என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடதுசாரிகள்"

    • ஆதிவாசிகளை வரம்பற்ற விரோதத்துடன் நடத்தும் ராணுவ அணுகுமுறையை கைவிட வேண்டும்
    • சத்தீஸ்கரில் உள்ள காடுகள், கனிம வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பேரழிவு தரும் விளைவுகளுடன் பெருநிறுவன சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகிறது.

    நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையான "ஆபரேஷன் காகர்" என்ற பெயரில் நடைபெற்று வரும் "சட்டவிரோத படுகொலைகளை" உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐந்து இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளன.

    நடுநிலையான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், நக்சல்களின் அமைதி அழைப்பை ஏற்று அவர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றும் மோடியை வலியுறுத்தியுள்ளன.

    பிரதமர் மோடிக்கு எழுதிய கூட்டுக்கடிதத்தில், சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, சிபிஐ(எம்.எல்.எல்) தீபங்கர் பட்டாச்சார்யா, ஆர்.எஸ்.பி. மனோஜ் பட்டாச்சார்யா, ஃபார்வர்ட் பிளாக் ஜி.தேவராஜன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

    அந்த கடிதத்தில், ஆபரேஷன் காகர் என்ற பெயரில் நடக்கும் சட்டவிரோத படுகொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்து நடுநிலையான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நக்சல்களின் தன்னிச்சையான போர்நிறுத்த சலுகையை ஏற்று அவர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். ஆதிவாசிகளை வரம்பற்ற விரோதத்துடன் நடத்தும் ராணுவ அணுகுமுறையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையில் பொதிந்துள்ள பழங்குடியினர் உரிமைகள் மீறப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர். சத்தீஸ்கரில் உள்ள காடுகள், கனிம வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பேரழிவு தரும் விளைவுகளுடன் பெருநிறுவன சுரண்டலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.

    உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைக்க மறுப்பது, கண்ணியத்துடன் இறுதிச் சடங்குகளை செய்யும் உரிமையை மறுப்பதாகும் என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    பாதுகாப்புப் படையினரின் காவலில் உள்ள நக்சல் தலைவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நக்சலிசத்தை முடிவுக்குக் கொண்டுவர மார்ச் 31, 2026 காலக்கெடுவை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதும், சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு சாய் தியோ பேச்சுவார்த்தைக்கு அவசியமில்லை என்று கூறுவதும், பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்பாத மனநிலையை பிரதிபலிப்பதாக இடதுசாரிக் கட்சிகள் விமர்சித்துள்ளன. 

    • குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக 2 கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
    • வரும் அனைத்து தேர்தல்களிலும் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாரதிய ஜனதா வியூகம் வகுத்து வருகிறது.

    இதை தடுக்கவும், பாரதிய ஜனதா அரசை வீழ்த்தவும் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற பெயரில் மிகப்பெரிய கூட்டணியை அமைத்தன.

    காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க., சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சி கள் இணைந்த இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 3 முறை நடைபெற்றுள்ளது.

    இதில் பாராளுமன்ற தேர்தலை ஒருங்கிணைந்து சந்திப்பது தொடர்பாக எதிர்கட்சிகள் கூடி விவாதித்தன.

    இந்நிலையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பாக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக மோதல் ஏற்பட்டது.

    இதே போல ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்தது. இதிலும் சரியான உடன்பாடு ஏற்படவில்லை.

    தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற நிலையிலும், குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக 2 கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்த மாநிலங்களில் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு போதிய இடங்களை கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

    இதனால் கூட்டணியில் மோதல் வெடித்தது. எனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள இடது சாரிகள் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ராஜஸ்தானில் 17 இடங்களிலும், சத்தீஸ்கரில் 3 இடங்களிலும், மத்திய பிரதேசத்தில் 4 இடங்களிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளது.

    இதே போல இந்திய கம்யூனிஸ்டு கட்சி சத்தீஸ்கரில் 16 இடங்களிலும், ராஜஸ்தானில் 12 இடங்களி லும், மத்திய பிரதேசத்தில் சுமார் 9 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக இடது சாரி மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி கூறுகையில், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார்.

    இதற்கிடையே தெலுங்கானாவிலும் 2 கட்சிகளும் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இதில் 2 கட்சிகளுக்கும் அங்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கூட்டணி கட்சிகளுடன் நடைபெற்ற தொகுதி பங்கீடு தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது.

    இதில் வரும் அனைத்து தேர்தல்களிலும் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • நாடாளுமன்றத்தில் டிசம்பர் 16ம் தேதியன்று தாக்கல் செய்யயுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் விபரீத மசோதாவை அறிமுக நிலையிலேயே தடுத்திட வேண்டும் என்று சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்.எல்)லிபரேசன் கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக இடதுசாரி கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நாடாளுமன்ற ஜனநாயகத்தை நட்டாற்றில் தள்ளும் வகையிலும் கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையிலும் மாநில உரிமைகளை மண் மேடாக்கும் வகையிலும், "ஒரே நாடு; ஒரே தேர்தல்" என்பதற்கான சட்ட முன்வரைவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தச் சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் டிசம்பர் 16ம் தேதியன்று தாக்கல் செய்யயுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    முன்னதாக டிசம்பர் 16ஆம் தேதி நிகழ்ச்சி நிரவில் இந்த மசோதா இடம்பெற்றிருந்த நிலையில், எதிர்கட்சிகளின் கடுமையான ஆட்சேபனையால் திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை. ஆனால், அதேசமயம் இந்த கூட்டத் தொடரிலேயே இம்மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த சட்ட முன்வரையை அறிமுக நிலையிலேயே அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருசேர எதிர்க்க வேண்டியது அவசியமாகும்.

    நடைமுறை சாத்தியமில்லாத இந்த ஜனநாயக விரோத சட்ட மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு மூர்க்கம் காட்டுகிறது. இந்தச் சட்டமுன்வரைவு நிறைவேற்றப்பட வேண்டுமானால் அரசியல் சட்டத்தில் ஆறு திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.

    இந்த அரசியல் சட்டத்திருத்தங்களை செய்யவேண்டுமானால் நாடாளுமன்றத்தின் இரு, அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம். ஆனால், இரு அவைகளிலும் பாஜக-வுக்கோ அதன் கூட்டணி கட்சிகளுக்கோ அத்தகைய பெரும்பான்மை இல்லை. இது நன்றாகத் தெரிந்தும் கொடுங்கோன்மையை கோலோச்சச் செய்யும் இந்த சட்டமுன்வரைவை கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது. அனைத்திலும் ஒற்றைத் தன்மையை திணிக்கத் துடிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக வகையறாவின் அராஜகத்தின் ஒரு பகுதியே இந்த மசோதாவாகும்.

    2029-ஆம் ஆண்டு முதல் ஒரே நாடு ; ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு கொக்கரிக்கிறது. அப்படியாளாய், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பல மாநில அரசுகளைக் கலைக்க வேண்டியிருக்கும். மாநிலச் சட்டப்பேரவைகளில் எந்தக் ஒரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்கவில்லையெனில் குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் ஒன்றிய அரசே அந்த மாநில நிர்வாகத்தைக் கைப்பற்றும் நிலை ஏற்படும். ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் அனைத்து சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறுமானால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என பல்வேறு சவால்கள் குறுக்கிடும் நிலை ஏற்படும்.

    அவசரகோலத்தில் அள்ளித் தெளிப்பது போல இந்தச் சட்டமுன்வரைவை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சியை துவக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

    சர்வதேச ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ள அதானியை கைது செய்து விசாரிக்க வேண்டுமென நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரலெழுப்பி வரும் நிலையில், அதானியை பாதுகாக்கவும்.

    இப்பிரச்சனையை திசை திருப்பும் நோக்கோடும் ஒன்றிய பாஜக அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்யவுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், இந்தியாவின் மகத்தான பன்முகத்தன்மையையும் சிதைக்கும் மத்திய மோடி அரசின் நடவடிக்கைகளை சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்பாய்) லிபரசேன் ஆகிய கட்சிகள் வன்மையாக கண்டிப்பதோடு, ஒரே நாடு, ஒரே நேர்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து வலுவான கண்டனக் குரலெழுப்பிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×