது ஆண்டு விழா, பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணிகள் தொடக்க ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 23-ந் தேதி தமிழக அரசு சார்பில் விழா தொடங்கப்பட்டது.
மத்திய அரசின் தொல்லியல்துறை, கலாச்சாரத்துறை சார்பில் கடந்த 5 நாட்களாக விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. இதன் நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
பின்னர் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றார். கோவிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலின் முக மண்டபம், அர்த்த மண்டபம், முன்மண்டபத்தை பார்வையிட்டார்.
கோவில் மகா மண்டபத்தில் உள்ள தாமரை வடிவிலான நவக்கிரகம் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த சிற்பங்களையும், கோவிலில் வெளிப்புறத்தில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்களையும், ராஜேந்திர சோழனின் செப்பேடு பிரதிகளையும் அவர் பார்வையிட்டார்.
பின்னர் மூலவர் சன்னதிக்கு சென்ற அவர் பெருவுடையாரை தரிசனம் செய்தார்.
அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து கொண்டுவந்த கங்கை நீரால் பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் கோவிலின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த சைவ சித்தாந்தம் மற்றும் சோழர் கால கோவில்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இதையடுத்து விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடியை சைவ சித்தாந்த மடங்களைச் சேர்ந்த 25 ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் வரவேற்றனர். தொடர்ந்து 40 ஓதுவார்கள் பிரதமர் முன்னிலையில் தேவாரப்பாடலை பாடினர்.
பாராயணம் ஓதும் நிகழ்வில் கரங்களை கூப்பியபடி பிரதமர் மோடி கேட்டார்.
பின்னர் இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை பிரதமர் மோடி ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார்.
இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான ஓம் சிவோகம் பாடல் இசைக்கப்பட்டது.
ஓம் சிவோகம் பாடல் முடிந்தவுடன் இருக்கையில் இருந்து எழுந்துநின்று கைதட்டி இளையராஜா உள்ளிட்ட குழுவினரை வாழ்த்தினார்.
சிவபுராணத்தின் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்ற சிவபெருமான போற்றி பாடலை இசைஞானி இளையராஜா பாடினார்.
இதையடுத்து முப்பெரும் விழா தொடங்கியது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உரையாற்றினார்.
இதன் பின்னர் ராஜேந்திர சோழன் திருவுருவம் பொறித்த நாணயத்தையும், திருவாசகம் உரைநடை நூலையும் பிரதமர் மோடி வெளியிட்டார். சாகித்ய அகாடமியின் திருமுறை இசை புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.
இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி உள்ள பகவத் கீதையின் தமிழ் பாடல்கள் அடங்கிய தொகுப்பையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
- ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
- அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் வகையில் சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட உள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலை ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ உலக பிரதான பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.
இங்கு ஆண்டுதோறும் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு ஆடி மாத திருவாதிரை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு ஆடி திருவாதிரை விழா வருகிற 23ம் தேதி தொடங்கி ஒரு வாரம் நடைபெறுகிறது.
இதில் வருகிற 27-ந் தேதி நடைபெறும் விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அங்கே சுமார் 3 மணி நேரம் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறார். இந்த விழாவானது ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை அவர் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்து சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழாவாக நடைபெற உள்ளது.
விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். மேலும் தொல்லியல் துறை சார்பில் அங்கு அமைக்கப்பட உள்ள புகைப்பட கண்காட்சியை பார்வையிடுகிறார். அதன் பின்னர் இசை அமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை பிரதமர் மோடி கண்டுக்களிக்கிறார்.
இளையராஜா, சமீபத்தில் லண்டனுக்கு சென்று திருவாசகம் சிம்பொனி இசை அமைத்து சாதனை நிகழ்த்தினார். அந்த திருவாசகம் சிம்பொனி இசையை கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜா நடத்துகிறார். இந்த இசையை பிரதமர் மோடி 20 நிமிடங்கள் அமர்ந்திருந்து கேட்டு ரசிக்கிறார். மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யட்டுள்ளது கோவிலுக்குள் அவர் நுழையும்போது 50 ஓதுவார்கள் மூலம் திருவாசகம் படிப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த விழாவில் தமிழகத்தில் உள்ள 38 ஆதீனங்கள் பங்கேற்க உள்ளனர். தற்போது கோவில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டு பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.
விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பத்தாயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் வகையில் சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட உள்ளது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு புறப்பட்டு செல்கிறார். இதற்காக கோவில் அருகாமையில் ஹெலிபேட் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
விழாவின் தொடக்க நாளான 23-ந் தேதி முதலமைச்சர் மு. க ஸ்டாலின் கலந்து கொள்வதாக கூறப்பட்டது. ஆனால் அவரது வருகை உறுதிப்படுத்தப்படவில்லை. இதில் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரம் விழா கோலம் பூண்டு வருகிறது.
- பிரதமர் மோடி தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் வந்து சில நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஆளும் தி.மு.க. அரசின் கூட்டணி எந்தவித மாற்றமும் இன்றி நிலைத்து வருகிறது.
அதேநேரம், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என்று மத்திய மந்திரி அமித்ஷாவும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உறுதிபட தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சூழலில், தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மாவட்டங்கள்தோறும் சென்று மக்களை சந்தித்து வருகிறார். அதேபோல், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்று, தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியும் தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் வந்து சில நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார். அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் வருகிற 27-ந் தேதி ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, ஆடித் திருவாதிரை விழாவாக கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. கண்காட்சி நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இதுகுறித்து பா.ஜ.க. வட்டாரங்கள் கூறுகையில், 'கேரளாவில் வருகிற 26-ந் தேதி நடைபெறும் அரசு விழாவில் அவர் பங்கேற்றுவிட்டு, பின்னர் அங்கிருந்து தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை தருகிறார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் 27-ந் தேதி நடைபெறும் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவான, ஆடி திருவாதிரை விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த விழாவானது, ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா ஆகியவற்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக இந்த விழா நடைபெற இருக்கிறது. விழாவில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
மேலும், இந்த விழாவில், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. மேலும், பல்வேறு தலைவர்களும் இந்த விழாவில் பங்கேற்க இருக்கிறார்கள். பிரதமர் மோடி வருகையையொட்டி, அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்று தெரிவித்தன.
இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரியலூரில் நடைபெறும் விழாவில் பங்கேற்றுவிட்டு, தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. மறுநாள் (28-ந் தேதி) தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள பெருவுடையார் கோவில், மாமன்னர் ராஜேந்திர சோழனால் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும்.
- பிரதமர் மோடி வருகிற 27, 28-ந்தேதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார்.
அரியலூர்:
பிரதமர் மோடி வருகிற 27, 28-ந்தேதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார். அரியலூர், பெரம்பலூர், தஞ்சை மாவட்டங்களில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள பெருவுடையார் கோவில், மாமன்னர் ராஜேந்திர சோழனால் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்தக் கோவிலில், ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரை நாளை, அரசு விழாவாக தமிழக அரசு 2023-ம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது. அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டு இந்த விழாவை மத்திய கலாசாரத் துறை சார்பில் 5 நாட்கள் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான வருகிற 23-ந் தேதி மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விழாவை தொடங்கி வைக்கிறார். நிறைவு நாளான வருகிற 27-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி விழாவில் பங்கேற்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அன்றைய தினம் நடைபெறும் திருவாசகம் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் திருக்கோவில் வடிவம் பொறிக்கப்பட்ட நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.
- நினைவு நாணயம் பொதுப்புழக்கத்தில் விடப்படுமா? அல்லது தனிப்பட்ட பயன்பாட்டுக்கா? என்பது இன்னும் தெரியவில்லை.
- நினைவு நாணயத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான மறைந்த கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை யொட்டி, நினைவு நாணயம் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பான கோரிக்கையை மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து ஒப்புதல் அளிக்கிறது. பிறகு இந்திய ரிசர்வ் வங்கி அந்த நாணயத்தை அச்சிடுகிறது.
இந்நிலையில் ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி தமிழக அரசு விடுத்த கோரிக்கைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. நாணயத்தை வடிவமைக்கும் பணி தற்போது நிதி அமைச்சகத்தால் நடைபெற்று வருகிறது.
நாணயத்தின் ஒருபுறத்தில் கருணாநிதியின் சிரித்த முகத்துடன், 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு 1924-2024' என ஆங்கிலத்திலும் இந்தியிலும் உள்ளது. மறுபுறத்தில் தேசிய நினைவுச் சின்னத்துடன் ரூ.100 என மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியா என ஆங்கிலத்திலும், பாரத் என இந்தியிலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த உத்தேச வடிவத்தில் தேவைப்படும் மாற்றங்களை மத்திய நிதியமைச்சகமே செய்யும். இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, நினைவு நாணயத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர் பார்க்கப்படுகிறது. நினைவு நாணயம் பொதுப்புழக்கத்தில் விடப்படுமா? அல்லது தனிப்பட்ட பயன்பாட்டுக்கா? என்பது இன்னும் தெரியவில்லை.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இது போன்று நினைவு நாணயம் வெளியிடப்படுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு முன்னாள் முதல்வர்களான கே.காமராஜ், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. மேலும் கர்நாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி, முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் நினைவு நாணயம் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் நினைவு நாணயம் வெளியிடும் முறை கடந்த 1964-ல் தொடங்கியது. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்காக முதல் நினைவு நாணயம் வெளியானது. இதைத் தொடர்ந்து முக்கியத் தலைவர்களுக்கு மட்டுமின்றி முக்கிய நிகழ்வுகளுக்கும் நினைவு நாணயம் வெளியானது. இவற்றில் சில பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டு உள்ளன. பல நாணயங்கள் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு என்றானது.
தனிப்பட்ட பயன்பாட்டுக் கான நினைவு நாணயங்கள் அவை வெளியிடப்படும் மதிப்பை விட அதிகம். இவை ஒரு காசு முதல் ரூ.1,000 வரையிலான மதிப்பில் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு நினைவு நாணயமும் குறிப்பிட்ட அளவு, எடை, உலோகம், காசின் மதிப்பு, உருவம் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த நினைவுக் காசுக்கான தொகையை அச்சிடக் கோருவோர் செலுத்த வேண்டும்.
- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையொப்பம் இட்டுள்ளார்.
- மத்திய அரசிடம் மாதிரி வடிவத்தை தமிழக அரசு வழங்கி உள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான திமுகவின் தலைவருக்காக 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி' என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு விரும்பியது.
இதற்காக, ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் கடந்த வருடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நாணயத்தை கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளில் கடந்த ஜூன் 3-ல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போனது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாணயத்திற்கான அனுமதி கோப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையொப்பம் இட்டதாக தகவல் வெளியானது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதலமைச்சர் 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி' என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
ஆங்கிலம் மற்றும் இந்தியில் அவரின் பெயருடன் 'தமிழ் வெல்லும்' என்ற வாசகம் இந்த நாணயத்தில் இடம் பெற உள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் மத்திய அரசின் அரசிதழில் வெளியாக உள்ளதாகவும், இதற்கான மாதிரி வடிவத்தை தமிழக அரசு வழங்கி உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டையொட்டி 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிடுவதற்கான அரசாணை மத்திய அரசின் அரசிதழில் வெளியானது.
நாணையத்தின் ஒரு புறம் 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு 1924 – 2024' என அச்சிடப்பட்டும். மறுபுறத்தில் தேசிய நினைவுச் சின்னத்துடன் ரூ.100 என நாணயத்தின் மதிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி’ என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கியது.
- 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிடுவதற்கான அரசாணை மத்திய அரசின் அரசிதழில் வெளியானது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக தயாரிக்கப்பட்ட ரூ.100 மதிப்பிலான நாணயத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
மறைந்த தலைவர் கலைஞர் பெயரில், 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி' என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு விரும்பியது. இதற்காக, ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி' என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கியது.
தொடர்ந்து, 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிடுவதற்கான அரசாணை மத்திய அரசின் அரசிதழில் வெளியானது.
இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஆகஸ்டு மாதம் 18ம் தேதி மாலை கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். விழாவுக்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாணயத்தை பெற்றுக் கொண்டார்.
அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களும் விழாவில் பங்கேற்றனர். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.






