search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்ஸ்டாகிராம் காதல்"

    • பிரியதர்ஷினி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
    • 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கருதினர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொக்குபட்டியை சேர்ந்தவர் அருண்பாண்டி (வயது21). இவர் பெயிண்டிங் காண்டிராக்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ரெட்டிசந்தூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி (20) என்பவருக்கும் இன்ஸ்டா கிராமம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பிரியதர்ஷினி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

    நாளடைவில் இது காதலாக மாறி கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கருதினர். இதனால் அவர்கள் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

    போலீசார் இருவரின் பெற்றோரையும் வரவழைத்தனர். இதில் பிரியதர்ஷினியின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அருண்பாண்டியின் குடும்பத்தினர் சம்மதித்ததால் போலீஸ் நிலையம் அருகில் உள்ள கோவிலில் அருண்பாண்டி மற்றும் பிரியதர்ஷினிக்கு திருமணம் நடைபெற்றது. இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பபடி செல்லலாம் என போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    • திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மாணவி காதலனுடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.
    • மாணவியின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் வாலிபர்களை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்தனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஒரு கிராத்தை சேர்ந்த 18 வயது மாணவிக்கு மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சேர்ந்த ஆதித்யாவுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது காதலாக மாறி இருவரும் பேசி வந்துள்ளனர். திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மாணவி காதலனுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆதித்யா மாணவியை மிரட்டி என்னை காதலிக்காவிட்டால் 2 பேரும் எடுத்துக்கொாண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது சகோதரரிடம் கூறி உள்ளார். அவர் பேசியும் கேட்காத ஆதித்யா தனது நண்பர்களுடன் 2 பைக்கில் மாணவியின் கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு அவரது வீட்டை விசாரித்துக் கொண்டிருந்தபோது மாணவியின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் வாலிபர்களை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்தனர்.

    இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து வாலிபர்களை மீட்டு வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பைக்கை பறிமுதல் செய்து பெற்றோரை அழைத்துவரும்படி கூறினர்.

    பெற்றோர் வந்ததும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • புவனேஸ்வரி திருமணம் ஆனவர் என தெரிந்தும் அவருடன் சந்துரு பழகி வந்துள்ளார்.
    • கண் இமைக்கும் நேரத்தில் வாலிபர் தன் உடலில் தீ வைத்து அதே வேகத்தில் புவனேஸ்வரியையும் கட்டிபிடித்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள தவசிமடையைச் சேர்ந்தவர் வாசிமலை. கூலித் தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 30). இவரும் மதுரை பேரையூரைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் சந்துரு (வயது 23) என்பவரும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தனர். இவர்கள் பழக்கம் நாளுக்கு நாள் நெருக்கமானது.

    புவனேஸ்வரி திருமணம் ஆனவர் என தெரிந்தும் அவருடன் சந்துரு பழகி வந்துள்ளார். இந்த விபரம் புவனேஸ்வரி குடும்பத்துக்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் சந்துருவுடன் பேசுவதை அவர் தவிர்த்து வந்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த சந்துரு நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது. உன்னை நேரடியாக பார்க்க உன் வீட்டுக்கே வருகிறேன் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதன்படி நேற்று அவரது வீட்டுக்கு வந்த சந்துரு என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய்? என கண்ணீர் வடிக்க கேட்டுள்ளார். ஆனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வேடிக்கை பார்த்ததால் இங்கிருந்து உடனடியாக சென்று விடு என அவர் கூறியுள்ளார். அதனை கேட்காமல் சந்துரு தான் மறைத்து கொண்டு வந்த பெட்ரோலை தன் உடலில் ஊற்றி உன் கண் முன்னால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறினார்.

    கண் இமைக்கும் நேரத்தில் தன் உடலில் தீ வைத்து அதே வேகத்தில் புவனேஸ்வரியையும் கட்டிபிடித்தார்.

    இதில் இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் மீது சாக்குப் போட்டு அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×