search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்ஸ்டாகிராம் மூலம் பழகினர் போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம்
    X

    காதல்ஜோடி பிரியதர்ஷினி-யாகத் பாஷா.

    இன்ஸ்டாகிராம் மூலம் பழகினர் போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம்

    • இருவரும் நேற்று யாகத் பாஷா வீட்டுக்கு வந்து விட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினியை தேடி வந்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் ரோஷனை பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகன் யாகத் பாஷா (வயது 25). இவரும், செஞ்சியை அடுத்த அஞ்சேரி சேர்ந்த ஜெயராமன் என்பவரது மகள் பிரியதர்ஷினி (22) யும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி கடந்த 3 வருடமாக காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் நேற்று யாகத் பாஷா வீட்டுக்கு வந்து விட்டார். இந்த நிலையில் தனது மகளை காணவில்லை என பிரியதர்ஷியின் தந்தை ஜெயராம் செஞ்சி போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினியை தேடி வந்தனர். இதை அறிந்த யாகத் பாஷா பிரியதர்ஷினி இருவரும் பாதுகாப்பு கேட்டு திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரண் அடைந்தனர். அவர்களை விசாரித்த உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். செஞ்சி போலீசார் அவர்களை விசாரித்து விசாரணைக்கு பிறகு 2 பேரையும் யாகத் பாஷா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×