search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த டாக்டர் பலி
    X

    வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த டாக்டர் பலி

    • அவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டது.
    • எதனால் இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை, மே.1-

    கோவை போத்தனூர் அருகே நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் ராகவேந்திரன் (வயது68). இவரது மகன் பிரித்திவிராஜ் (33). இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி அவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டது.

    இந்நிலையில் அவரது மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில், ராகவேந்திரனும் அவரது மனைவியும் மணப்பா றையில் உள்ள அவரது உறவினர் குடும்ப விழாவில் கலந்து கொள்ள சென்றனர். பின்னர் அங்கிருந்து பிரித்தி விராஜை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. உடனே பக்கத்து வீட்டில் உள்ள எழில் குமாருக்கு தொடர்பு கொண்டு, தனது மகனை செல்போனில் தொடர்பு கொண்டேன் ஆனால் அவர் எடுக்கவில்லை என்றும், அவரை பார்க்குமாறும் கூறினார்.

    அங்கு அவரது வீட்டிற்கு சென்ற எழில், பிரித்தி விராஜ் சுயநினைவின்றி மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தார். அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்ப த்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதனால் இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×