என் மலர்
நீங்கள் தேடியது "Elephant Herds"
- யானை கூட்டங்கள் கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
- வனத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு வன அலுவலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள், நீர் நிலைகள் வறண்டு உள்ளது. இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானை கூட்டங்கள் கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சில சமயம் மனித உயிருக்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது.
இதையடுத்து வனத்துறையினர் வனப்பகுதியில் உள்ள வனத்தொட்டியில் டிராக்டர் மூலம் தண்ணீரை நிரப்பும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள வனத்தொட்டிகளில் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது.
இதேபோல் கடம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் வனத்துறையினர் தற்போது நீர் நிரப்பி வருகின்றனர்.
இதனையடுத்து இந்த வனப்பகுதியில் உள்ள யானை கூட்டங்கள் காலை, மதியம், இரவு நேரங்களில் தண்ணீர் தொட்டியில் நீர் குடித்து மகிழ்கின்றன. வனத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு வன அலுவலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
- தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
- 15-க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் நிலத்தில் சுற்றி திரிந்துள்ளது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வன சரத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
சமீப காலமாக கர்நாடகாவில் இருந்து இடம்பெயர்ந்து தாளவாடி அருகே வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட அருள்வாடி கிராமத்திற்கு கர்நாடக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 15-க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் அருள்வாடி கிராமம் அருகே உள்ள மானாவாரி நிலத்தில் சுற்றி திரிந்துள்ளது.
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் அச்சம் அடைந்தனர். யானை கூட்டங்கள் விவசாய நிலத்தில் அல்லது ஊருக்குள் புகுந்தால் அதிக சேதாரம் ஏற்படும் என்பதால் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானைக் கூட்டங்கள் அருள்வாடி கிராமத்திற்குள் புகாதவாறு கண்காணித்து வருகின்றனர். மேலும் யானைக் கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.






