என் மலர்
நீங்கள் தேடியது "elephant ivory"
- சட்டவிரோதமாக யானை தந்தங்களை வைத்திருந்ததாக வனத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.
- 2015ம் ஆண்டு யானை தந்தம் வைத்துக்கொள்வதற்கு உரிமம் கேரள அரசால் வழங்கப்பட்டது.
டிசம்பர் 21, 2011 அன்று, கேரள மாநிலம் கொச்சியின் தேவாராவில் உள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் இரண்டு ஜோடி யானை தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சட்டவிரோதமாக யானை தந்தங்களை வைத்திருந்ததாக வனத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.
தன் வீட்டில் கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு அப்போதைய கேரள வனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் மோகன்லால் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து சட்டத்தில் திருத்தம் செய்யப்பட் மோகன்லாலுக்கு 2015ம் ஆண்டு யானை தந்தம் வைத்துக்கொள்வதற்கு உரிமம் கேரள அரசால் வழங்கப்பட்டது. தந்தங்களும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
பின்னர், மாநில அரசு அவர் மீதான வழக்கை வாபஸ் பெற முயன்றபோது பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த முடிவை நிராகரித்தது.
கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மோகன்லால் உயர் நீதிமன்றத்தை அணுகினார். மறுபுறம், ஜேம்ஸ் மேத்யூ என்ற மற்றொரு நபர் யானை தந்தங்களை வைத்திருந்ததற்காக மோகன்லால் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்து வந்த உயர் நீதிமன்றம், இன்று தீர்ப்பை வெளியிட்டது. அதன்படி, மோகன்லால் யானை தந்தங்களை வைத்துக்கொள்ள மோகன்லாலுக்கு மாநில அரசால் வழங்கப்பட்ட உரிமம் சட்டபூர்வமானது அல்ல என கூறி அதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
2015 ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த உத்தரவில் நடைமுறை பிழைகள் இருகின்றன. எனவே அது செல்லாது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பான விஷயங்களில் அரசுகள் விதிகளின்படி செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கேரள அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. மோகன்லால் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- யானை தந்தம் கடத்தல் வழக்கில் தங்க இடம் கொடுத்த பெருமாள்மலையை சேர்ந்த வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர்.
- கும்பலுக்கு வனவிலங்குகள் வேட்டையாடி அதன் பாகங்களை விற்பனை செய்வதிலும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா, மதுரை பதிவெண் கொண்ட வாகனங்களில் மர்மநபர்கள் சுற்றி வந்தனர். வனத்துறையினர் சோதனை நடத்தியபோது தனியாருக்கு சொந்தமான லாட்ஜில் தங்கியிருந்து யானை தந்தங்களை விற்க முயற்சி செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து 2 யானை தந்தங்கள், கார்கள், செல்போன், நாட்டுதுப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்து 8 பேரை கைது செய்தனர். இதில் கைதான கேரளாவை சேர்ந்த அப்துல்ரசீத், சிபின்தாமஸ் ஆகியோர் மீது கேரளாவில் பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது.
சிபின்தாமஸ் பெருமாள்மலை அருகே தங்கும் விடுதி நடத்தி வருவதாகவும், அங்கு பல்வேறு தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்த வழக்கில் தப்பிஓடிய பாலமலையை சேர்ந்த சார்லஸ் என்பவரை தேடி வந்த நிலையில் அவர்களுக்கு இடம் கொடுத்த பெருமாள்மலையை சேர்ந்த முகமதுசபிக்(30) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் வனவிலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை சார்லசிடம் கொடுத்து சமைத்து கொடுக்க சொன்னதால் அங்கு தங்களுக்கு அடைக்கலம் கொடுத்தாக தெரிவித்தார். எனவே இந்த கும்பலுக்கு வனவிலங்குகள் வேட்டையாடி அதன் பாகங்களை விற்பனை செய்வதிலும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






