என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் ஆன்லைனில் ஐ.பி.எல். சூதாட்டம்: 3 பேரிடம் தீவிர விசாரணை- ரூ.19 லட்சம் பணம் பறிமுதல்
    X

    சென்னையில் ஆன்லைனில் ஐ.பி.எல். சூதாட்டம்: 3 பேரிடம் தீவிர விசாரணை- ரூ.19 லட்சம் பணம் பறிமுதல்

    • லோட்டஸ் என்கிற செயலியில் ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் ஆன்லைன் மூலமாக ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் கிழக்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சென்னை மாநகர் முழுவதும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இதில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் ஆன்லைன் மூலமாக லோட்டஸ் என்கிற செயலியில் ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக ஆகாஷ் ஜெயின், ஆகாஷ் குமார், சுரேஷ் ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக ரூ.19 லட்சம் பணம் சிக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கேட்ட போது, பிடிபட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதன் பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும் என்றும் கூறினார்கள்.

    Next Story
    ×