என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விராட் கோலிக்காக கொலை- வாலிபருக்கு ஆயுள் தண்டனை
- பொதுவாக ஐபிஎல் போட்டிகள் தொடங்கும்போது ஐபிஎல் அணி ரசிகர்களிடையே தங்கள் அணிக்காக வாக்குவாதங்கள், சண்டைகள் நடப்பது வழக்கம்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்தனர்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முக்கியமாக அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் போன்றவர்களுக்கு ஆங்காங்கே ரசிகர்கள் மன்றங்களே நடத்தி வருகின்றனர்.
பொதுவாக ஐபிஎல் போட்டிகள் தொடங்கும்போது ஐபிஎல் அணி ரசிகர்களிடையே தங்கள் அணிக்காக வாக்குவாதங்கள், சண்டைகள் நடப்பது வழக்கம்.
இதற்கிடையே கடந்த 2022 ஐபிஎல் சீசனின் போது அரியலூரை சேர்ந்த தர்மராஜ் தனது நண்பர் விக்னேஷ்வுடன் ஊருக்கு வெளியே மது அருந்த சென்றுள்ளார். இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மது அருந்திவிட்டு பேசிக் கொண்டிருந்தபோது கிரிக்கெட் குறித்து இருவருக்கும் வாக்குவாதம் எழுந்ததாக தெரிகிறது.
இந்த வாக்குவாதத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை தவறாக பேச, இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ் அரிவாளால் விக்னேஷை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விக்னேஷ் இறந்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நடந்து வந்தது.
இந்நிலையில் விக்னேஷை கொலை செய்த தர்மராஜுக்கு அரியலூர் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை என தீர்ப்பு வழங்கியுள்ளது.






