என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோழர்கள்"

    • நிலவின் தென்துருவத்தில் இந்தியா கால் பதித்த பகுதியை சிவசக்தி என பெயர் சூட்டினோம்
    • பாரதத்தின் எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தோம்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர் மாமன்னன் ராஜேந்திர சோழன். இவரது பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு விழா ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா, தெற்காசியா நாடுகள் மீது படையெடுத்த ஆயிரமாவது ஆண்டு விழா, பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணிகள் தொடக்க ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 23-ந் தேதி தமிழக அரசு சார்பில் விழா தொடங்கப்பட்டது.

    மத்திய அரசின் தொல்லியல்துறை, கலாச்சாரத்துறை சார்பில் கடந்த 5 நாட்களாக விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. இதன் நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

    பின்னர் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றார். கோவிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலின் முக மண்டபம், அர்த்த மண்டபம், முன்மண்டபத்தை பார்வையிட்டார்.

    இதையடுத்து பிரதமர் மோடி உரையாற்றினார். விழாவில் 'வணக்கம் சோழ மண்டலம்' எனக்கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் வலிமையை வெளிப்படுத்தியது. பாரதத்தின் எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தோம். நாம் வளர்ச்சியடைந்த தேசத்தை உருவாக்க ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

    * நிலவின் தென்துருவத்தில் இந்தியா கால் பதித்த பகுதியை சிவசக்தி என பெயர் சூட்டினோம்

    * ராஜேந்திர சோழன் புனித கங்கை நீரை எடுத்து பொன்னேரியை நிரப்பினார். காசியிலிருந்து கங்கை நீரை, மீண்டும் கொண்டு வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது

    * தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும்

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இலங்கை, மாலத்தீவு, தென்கிழக்கு ஆசியா வரை நீண்டிருந்தது சோழப் பேரரசு
    • உலகம் முழுவதும் பேசும் நீர் மேலாண்மைக்கு சோழர்களே முன்னோடிகள்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர் மாமன்னன் ராஜேந்திர சோழன். இவரது பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு விழா ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா, தெற்காசியா நாடுகள் மீது படையெடுத்த ஆயிரமாவது ஆண்டு விழா, பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணிகள் தொடக்க ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 23-ந் தேதி தமிழக அரசு சார்பில் விழா தொடங்கப்பட்டது.

    மத்திய அரசின் தொல்லியல்துறை, கலாச்சாரத்துறை சார்பில் கடந்த 5 நாட்களாக விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. இதன் நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

    பின்னர் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றார். கோவிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலின் முக மண்டபம், அர்த்த மண்டபம், முன்மண்டபத்தை பார்வையிட்டார்.

    இதையடுத்து பிரதமர் மோடி உரையாற்றினார். விழாவில் 'வணக்கம் சோழ மண்டலம்' எனக்கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    * உலகம் முழுவதும் பேசும் நீர் மேலாண்மைக்கு சோழர்களே முன்னோடிகள்

    * சோழப் பேரரசர்கள் ராஜராஜன், ராஜேந்திரன் ஆகிய இரு பெயர்களும் பாரதத்தின் இரு பிரகடனங்கள்

    * இலங்கை, மாலத்தீவு, தென்கிழக்கு ஆசியா வரை நீண்டிருந்தது சோழப் பேரரசு

    * சோழர் கால கலை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது; சோழர்களின் கண்காட்சியை பார்த்து பிரமித்தேன். சோழ சாம்ராஜ்யம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று

    * பிரிட்டனுக்கு முன்பாகவே ஜனநாயக ரீதியில் குடவோலை முறை ஆட்சி செய்தவர்கள் சோழர்கள்.

    * உலகின் வன்முறை, சுற்றுச்சூழல் பிரச்னைக்கு, தீர்வளிக்கும் பாதையை சைவ சித்தாந்தம் நமக்கு காட்டுகிறது.

    * அன்பே சிவம் என்ற திருமூலரின் கோட்பாட்டை உலகம் முழுவதும் கடைப்பிடித்தால் பிரச்னைகள் தானாகத் தீரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காஞ்சி வைணவ சமயத்தின் இருக்கையாகும் கச்சி அட்டபுயகரம் புகழ் மிக்கது.
    • சோழர்கள் காஞ்சியைத் தமது வடபுலத் தலைநகராகக் கொண்டிருந்தனர்.

    கரிகாலன் இமயமலையில் புலிச்சின்னத்தைப் பொறிக்க வடதிசை சென்ற போது இந்நகரின் வளமையைக் கேட்டு,

    நான்கு காலங்கள் சதுரத்திற்குக் காஞ்சி மாநகருக்கு குன்று போல் மதில் அமைத்து, குடி அமர்த்தினான் என்பார் சேக்கிழார்.

    இந்த வரலாற்றுச் செய்தியைச் சோழர் செப்பேடுகளும் கூறுகின்றன.

    கி.பி. 300 முதல் கி.பி. 900 வரை பல்லவர், 900 முதல் 1300 வரை சோழப் பேரரசர் ஆளுகையின் கீழ் இவ்வூர் இருந்தது.

    கோதாவரி ஆறு வரையும் அதற்கப்பாலும் பரந்த அவர்கள் ஆட்சிப் பகுதியில் வடபகுதிக்கு அது துணைத் தலைநகராய் இவ்வூர் அமைந்திருந்தது.

    அக்காலக் காஞ்சியில் யோக முனிவர்களும், யோகினிகளும் போற்றும் யோகபீடம் இருந்தது என்பர் சேக்கிழார்.

    அங்கு உருத்திரசோலை, தவசிகள் தொட்டால் யாவற்றையும் பொன்னாக மாற்றும் சிலை. அந்தணர் இருக்கை

    , அரசர் குலப்பெருந்தெருக்கள், ஆயுதங்கள் பயிலும் இடங்கள், யானை, குதிரை ஏற்றம் பயிலிடங்கள்,

    வணிகர் வாழ் மாநகர்கள், வேளாண் குடிப் பெருஞ்செல்வர் வாழ் இடங்கள் அனுஸோமர்,

    பிரதிலோமர் ஆகிய குடி மக்கள் தொழில் புரிந்து வாழும் பகுதிகள் தனித்தனியாக இருந்த குறிப்புகள் உள்ளன.

    சோழர்கள் காஞ்சியைத் தமது வடபுலத் தலைநகராகக் கொண்டிருந்தனர்.

    காஞ்சிபுரத்தில் அசோகன் எடுத்த பௌத்த ஸ்தூபம் ஒன்று இருந்தது.

    அது சுமார் 100 அடி உயரத்திற்கு மேல் இருந்தது.

    நூற்றுக்கும் மேற்பட்ட பௌத்தப் பள்ளிகள் இருந்தன.

    இவற்றில் பவுத்த சமயத்தில் தீவிரப்பிரிவைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பிக்குகள் வசித்தார்கள் என்று ஹூவான் 'சுவாங்' குறிப்பிடுகிறார்.

    கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இங்கு பவுத்தமும் சிறந்திருந்தது. இங்கு வசுந்தரா என்னும் பெயர் பெற்ற தாராதேவிக்கு ஒரு கோவில் இருந்தது.

    காஞ்சி வைணவ சமயத்தின் இருக்கையாகும் கச்சி அட்டபுயகரம் புகழ் மிக்கது.

    அலகளந்த பெருமாள் கோவில், பரமேச்சுர விண்ணகரம் என்னும் வைகுந்த பெருமாள் கோவில், பச்சைவண்ணன் கோவில் முதலிய கோவிந்தன் கோவில்கள் புகழ் மிக்கவை.

    அருளாளப் பெருமாள் கோவில் என்னும் வரதராசர் கோவில் வைணவப் பெரியார் ராமானுஜரின் வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்றது.

    தொண்டை மண்டலத்துக்கே சிறந்த தலைவராகக் காஞ்சிமாநகர், 18-ஆம் நூற்றாண்டு வரை சீரும் சிறப்புமாகத் திகழ்ந்தது.

    ×