search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boyfriend suicide"

    • சம்பவத்தன்று மாணவியின் தாய், தந்தை ஆகியோர் வெளியே சென்று இருந்தனர்.
    • மிருதுளா தனது பாட்டியிடம் வீட்டில் உள்ள குளியல் அறையில் குளிக்க செல்வதாக கூறி விட்டு சென்றார்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோலார்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் மிருதுளா (வயது 21). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மிருதுளாவுக்கு திப்பம்பட்டியை சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போன் மூலமாகவும் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில் காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக மிருதுளா அப்துல் ரகுமானுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து கடந்த பிப்ரவரி மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு தானே காரணம் என நினைத்து கடந்த சில நாட்களாக மிருதுளா மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். எனவே அவர் தன்னுடைய காதலன் சென்ற இடத்துக்கே அவரும் செல்ல திட்டமிட்டார்.

    சம்பவத்தன்று மாணவியின் தாய், தந்தை ஆகியோர் வெளியே சென்று இருந்தனர். வீட்டில் மாணவியின் பாட்டி மட்டுமே இருந்தார். அப்போது மிருதுளா தனது பாட்டியிடம் வீட்டில் உள்ள குளியல் அறையில் குளிக்க செல்வதாக கூறி விட்டு சென்றார். அங்கு மாணவி துப்பட்டாவில் தூக்குப்போட்டு தொங்கினார். இதனை பார்த்து அவரது பாட்டி அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கோலார்பட்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு மிருதுளாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அனன்யாவை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் ராஜா தற்கொலை செய்து கொண்டு இறந்தாரா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தற்கொலை செய்து கொண்ட அனன்யா மயக்க நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே சூரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மரியநாதன் மகன் ராஜா (வயது 22). இவர் கடந்த 23-ந் தேதி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான புகாரின் பேரில் ராஜாவை தற்கொலைக்கு தூண்டியதாக சூரப்பட்டு மூர்த்தி (42), வெங்கனூர் மோகன் (40) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருந்த போதும் ராஜா தற்கொலைக்கு இழப்பீடு கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ராஜாவின் உடலை வாங்க மறுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு இந்திரா நகரை சேர்ந்த கனகராஜ் மகன் பிரதீப்ராஜ் என்கிற அனன்யா (வயது 19). திருநங்கையாக இவரை சூரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மரியநாதன் மகன் ராஜா (வயது 22) என்பவர் காதலித்து வந்ததாகவும் இதனை அறிந்த அவரை தந்தை மரியநாதன் மேற்படி ராஜாவை அசிங்கமாக திட்டி, அடித்ததால் மன உளைச்சலில் கடந்த 23-ந் தேதி மாலை 6 மணிக்கு அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனால் மனமுடைந்த திருநங்கை அனன்யா என்பவர் நேற்று காலை 10:30 மணிக்கு மாம்பழப்பட்டு ரோட்டில் உள்ள அவரது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயற்சி செய்து தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விழுப்புரம் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    விசாரணையில் அனன்யா ராஜாவை திருமணம் செய்வதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாக மாறி உள்ளார். இறந்த ராஜாவின் பெற்றோர் இந்த திருமணத்தை மறுத்து உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ராஜா வீட்டுக்கு வந்து திருமணத்திற்கு சம்மதம் கேட்டு வந்தவர்களை அசிங்கப்படுத்தி அனுப்பி உள்ளனர்.

    ராஜாவிற்கு சேலம் பகுதியில் உள்ள திருநங்கைகளுடன் ஏற்கனவே தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக கடந்த 2 மாதத்திற்கு முன்னா் ராஜாவின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

    அனன்யாவை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் ராஜா தற்கொலை செய்து கொண்டு இறந்தாரா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட அனன்யா மயக்க நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சுய நினைவிற்கு வந்த பிறகு இவ்வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    நாகை அருகே காதலனுடன் தூக்குப்போட்டு 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள தகட்டூர் சமத்துவபுரம் ரோஜா தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது50). விவசாயி. இவருடைய இளைய மகன் ரவிசங்கர் (19). டிப்ளமோ படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்த ரவிசங்கர், திடீரென மாயமானார். அவரை வீரமணி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    நேற்று காலை அப்பகுதியில் வீரமணி மற்றும் உறவினர்கள் ரவிசங்கரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் ரவிசங்கரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். இதில் ரவிசங்கரின் செல்போன் ‘ரிங்டோன்’ அப்பகுதியில் உள்ள ஒருவருடைய வீட்டுக்குள் இருந்து ஒலித்தது. ஆனால் அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த வீரமணி உள்ளிட்டோர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் மின்விசிறியில் ரவிசங்கர், 16 வயது சிறுமி ஒருவருடன் தூக்கில் பிணமாக தொங்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வீரமணி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த், வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி மற்றும் போலீசார் அங்கு சென்று ரவிசங்கர் மற்றும் சிறுமியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    முதல் கட்ட விசாரணையில் ரவிசங்கரும், 16 வயது சிறுமியும் ஒன்றாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததும் தெரியவந்தது. இவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது பற்றி வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பண்ருட்டி அருகே காதலன் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து காதலியும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கரும்பூர் குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தீபன்(வயது 26). இவர் என்ஜினீயரிங் படித்துள்ளார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் செல்வகுமாரி(20). கடலூரில் உள்ள அரசு கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இந்த நிலையில் பார்த்தீபனுக்கும் செல்வகுமாரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இவர்களின் காதல் விவரம் செல்வகுமாரியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் செல்வகுமாரிக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.

    பார்த்தீபனுக்கு தெரிய வந்தது. அவர் மனம் உடைந்தார். நேற்று முன்தினம் இரவு பார்த்தீபன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தனது காதலன் தற்கொலை செய்து கொண்டது பற்றி தகவல் அறிந்த செல்வ குமாரி மிகுந்த மனவேதனை அடைந்தார்.

    வீட்டில் யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்த வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    வீட்டில் இருந்தவர்கள் செல்வகுமாரியை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    ×