என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lok Janasakthi Party"

    • பிரதமர் மோடி மீது அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன்.
    • பா.ஜனதாவிடம் இருந்து பிரிந்து செல்ல முடியாது.

    பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    எனது பெற்றோருக்குப் பிறகு, மரியாதை மற்றும் அன்பு நிறைந்த இடத்தில் நான் மதிக்கும் ஒரே நபர் பிரதமர் மோடி தான்.

    அவர் இருக்கும் வரை, பா.ஜ.கவில் இருந்து பிரிந்து செல்வது பற்றி நான் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

    நான் என் எதிரிகள் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை, என் சொந்த பலத்திலும் கடின உழைப்பிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன்.

    மீண்டும் ஒருமுறை நாங்கள் 100 சதவீத வெற்றி விகிதத்தை அடைவோம். என்று நான் நம்புகிறேன். 5 கட்சிகளின் இந்த கூட்டணி ஒரு வெற்றிகரமான கூட்டணி.

    ஜனதா தளம் (ஐக்கிய) வாக்காளர் தளத்திற்குள் வளர்ந்து வருகிறது. அவர்களின் ஆதரவை பெற்று உள்ளது. எதுவாக இருந்தாலும், ஒரு வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உருவாக வேண்டும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறார்கள்.

    ராம் விலாஸ் பாஸ்வான் அரசியலில் இருக்கும்போது தனது மக்களுக்கும் அவரது பிராந்தியத்திற்கும் பாடுபட நேர்மையான முயற்சியை மேற்கொண்டார். நானும் அதையே செய்ய முயற்சிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ராஞ்சியில் இன்று நடைபெற்றது.
    • அரியானா, ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    ராஞ்சி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி நடந்து வருகிறது. இதில் லோக் ஜனசக்தி கட்சி தலைவரான சிராக் பஸ்வானுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ராஞ்சியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிராக் பஸ்வான் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர் அக்கட்சியின் தலைவராக இருப்பார்.

    மேலும் அரியானா, ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    அப்போது பேசிய சிராக் பஸ்வான், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்தி வருகிறோம். அது அரசாங்கத்திடம் சரியான எண்ணிக்கை இருப்பதை உறுதிசெய்யும். ஆனாலும், மக்கள்தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள் பொதுவில் வருவதை விரும்பவில்லை. அது ஒரு விரிசலை உருவாக்கலாம் என தெரிவித்தார்.

    பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்து உருவானது லோக் ஜனசக்தி கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

    ×