என் மலர்
நீங்கள் தேடியது "சாமியார் கைது"
- 'AirDroid Kid' என்ற ரகசிய செயலியை ரகசியமாக இன்ஸ்டால் செய்வார்.
- பாலியல் தொழிலாளர்கள் உட்பட பல பெண்களுடன் பாலியல் செயல்களில் ஈடுபட செய்துள்ளார்.
மகாராஷ்டிராவின் பிம்ப்ரி சின்ச்வாட்டில், 29 வயது சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் பிரசாத் என்ற தாதா பீம்ராவ் தம்தார் (29) 'தெய்வீக சக்திகள்' இருப்பதாக கூறி பலரை, குறிப்பாக கருத்தரிக்க சிரமப்படும் பெண்களை ஏமாற்றினார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, போலி பாபா பீம்ராவ் ஆன்மீகம் என்ற போர்வையில் பாவ்தான் பகுதியில் செயல்பட்டார். தெய்வீக சக்திகளைப் பெற்றதாகக் கூறி, பக்தர்களிடம் "நீங்கள் நான்கு முதல் ஐந்து மாதங்களில் இறந்துவிடுவீர்கள்" என்று அவர்களை ஏமாற்றி, மனதளவில் பலவீனப்படுத்தினார்.
புனித மாந்திரீகம் செய்வதாகக் கூறி, பக்தர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களின் தொலைபேசிகளைக் கேட்பார். பின்னர் அவர் 'AirDroid Kid' என்ற ரகசிய செயலியை ரகசியமாக இன்ஸ்டால் செய்வார். இதன் மூலம் பாதிக்கப்பட்டவரின் கேமரா, மைக்ரோஃபோன் மற்றும் GPS ஆகியவற்றை தொலைவிலிருந்து போலி பாபா அணுக முடிந்தது.
இந்த செயலியைப் பயன்படுத்தி, போலி பாபா பக்தர்களை அழைத்து, அவர்களின் உடைகள், இருப்பிடம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை துல்லியமாக விவரிப்பார். இதன் அவர் மீதான அவர்களின் நம்பிக்கையை மேலும் வளர்ப்பார்.
அதிர்ச்சியூட்டும் திருப்பமாக, மரணத்திலிருந்து தப்பிக்க ஒரு தீர்வாக காதலி அல்லது பாலியல் தொழிலாளியுடன் பாலியல் உறவு கொள்ளுமாறு சில இளம் ஆண் பக்தர்களுக்கு பாபா அறிவுறுத்தினார்.
அவர்களின் மொபைல் போன்களை குறிப்பிட்ட கோணங்களில் வைக்க சொல்லி, அந்தரங்க தருணங்களை தொலைபேசி கேமரா மூலம் பார்த்து பதிவு செய்து அதை ரசியுள்ளார் பாபா.
இளம் பக்தர்களில் ஒருவர் தனது தொலைபேசி தொடர்ந்து சூடாகி வருவதைக் கவனித்தார். அவர் அதை ஒரு நண்பரிடம் கொடுத்தார், அவர் அதை மடிக்கணினியைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்து சந்தேகத்திற்கிடமான மறைக்கப்பட்ட செயலியைக் கண்டுபிடித்தார்.
யாரோ ஒருவர் தொலைபேசியை ரிமோட் மூலம் இயக்குவது உறுதி செய்யப்பட்டது. பாபா மட்டுமே சமீபத்தில் தனது தொலைபேசியைக் கையாண்டதாக பாதிக்கப்பட்டவர் நினைவு கூர்ந்தார். இதன்மூலம் ஏற்பட்ட சந்தேகத்தில் அவர் போலீசில் புகார் கொடுத்தார். மேலும் பாபா மீது 3 புகார்கள் வந்தன.
போலி பாபா தாம்தார் கைது செய்யப்பட்டு, பாரதிய நியாய் சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் மகாராஷ்டிரா நரபலி மற்றும் பிற மனிதாபிமானமற்ற, அகோரி நடைமுறைகள் மற்றும் சூனியம் தடுப்புச் சட்டம், 2013 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- அங்க அடையாளங்களை வைத்து வெள்ளி வேல் திருடிய நபரை தேடி வந்தனர்.
- அவரிடம் இருந்த வெள்ளி வேலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வடவள்ளி:
கோவை மருதமலை அடிவாரத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே வேல் கோட்டம் என்ற தனியார் தியான மடம் உள்ளது.
இங்கு வேல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக இங்கு 2½ அடி உயரத்தில் வெள்ளி வேல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
தினமும் காலையில் இந்த மடத்தில் வேல் வழிபாடு நடப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி, மடத்தின் உரிமையாளர் வேல் வழிபாடு நடத்துவதற்காக மடத்திற்கு வந்தார்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த வெள்ளி வேல் திருடு போயிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான அவர், உடனே மடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதில், மொட்டையடித்த நிலையில் காவி உடையணிந்து சாமியார் ஒருவர் மடத்திற்குள் நுழைவதும், அங்கு இருந்த வெள்ளி வேலை எடுத்து, சட்டைக்குள் மறைத்து கொண்டு, மடத்தை விட்டு வெளியேறும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
உடனடியாக மடத்தின் உரிமையாளர் சம்பவம் குறித்து வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். மருதமலை கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து வந்த வேளையில், அடிவாரத்தில் உள்ள மடத்தில் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையடுத்து, வெள்ளி வேல் திருடிய நபரை பிடிக்க போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி அதில் உள்ள அங்க அடையாளங்களை வைத்து வெள்ளி வேல் திருடிய நபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை மருதமலை அடிவார பகுதியில் போலீசார் தீவிர ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சி.சி.டி.வியில் இருந்த அங்க அடையாளங்கள் படி சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் ஊர், ஊராக சென்று மடத்தில் தங்கும் சாமியாரான திண்டுக்கல் மாவட்டம் திருமலை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் சர்மா (வயது37) என்பது தெரியவந்தது.
இவர் தான் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் மடத்தில் வெள்ளி வேலை திருடி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த வெள்ளி வேலை பறிமுதல் செய்தனர். சாமியார் வெங்கடேஷ் சர்மா, வெள்ளி வேலை திருடியதும், அதனை உருக்கி விற்பனை செய்ய முயன்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் முத்தையனை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
- முத்தையனின் மடிகணினியை போலீசார் சோதனை செய்தனர்.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவருடைய வீட்டின் அருகே உள்ள அய்யனார் கோவில் உள்ளது.
சேலம் போயர் தெருவை சேர்ந்த முத்தையன் என்பவர் அடிக்கடி வந்து வழிபட்டு செல்வார். அது மட்டு
மில்லாமல் பில்லி, சூனியம் எடுப்பது, பெண்களை வசீகரம் செய்வது உள்ளிட்ட வேலைகளையும் சாமியார் வேடம் அணிந்து முத்தையன் செய்வார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் டிரைவருக்கும், முத்தையனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது டிரைவருக்கு பணம் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் தனது 50 சென்ட் நிலத்தை 4 லட்சத்துக்கு முத்தையனிடம் டிரைவர் கிரையம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
நாளடைவில் டிரைவரின் குடும்பத்தினருடன் முத்தையனுக்கு பழக்கம் அதிகமானது. அந்த பழக்கத்தால் நாளடைவில் டிரைவரின் மனைவிக்கும், முத்தையனுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. இந்த விஷயம் டிரைவருக்கு தெரியவரவே 2 பேரையும் அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு மேல் முத்தையனுடன் பழக்கம் வைத்திருந்தால் நம் குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும் என கருதிய டிரைவர், சாமியார் முத்தையனுக்கு தரவேண்டிய பணத்தை வட்டியுடன் தயார் செய்து கொடுத்து விட்டு தனது நிலத்தை திரும்ப தர வேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்தையன், உனது நிலத்தை திருப்பி கேட்டால் உன் மனைவியுடன் நான் ஆபாசமாக இருந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் என கூறி மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் சின்னசேலம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சின்னசேலம் போலீசார் முத்தையனை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. முத்தையனின் மடிகணினியை போலீசார் சோதனை செய்தனர். அதில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த 50-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்த 5 செல்போன்கள், ஒரு லேப்டாப், 5 பென்டிரைவ் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து முத்தையனை போலீசார் கைது செய்து, கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






