search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Instagram love"

    • இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
    • விசாரணையில் சிறுவன் புதுக்கோட்டையை சேர்ந்தவன் என்பதும் சிறுமி கடலூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் திருப்பூர் வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பஸ் நிலையத்தில் 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் மற்றும் 14 வயதுடைய ஒரு சிறுமியும் எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர்.

    சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுவன் புதுக்கோட்டையை சேர்ந்தவன் என்பதும் சிறுமி கடலூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு இருவரும் போன் நம்பரை பரிமாறி கொண்டுள்ளனர். முதலில் நண்பர்களாக பேசி வந்த இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர். கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

    இந்தநிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். வீட்டில் தெரிந்தால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் இருவரும் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் சந்தித்துள்ளனர்.

    பின்னர் அங்கிருந்து எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது போலீசாரிடம் சிக்கி உள்ளனர். போலீசார் இருவரையும் திருப்பூரில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அதன் பின்னர் இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களை திருப்பூருக்கு வரவழைத்துள்ளனர்.

    • இருவரும் நேற்று யாகத் பாஷா வீட்டுக்கு வந்து விட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினியை தேடி வந்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் ரோஷனை பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகன் யாகத் பாஷா (வயது 25). இவரும், செஞ்சியை அடுத்த அஞ்சேரி சேர்ந்த ஜெயராமன் என்பவரது மகள் பிரியதர்ஷினி (22) யும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி கடந்த 3 வருடமாக காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் நேற்று யாகத் பாஷா வீட்டுக்கு வந்து விட்டார். இந்த நிலையில் தனது மகளை காணவில்லை என பிரியதர்ஷியின் தந்தை ஜெயராம் செஞ்சி போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினியை தேடி வந்தனர். இதை அறிந்த யாகத் பாஷா பிரியதர்ஷினி இருவரும் பாதுகாப்பு கேட்டு திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரண் அடைந்தனர். அவர்களை விசாரித்த உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். செஞ்சி போலீசார் அவர்களை விசாரித்து விசாரணைக்கு பிறகு 2 பேரையும் யாகத் பாஷா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    • புவனேஸ்வரி திருமணம் ஆனவர் என தெரிந்தும் அவருடன் சந்துரு பழகி வந்துள்ளார்.
    • கண் இமைக்கும் நேரத்தில் வாலிபர் தன் உடலில் தீ வைத்து அதே வேகத்தில் புவனேஸ்வரியையும் கட்டிபிடித்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள தவசிமடையைச் சேர்ந்தவர் வாசிமலை. கூலித் தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 30). இவரும் மதுரை பேரையூரைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் சந்துரு (வயது 23) என்பவரும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தனர். இவர்கள் பழக்கம் நாளுக்கு நாள் நெருக்கமானது.

    புவனேஸ்வரி திருமணம் ஆனவர் என தெரிந்தும் அவருடன் சந்துரு பழகி வந்துள்ளார். இந்த விபரம் புவனேஸ்வரி குடும்பத்துக்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் சந்துருவுடன் பேசுவதை அவர் தவிர்த்து வந்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த சந்துரு நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது. உன்னை நேரடியாக பார்க்க உன் வீட்டுக்கே வருகிறேன் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதன்படி நேற்று அவரது வீட்டுக்கு வந்த சந்துரு என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய்? என கண்ணீர் வடிக்க கேட்டுள்ளார். ஆனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வேடிக்கை பார்த்ததால் இங்கிருந்து உடனடியாக சென்று விடு என அவர் கூறியுள்ளார். அதனை கேட்காமல் சந்துரு தான் மறைத்து கொண்டு வந்த பெட்ரோலை தன் உடலில் ஊற்றி உன் கண் முன்னால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறினார்.

    கண் இமைக்கும் நேரத்தில் தன் உடலில் தீ வைத்து அதே வேகத்தில் புவனேஸ்வரியையும் கட்டிபிடித்தார்.

    இதில் இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் மீது சாக்குப் போட்டு அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×