search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பகண்டை கூட்டு ரோடு அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
    X

    ஏந்தல் கிராமத்தில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரசாந்த் மேற்பார்வையில் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டது.

    பகண்டை கூட்டு ரோடு அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    • ஏந்தல் மயானம் அருகே செல்லும் வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து விவ சாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட் டது.
    • பகண்டைகூட்டுரோடு போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சிமாவட் டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோடு அடுத்த ஏந்தல் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. மழைக்காலத்தில் இந்த ஏரி நிரம்பும்போது, உபரி நீர் மரூர் ஏரிக்கு செல்லும் வகையில் வாய்க்கால் உள்ளது ஏந்தல் மயானம் அருகே செல்லும் வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து விவ சாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட் டது. இ தனால் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மோகன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் உயர்நீதி மன்றம் வாய்க்கால் ஆக்கி ரமிப்பை அகற்றக்கோரி பொதுப்பணித்துறை யினருக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சங்கராபுரம் பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் பிரசாந்த் மேற்பார்வையில் பகண்டைகூட்டுரோடு போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

    இந்த பணியின்போது, ரிஷிவந்தியம் வருவாய் ஆய்வாளர் சங்கீதா மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×