என் மலர்tooltip icon

    இந்தியா

    துணை முதல்வராகும் சிராக் பஸ்வான்?.. பீகார் அரசியலை புரட்டிப்போட்ட இளம் புயல்.. ஜீரோ  to ஹீரோ ஆனது எப்படி?
    X

    துணை முதல்வராகும் சிராக் பஸ்வான்?.. பீகார் அரசியலை புரட்டிப்போட்ட இளம் புயல்.. ஜீரோ to ஹீரோ ஆனது எப்படி?

    • எம்.பி.யாக இருந்த ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான், கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றார்.
    • லோக் ஜனசக்தி எம்.பிகள் எல்லோரும் போர்க்கொடி தூக்கிய நிலையில் கட்சி இரண்டாகப் உடைந்தது.

    பீகாரில் சட்டசபை தேர்தலில் என்டிஏ கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற்ற சிராக் பஸ்வானின் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 29 இடங்களில் போட்டியிட்ட நிலையில் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    முதல்வர் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், 2000ஆம் ஆண்டு உருவாக்கிய கட்சியே லோக் ஜனசக்தி.

    கடந்த 2020ல் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பே அவர் காலமான நிலையில் அக்கட்சி உட்பூசலில் சிக்கி தவித்தது.

    அப்போது எம்.பி.யாக இருந்த ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான், கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றார்.

    கடந்த 2020 பீகார் சட்டசபை தேர்தலில் 137 இடங்களில் லோக் ஜனசக்தி தனித்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் நிதிஷ் குமாரை தீவிரமாக எதிர்த்து பிரசாரம் செய்த லோக் ஜனசக்தி ஒரே 137 இடங்களில் ஒரே ஒரு இடத்தை மட்டுமே பெற்றது.

    இதைத்தொடர்ந்து லோக் ஜனசக்தி எம்.பிகள் எல்லோரும் போர்க்கொடி தூக்கிய நிலையில் கட்சி இரண்டாகப் உடைந்தது.

    எனவே, சிராக் பஸ்வான் தனி ஆளாக லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பஸ்வான்) என்றப் புதியக் கட்சியை 2021-ம் ஆண்டு தொடங்கினார்.

    2024 மக்களவை தேர்தலில் என்டிஏ கூட்டணியில் இணைந்து லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பஸ்வான்) 5 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இதன் மூலம் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

    என்டிஏவின் மத்திய அமைச்சரவையில் சிராக் பஸ்வான் இடம்பெற்றார். இதைதொடர்ந்து இந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் குமாருடன் தோளோடு தோள் சேர்ந்து போட்டியிட்ட லோக் ஜனசக்தி 19 இடங்களில் வெற்றி பெற்று பாஜக, ஜேடியுவுக்கு அடுத்தபடியாக பீகாரின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

    முன்னதாக அக்கட்சிக்கு 29 இடங்கள் ஒதுக்கியது குறித்து பாஜக, ஜேடியு தலைவர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் சந்தேகங்களை உடைத்து சிராக் பஸ்வானின் பீகார் அரசியலில் தவிர்க்க முடியாத இடத்திற்கு உயர்ந்துள்ளது. தேஜஸ்விக்கு மாற்றாக என்டிஏவின் இளம் தலைவர் முகமாக சிராக் பஸ்வான் திகழ்கிறார்.

    இதற்கிடையே சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பேசிய சிராக் பஸ்வான், துணை முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதாகவும், மாநிலத்தின் மிக உயர்ந்த பதவியில் தன்னைப் பார்க்க தனது கட்சித் தொண்டர்கள் விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். எனவே அவர் துணை முதல்வர் ஆவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    Next Story
    ×