search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்தியாவில் எந்த இடத்திலும் பணியாற்ற உரிமை உள்ளது- லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பஸ்வான் பேட்டி
    X

    இந்தியாவில் எந்த இடத்திலும் பணியாற்ற உரிமை உள்ளது- லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பஸ்வான் பேட்டி

    • சிராக் பஸ்வான் பல்லாவரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார்.
    • தமிழ்நாட்டில் நிறைய பீகார் மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலை தளங்களில் பரவியதால் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினர் அங்குள்ள சட்டசபையில் இதுகுறித்து பேசி அமளியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்களின் நிலைமையை நேரில் கண்டறிய பீகாரில் இருந்து லோக் ஜன சக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான் எம்.பி. இன்று விமானம் மூலம் சென்னை வந்தார்.

    பல்லாவரம், தாம்பரம் மற்றும் புறநகரில் உள்ள பீகார் தொழிலாளர்களை சந்தித்து தமிழகத்தில் நிலவும் நிலைமைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அவர்கள் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். எங்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்று கூறினார்கள்.

    அதன்பிறகு சிராக் பஸ்வான் பல்லாவரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார்.

    அப்போது அவர் கூறுகையில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எந்த இடத்திலும் சென்று பணியாற்ற அனைவருக்கும் உரிமை உள்ளது.

    தமிழ்நாட்டில் நிறைய பீகார் மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

    எனவே சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை நம்பாதீர் என்று கேட்டுக் கொண்டேன் என்று கூறினார்.

    Next Story
    ×