என் மலர்
நீங்கள் தேடியது "யானை தந்தம்"
- சட்டவிரோதமாக யானை தந்தங்களை வைத்திருந்ததாக வனத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.
- 2015ம் ஆண்டு யானை தந்தம் வைத்துக்கொள்வதற்கு உரிமம் கேரள அரசால் வழங்கப்பட்டது.
டிசம்பர் 21, 2011 அன்று, கேரள மாநிலம் கொச்சியின் தேவாராவில் உள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் இரண்டு ஜோடி யானை தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சட்டவிரோதமாக யானை தந்தங்களை வைத்திருந்ததாக வனத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.
தன் வீட்டில் கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு அப்போதைய கேரள வனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் மோகன்லால் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து சட்டத்தில் திருத்தம் செய்யப்பட் மோகன்லாலுக்கு 2015ம் ஆண்டு யானை தந்தம் வைத்துக்கொள்வதற்கு உரிமம் கேரள அரசால் வழங்கப்பட்டது. தந்தங்களும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
பின்னர், மாநில அரசு அவர் மீதான வழக்கை வாபஸ் பெற முயன்றபோது பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த முடிவை நிராகரித்தது.
கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மோகன்லால் உயர் நீதிமன்றத்தை அணுகினார். மறுபுறம், ஜேம்ஸ் மேத்யூ என்ற மற்றொரு நபர் யானை தந்தங்களை வைத்திருந்ததற்காக மோகன்லால் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்து வந்த உயர் நீதிமன்றம், இன்று தீர்ப்பை வெளியிட்டது. அதன்படி, மோகன்லால் யானை தந்தங்களை வைத்துக்கொள்ள மோகன்லாலுக்கு மாநில அரசால் வழங்கப்பட்ட உரிமம் சட்டபூர்வமானது அல்ல என கூறி அதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
2015 ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த உத்தரவில் நடைமுறை பிழைகள் இருகின்றன. எனவே அது செல்லாது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பான விஷயங்களில் அரசுகள் விதிகளின்படி செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கேரள அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. மோகன்லால் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கும்பலிடம் வாடிக்கையாளர் போல் ஒருவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.
- யானை தந்தம், தடயவியல் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த 4 பேர் கும்பல் யானை தந்தத்தை விற்று வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கும்பலிடம் வாடிக்கையாளர் போல் ஒருவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.
அந்த வாடிக்கையாளரிடம் கும்பலை சேர்ந்த ஒருவன், தன்னிடம் 14 கிலோ எடையுள்ள யானை தந்தம் இருப்பதை உறுதி செய்தான். அதை ரூ.35 லட்சத்துக்கு விற்க ஒப்புக்கொண்டான். இதைத்தொடர்ந்து, அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
அவன் போலீசாரிடம், தான் 1999-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரை தமிழ்நாட்டில் தங்கி இருந்ததாகவும், சந்தனக்கடத்தல் வீரப்பன் உறவினர்களை தனக்கு நன்கு தெரியும் என்றும், இன்னும் நிறைய யானை தந்தங்களை தன்னால் வரவழைக்க முடியும் என்றும் தெரிவித்தான்.
அவன் அளித்த தகவலின்பேரில், கும்பலை சேர்ந்த மற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். யானை தந்தம், தடயவியல் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த தந்தங்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
- தொடர்புடையவர்களை மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் இருந்து யானை தந்தம் கடத்தப்படுவதாக தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதைத்தொடந்து அங்கு சென்று குறிப்பிட்ட ஒரு இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 23 கிலோ எடையில், 2 தந்தங்கள் பறிமுதல் இருந்தது. இதைத்தொடர்ந்து யானை தந்தங்கள் பறிமுதல் செய்து அங்கிருந்த ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரை சேர்ந்த முருகன் (வயது 34) உள்ளிட்ட 2 பேரை மடக்கி பிடித்தனர்.
பின்னர் 2 பேரையும் ராஜபாளையம் சுங்க இலாகா அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது முருகன், சுங்க அலுவலக கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதனால் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரை ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த தந்தங்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ. 6 கோடி என கூறப்படுகிறது.
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் மேலும் 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் யார்? என விசாரணை நடத்தி அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில் யானை தத்தங்கள் பதுக்கிய சம்பவத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கார்த்திகேயன், வினித்குமார் ஆகியோரை போலீசார் இன்று பிடித்து கைது செய்தனர். இதில் தொடர்புடையவர்களை மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- யானை தந்தம் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் சிக்கினார்.
- வனப்பகுதியில் இறந்து கிடந்த யானைகளிடம் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாக விசாரனையில் தெரிவித்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் பகுதியில் யானை தந்தங்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் தலைமையில் வனத்துறையினர் சோதனை சாவடி, வனப்பகுதியையொட்டியுள்ள பகுதிகளில் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அதில் யானை தந்தம் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் சிக்கினார். அவர் யானை தந்தம் கடத்தல் குறித்து திடுக்கிடும் தகவல் வனத்துறையினரிடம் தெரிவித்தார். இதையடுத்து ஒட்டு மொத்த கும்பலையும் பிடிக்க வனத்துறையினர் திட்டம் தீட்டினர்.
அதன்படி அவர் மூலமாக வனத்துறையினர் தந்தங்களை விலைக்கு வாங்குவது போல் பேசி கடத்தல் கும்பலை கொளத்தூரை அடுத்த ஏழரை மரத்துக்காடு என்ற இடத்திற்கு வரவழைத்தனர்.
இதையடுத்து சொகுசு காரில் யானை தந்தங்களை எடுத்துக்கொண்டு 3 பேர் ஏழரை மரத்துக்காடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக காருக்கு முன்னும் பின்னும் நோட்டமிட்டபடி 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். குறிப்பிட்ட இடத்திற்கு சொகுசு கார் வந்தவுடன் மாறுவேடத்தில் நின்ற வனத்துறையினர் காரை நிறுத்தி யானை தந்தங்களை கொண்டு வருமாறு சைகை காட்டினர். இதையடுத்து யானை தந்தங்களுடன் காரும், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் அருகில் வந்தனர்.
அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த வனத்துறையினர் கடத்தல் கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து 7 கிலோ எடை கொண்ட 4 யானை தந்தம், ஒரு சொகுசு கார், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் தந்தங்களை காரில் கடத்தி வந்தவர்கள் மேட்டூர் அருகே உள்ள கோவிந்தபாடியை சேர்ந்த பழனி (வயது 48), தலைவாசல் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (40), குரும்பனூரை சேர்ந்த பெருமாள் (50), ஏழரை மரத்துக்காடு பகுதியை சேர்ந்த ஒண்டியப்பன் (59), வாழப்பாடியைச் சேர்ந்த அருணாசலம் (45) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. அவர்களை வனத்துறையினர் கைது செய்து மேட்டூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்கள் அனைத்தும் 20 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் இறந்து கிடந்த யானைகளிடம் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாக விசாரனையில் தெரிவித்தனர்.
இந்த வனப்பகுதியில் வீரப்பன் கும்பல் யானை தந்தம் கடத்தியதாக கூறுவது உண்டு.
வீரப்பனுக்கு அடுத்து தற்போது மீண்டும் யானை தந்தம் கடத்தல் தலை தூக்கியுள்ளதால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களை எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது என கண்டுபிடிக்க ஆய்வுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.






