என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிறுத்தைகள் எப்பக்கமோ அப்பக்கம்தான் வெற்றி..! அப்பக்கம்தான் ஆட்சி..! திருமாவளவன்
- அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் எந்த விளம்பர மாயைக்கும் பணியமாட்டான். விலைபோக மாட்டான்.
- அம்பேத்கர் லட்சம் மடங்கு ஹீரோ. லட்சம் சூப்பர் ஸ்டார்களுக்கு சமமானவர்.
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் பிரமாண்ட மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். எங்கு பார்த்தாலும் நீல நீரமாக காட்சி அளித்தது.
பேரணி விழா மேடையில் திருமாவளவன் பேசியதாவது:-
* இப்போது நாங்கள் ஆடுகளுமும் அல்ல.. இழிச்சவாய கூட்டமும் அல்ல... சீறிப்பாயும் விடுதலை சிறுத்தைகள்.
* அடங்க மறுப்போம், அத்து மீறுவோம். திமிறி எழுவோம். திருப்பி அடிப்போம். வீர வணக்கம் வீர வணக்கம்.
* வேரறுப்போம் வேரறுப்போம் சனாதனத்தை வேரறுப்புாம். வென்றெடுப்போம் வென்றெடுப்போம். சமத்துவத்தை வென்றொடுப்போம்.
* மோடி அரசே, மோடி அரசே திரும்பப்பெறு திரும்பப்பெறு. வக்பு சட்டத்தை திரும்பப்பெறு. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறு.
* பரப்பாதே, பரப்பாதே முஸ்லிம்களுக்கு எதிராக, கிறிஸ்தவர்களுக்கு எதிராக எதிர்ப்பு அரசியலை பரப்பாதே. சிதைக்காதே சிதைக்காதே அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்காதே.
* சனாதன சக்திகளா, விடுதலை சிறுத்தைகளா. விரட்டி அடிப்போம் விரட்டி அடிப்போம் மதவாத சக்திகளை, சனாதன சக்திகளை விரட்டி அடிப்போம் விரட்டி அடிப்போம்.
* இந்த பேரணி தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலில் பேரதிர்வை உருவாக்குகின்ற பேரணி.
* யார் எந்த கூட்டணி என தேர்தல் கணக்குகள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு அந்த கவலை இல்லை. எத்தனை இடங்கள் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். நமக்கு அந்த கவலை இல்லை. யார் முதலமைச்சர்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு அந்த கவலை இல்லை.
* விடுதலை சிறுத்தைகள் திமுக-விடம் சிக்கிக்கொண்டு தவிக்கிறது... அற்பர்களே, அரசியல் அறியாமையில் உளறும் அரைவேக்காடுகளே.. தமிழ்நாட்டின் அரசியலின் திசைவழியை தீர்மானிப்பவர்கள் விடுதலை சிறுத்தைகள். இந்திய தேசிய அரசியலையும் கூர்மைப்படுத்துபவர்கள் விடுதலை சிறுத்தைகள்.
* முதலமைச்சர் பதவியை பற்றி கவலைப்படவில்லை. துணை முதலமைச்சர் பதவி?... எங்களது தந்தை புரட்சியாளர் அம்பேத்கர் பிரதமரை கைப்பற்றுங்கள் என வழிகாட்டியிருக்கிறார். அதுதான் அதிகாரமிக்க பதவி, அதுதான் அரசு.
* தலித்கள், பழங்குடியின மக்கள், நாட்டின் பூர்வீக குடிமக்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். இதுதான் அம்பேத்கர் கண்ட கனவு.
* எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியும். திருமாவளவனுக்கு தெரியும். 25 வருடம் இந்த தில்லுமுல்லு அரசியலில் தாக்குபிடித்தவர்கள் விடுதலை சிறுத்தைகள். எங்களுக்கு யாருடைய அட்வைஸும் தேவையில்லை.
* தலித்துகள் இந்துக்களாக இருந்தாலும் கூட தலித்களின் உரிமைகளுக்காக போராடாதவர்கள்தான் பிஜேபிகாரர்கள்.
* அந்த பிஜேபி-யின் செயல்திட்டத்தை நிறைவேற்ற பலபேர் பல வேசம் போடுகிறார்கள். சில பேர் சினிமா புகழோடு வந்திருக்கிறார்கள். ஹீரோ என்ற வேசத்துடன வந்திருக்கிறார்கள். எஸ்.சி. இளைஞர்கள் எல்லாம் சினிமோவோடு, சினிமா ஹீரோக்களுடன் சென்று விடுவார்கள் எனச் சொல்கிறார்கள். நடக்குமா?
* அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் எந்த விளம்பர மாயைக்கும் பணியமாட்டான். விலைபோக மாட்டான். அம்பேத்கரின் அரசியலே வேற.. அதை அவர்கள் புரிந்து கொள்ள முடியாது.
* இன்றைக்கும் அம்பேத்கர் என்று சொன்னால் கோடி மக்கள் குரல் எழுப்புவார்கள். இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் குரல் எழுப்புவார்கள். கோஷம் எழுப்புவார்கள். சினிமா காரர்களுக்கு அந்தந்த ஏரியாவில் மட்டும் கோஷம் வரும். அம்பேத்கர் லட்சம் மடங்கு ஹீரோ. லட்சம் சூப்பர் ஸ்டார்களுக்கு சமமானவர் அம்பேத்கர்.
* அம்பேத்கரை தலைவராக ஏற்றுக்கொண்ட என் உயிரின் உயிரான விடுதலை சிறுத்தைகள்.... ஒரு வாக்கு சிதறாது.
* சிறுத்தைகள் எப்பக்கமோ அப்பக்கம்தான் வெற்றி. சிறுத்தைகள் எப்பக்கமோ அப்பக்கம்தான் ஆட்சி. அதை தீர்மானிக்கும் வல்லமை படைத்தவர்கள் விடுதலை சிறுத்தைகள்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.