search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "doctor death"

    • திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சாமி கோவில் பிரம்மோற்சவ விழா நடக்கிறது
    • பலியான குரப்பா குடும்பத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் குரப்பா (வயது 72). இவர் கடப்பாவில் காது, மூக்கு, தொண்டை டாக்டராக பயின்று வந்தார்.

    இவரது மகள் ரவளி. லவ்லி திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு பல் மருத்துவம் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் குரப்பா கடப்பாவில் இருந்து மகளை பார்ப்பதற்காக நேற்று காலை திருப்பதி வந்தார்.

    திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சாமி கோவில் பிரம்மோற்சவ விழா நடக்கிறது. மாலை 4 மணிக்கு தனது மகளுடன் கோவிலுக்கு வந்தார்.

    கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனது மகளுடன் கோவில் வளாகத்தை சுற்றி வந்தார். அப்போது பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    கோவில் வளாகத்தை சுற்றி வந்த பக்தர்கள் அங்குள்ள அரசமரத்து அடியில் தஞ்சம் அடைந்தனர்.

    அப்போது 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரசமரம் திடீரென இரண்டாக பிளந்து விழுந்தது. மரத்தின் அடியில் குரப்பா மற்றும் 3 பக்தர்கள் சிக்கிக்கொண்டனர்.

    இதில் குரப்பாவின் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மகள் கண்முன்னேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்ட அவரது மகள் கதறி துடித்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுபா ரெட்டி முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் படுகாயம் அடைந்த சந்திரசேகர், பேபி, நிஹாரிகா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ரூயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவிந்தராஜ சாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருவதால் ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்து இருந்தனர்.

    பலத்த காற்று வீசியபோது கோவில் வளாகத்தில் யானை கொண்டு வரப்பட்டதால் பக்தர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இல்லை எனில் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். பலியான குரூப்பா குடும்பத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது.

    • அவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டது.
    • எதனால் இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை, மே.1-

    கோவை போத்தனூர் அருகே நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் ராகவேந்திரன் (வயது68). இவரது மகன் பிரித்திவிராஜ் (33). இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி அவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டது.

    இந்நிலையில் அவரது மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில், ராகவேந்திரனும் அவரது மனைவியும் மணப்பா றையில் உள்ள அவரது உறவினர் குடும்ப விழாவில் கலந்து கொள்ள சென்றனர். பின்னர் அங்கிருந்து பிரித்தி விராஜை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. உடனே பக்கத்து வீட்டில் உள்ள எழில் குமாருக்கு தொடர்பு கொண்டு, தனது மகனை செல்போனில் தொடர்பு கொண்டேன் ஆனால் அவர் எடுக்கவில்லை என்றும், அவரை பார்க்குமாறும் கூறினார்.

    அங்கு அவரது வீட்டிற்கு சென்ற எழில், பிரித்தி விராஜ் சுயநினைவின்றி மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தார். அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்ப த்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதனால் இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைக்கானலில் வேன் கவிழ்ந்த விபத்தில் சுற்றுலா வந்த டாக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பெரும்பாறை:

    ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த 11 பேர் ஒரு வேனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பினர்.

    கொடைக்கானல்- வத்தலக்குண்டு மைலைச் சாலையில் உள்ள மச்சூர் அருகே வந்த போது திடீரென வேன் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் வந்த டாக்டர் வினோத்கண்ணன் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி வினோத்கண்ணன் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே விபத்தில் டாக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    தஞ்சாவூர் தில்லை நல்லூரைச் சேர்ந்தவர் நாராயணராஜ் (வயது48). அக்குபஞ்சர் டாக்டர். இவர் மதுரையை அடுத்த திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடியில் வாரந் தோறும் 2 நாட்கள் முகாம் நடத்துவார்.

    வழக்கம்போல் முகாம் நடத்துவதற்காக இன்று திருமங்கலம் வந்தார். பின்னர் அங்கிருந்து கள்ளிக்குடி சென்ற அவர் முகாம் நடைபெறும் இடத்துக்கு செல்வதற்காக 4 வழிச்சாலையை கடக்க முயன்றார்,

    அந்த சமயத்தில் அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நாராயணராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக நாராயணராஜை 108 ஆம்புலன்சு மூலம் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். செல்லும் வழியிலேயே நாராயணராஜ் பரிதாபமாக இறந்தார்.

    கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை தேடி வருகிறார்கள்.

    ×