search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே விபத்தில் டாக்டர் பலி
    X

    திருமங்கலம் அருகே விபத்தில் டாக்டர் பலி

    திருமங்கலம் அருகே விபத்தில் டாக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    தஞ்சாவூர் தில்லை நல்லூரைச் சேர்ந்தவர் நாராயணராஜ் (வயது48). அக்குபஞ்சர் டாக்டர். இவர் மதுரையை அடுத்த திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடியில் வாரந் தோறும் 2 நாட்கள் முகாம் நடத்துவார்.

    வழக்கம்போல் முகாம் நடத்துவதற்காக இன்று திருமங்கலம் வந்தார். பின்னர் அங்கிருந்து கள்ளிக்குடி சென்ற அவர் முகாம் நடைபெறும் இடத்துக்கு செல்வதற்காக 4 வழிச்சாலையை கடக்க முயன்றார்,

    அந்த சமயத்தில் அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நாராயணராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக நாராயணராஜை 108 ஆம்புலன்சு மூலம் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். செல்லும் வழியிலேயே நாராயணராஜ் பரிதாபமாக இறந்தார்.

    கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×