என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானை கூட்டங்கள்"

    • யானை கூட்டங்கள் குட்டிகளுடன் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் வரட்டு பள்ளம் அணைப்பகுதிக்கு வந்து குதூகலமாக நீரை குளித்து சென்று வருகிறது.
    • வரட்டு பள்ளம் அணையை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    கடந்த சில நாட்களாகவே வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானை சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வருவதும் அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் இடத்தை வரட்டுப்பள்ளம் அணை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. அது மட்டுமன்றி வரட்டுப்பள்ளம் சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்ந்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருக்கும் யானை கூட்டங்கள் குட்டிகளுடன் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் வரட்டு பள்ளம் அணைப்பகுதிக்கு வந்து குதூகலமாக நீரை குளித்து சென்று வருகிறது.

    தற்போது தொடர் விடுமுறை காரணமாக அந்தியூர் வரட்டு பள்ளம் அணையை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் யானை கூட்டங்களும் வரட்டுப்பள்ளம் அணையை நோக்கி படையெடுத்து வருவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • யானை கூட்டங்கள் கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
    • வனத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு வன அலுவலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள், நீர் நிலைகள் வறண்டு உள்ளது. இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானை கூட்டங்கள் கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சில சமயம் மனித உயிருக்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது.

    இதையடுத்து வனத்துறையினர் வனப்பகுதியில் உள்ள வனத்தொட்டியில் டிராக்டர் மூலம் தண்ணீரை நிரப்பும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள வனத்தொட்டிகளில் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது.

    இதேபோல் கடம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் வனத்துறையினர் தற்போது நீர் நிரப்பி வருகின்றனர்.

    இதனையடுத்து இந்த வனப்பகுதியில் உள்ள யானை கூட்டங்கள் காலை, மதியம், இரவு நேரங்களில் தண்ணீர் தொட்டியில் நீர் குடித்து மகிழ்கின்றன. வனத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு வன அலுவலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    ×