search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதலன் தற்கொலை செய்து கொண்டதால் திருநங்கை தற்கொலை முயற்சி
    X

    காதலன் தற்கொலை செய்து கொண்டதால் திருநங்கை தற்கொலை முயற்சி

    • அனன்யாவை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் ராஜா தற்கொலை செய்து கொண்டு இறந்தாரா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தற்கொலை செய்து கொண்ட அனன்யா மயக்க நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே சூரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மரியநாதன் மகன் ராஜா (வயது 22). இவர் கடந்த 23-ந் தேதி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான புகாரின் பேரில் ராஜாவை தற்கொலைக்கு தூண்டியதாக சூரப்பட்டு மூர்த்தி (42), வெங்கனூர் மோகன் (40) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருந்த போதும் ராஜா தற்கொலைக்கு இழப்பீடு கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ராஜாவின் உடலை வாங்க மறுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு இந்திரா நகரை சேர்ந்த கனகராஜ் மகன் பிரதீப்ராஜ் என்கிற அனன்யா (வயது 19). திருநங்கையாக இவரை சூரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மரியநாதன் மகன் ராஜா (வயது 22) என்பவர் காதலித்து வந்ததாகவும் இதனை அறிந்த அவரை தந்தை மரியநாதன் மேற்படி ராஜாவை அசிங்கமாக திட்டி, அடித்ததால் மன உளைச்சலில் கடந்த 23-ந் தேதி மாலை 6 மணிக்கு அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனால் மனமுடைந்த திருநங்கை அனன்யா என்பவர் நேற்று காலை 10:30 மணிக்கு மாம்பழப்பட்டு ரோட்டில் உள்ள அவரது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயற்சி செய்து தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விழுப்புரம் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    விசாரணையில் அனன்யா ராஜாவை திருமணம் செய்வதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாக மாறி உள்ளார். இறந்த ராஜாவின் பெற்றோர் இந்த திருமணத்தை மறுத்து உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ராஜா வீட்டுக்கு வந்து திருமணத்திற்கு சம்மதம் கேட்டு வந்தவர்களை அசிங்கப்படுத்தி அனுப்பி உள்ளனர்.

    ராஜாவிற்கு சேலம் பகுதியில் உள்ள திருநங்கைகளுடன் ஏற்கனவே தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக கடந்த 2 மாதத்திற்கு முன்னா் ராஜாவின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

    அனன்யாவை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் ராஜா தற்கொலை செய்து கொண்டு இறந்தாரா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட அனன்யா மயக்க நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சுய நினைவிற்கு வந்த பிறகு இவ்வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×