என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்
- மேலூரில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்க கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் கண்மாய் அருகில் சிவன் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளனர். இதை மீட்க வலியுறுத்தி மேலூரில் பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் தர்மலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர் வக்கீல் கண்ணன், நகர தலைவர் சேவுகமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் தசரதன், ராஜகோபால், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டம் பற்றி தகவல் கிடைத்ததும் மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சிவன் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை மீட்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்