என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமங்கலம் அருகே விபத்தில் டாக்டர் பலி
பேரையூர்:
தஞ்சாவூர் தில்லை நல்லூரைச் சேர்ந்தவர் நாராயணராஜ் (வயது48). அக்குபஞ்சர் டாக்டர். இவர் மதுரையை அடுத்த திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடியில் வாரந் தோறும் 2 நாட்கள் முகாம் நடத்துவார்.
வழக்கம்போல் முகாம் நடத்துவதற்காக இன்று திருமங்கலம் வந்தார். பின்னர் அங்கிருந்து கள்ளிக்குடி சென்ற அவர் முகாம் நடைபெறும் இடத்துக்கு செல்வதற்காக 4 வழிச்சாலையை கடக்க முயன்றார்,
அந்த சமயத்தில் அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நாராயணராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக நாராயணராஜை 108 ஆம்புலன்சு மூலம் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். செல்லும் வழியிலேயே நாராயணராஜ் பரிதாபமாக இறந்தார்.
கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்