search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Northern State Labor"

    • சிராக் பஸ்வான் பல்லாவரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார்.
    • தமிழ்நாட்டில் நிறைய பீகார் மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலை தளங்களில் பரவியதால் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினர் அங்குள்ள சட்டசபையில் இதுகுறித்து பேசி அமளியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்களின் நிலைமையை நேரில் கண்டறிய பீகாரில் இருந்து லோக் ஜன சக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான் எம்.பி. இன்று விமானம் மூலம் சென்னை வந்தார்.

    பல்லாவரம், தாம்பரம் மற்றும் புறநகரில் உள்ள பீகார் தொழிலாளர்களை சந்தித்து தமிழகத்தில் நிலவும் நிலைமைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அவர்கள் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். எங்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்று கூறினார்கள்.

    அதன்பிறகு சிராக் பஸ்வான் பல்லாவரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார்.

    அப்போது அவர் கூறுகையில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எந்த இடத்திலும் சென்று பணியாற்ற அனைவருக்கும் உரிமை உள்ளது.

    தமிழ்நாட்டில் நிறைய பீகார் மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

    எனவே சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை நம்பாதீர் என்று கேட்டுக் கொண்டேன் என்று கூறினார்.

    • பீகாரில் இருந்து லோக் ஜன சக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான் எம்.பி. இன்று விமானம் மூலம் சென்னை வந்தார்.
    • சிராக் பஸ்வான் செய்தியாளர்களை சந்தித்து பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலை தளங்களில் பரவியதால் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினர் அங்குள்ள சட்டசபையில் இதுகுறித்து பேசி அமளியில் ஈடுபட்டனர்.

    எனவே இது தொடர்பாக உண்மை நிலையை கண்டறியும் வகையில் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து 8 உயர் அதிகாரிகள் சென்னை வந்திருந்தனர். இவர்கள் தமிழக அதிகாரிகளிடம் நடந்த விசயங்களை கேட்டறிந்தனர்.

    இந்த குழுவினர் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன் அங்குள்ள வட மாநில தொழிலாளர்களையும் சந்தித்து பேசினார்கள். இந்த குழுவுக்கு தலைமை தாங்கி வந்துள்ள பீகார் மாநில ஊரக வளர்ச்சி திட்ட செயலாளர் பாலமுருகன் கூறுகையில் வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் தமிழகத்தில் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் பீகாரில் இருந்து லோக் ஜன சக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான் எம்.பி. இன்று விமானம் மூலம் சென்னை வந்தார்.

    பல்லாவரம், தாம்பரம் மற்றும் புறநகரில் உள்ள பீகார் தொழிலாளர்களை சந்தித்து தமிழகத்தில் நிலவும் நிலைமைகளை கேட்டறிந்தார்.

    அதன்பிறகு சிராக் பஸ்வான் செய்தியாளர்களை சந்தித்து பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார்.

    அதன்பிறகு கிண்டி ராஜ்பவன் சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது புலம் பெயர்ந்த பீகார் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான மனுவையும் கவர்னரிடம் அளித்தார்.

    • தமிழர்களுக்கும், வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையில் சீமான் பேசிவருகிறார்.
    • வடமாநில தொழிலாளிகள் விவகாரத்தில் அம்பு எய்தவர்களை விட்டு விட்டு, அம்பை குறிவைக்க கூடாது.

    சென்னை:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.சம்பத் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதன் பிறகு கே.எஸ்.அழகிரி நிருபர்க ளிடம் கூறியதாவது:

    வடமாநில தொழிலாளர்கள் குறித்து ஒருசிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர்.

    பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். மறைமுகமாகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாகவும் பேசிவருகிறார். இந்த பிரச்சினைக்கு இவர்கள் தான் காரணம்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழர்களுக்கும், வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையில் சீமான் பேசிவருகிறார்.

    சீமான் தனது பல்வேறு உரைகளில் தண்டனைக்கு உகந்தவாறு பேசி வருகிறார்.

    வடமாநில தொழிலாளிகள் விவகாரத்தில் அம்பு எய்தவர்களை விட்டு விட்டு, அம்பை குறிவைக்க கூடாது. அம்பு ஏய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ., கு.செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ., நாசே ராமச்சந்திரன், கோபண்ணா, உ.பலராமன், பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.ஜி.சிதம்பரம், தாம்பரம் சிவராமன், ஷெரிப், பி.வி.தமிழ்ச்செல்வன், தளபதி பாஸ்கர், அகரம் கோபி, சூளை ராஜேந்திரன், சந்திர சேகர், முகமது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×