search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
    X

    விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
    • வருவாய் அலுவலர் பிரியா, கிராம நிர்வாக அலுவலர் நர்மதா, நில அளவையர் பிச்சைமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட கருக்கட்டான்பட்டி ஆதி திராவிடர் குடியிருப்பு பொதுமக்கள் இந்த பகுதிக்கு கழிவறை வேண்டி பலமுறை நகராட்சியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் இன்குலாப், நகர செயலாளர் விடுதலை மாரி, ஒன்றிய செயலாளர் பழனிசாமி, தொகுதி அமைப்பாளர் கோ.சின்னான், விவசாய அணி மாநில துணைச் செயலாளர் தென்னரசு, நிர்வாகிகள் பெரியசாமி, ராமன், பண்ணை பாண்டியன், மகளிரணி பாண்டீஸ்வரி மற்றும் பலர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீஸ் டி.எஸ்.பி. நல்லு, நகராட்சி மேலாளர் சாந்தி, வருவாய் அலுவலர் பிரியா, கிராம நிர்வாக அலுவலர் நர்மதா, நில அளவையர் பிச்சைமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    Next Story
    ×