என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரட்டுப்பள்ளம் அணை"

    • யானை கூட்டங்கள் குட்டிகளுடன் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் வரட்டு பள்ளம் அணைப்பகுதிக்கு வந்து குதூகலமாக நீரை குளித்து சென்று வருகிறது.
    • வரட்டு பள்ளம் அணையை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    கடந்த சில நாட்களாகவே வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானை சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வருவதும் அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் இடத்தை வரட்டுப்பள்ளம் அணை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. அது மட்டுமன்றி வரட்டுப்பள்ளம் சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்ந்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருக்கும் யானை கூட்டங்கள் குட்டிகளுடன் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் வரட்டு பள்ளம் அணைப்பகுதிக்கு வந்து குதூகலமாக நீரை குளித்து சென்று வருகிறது.

    தற்போது தொடர் விடுமுறை காரணமாக அந்தியூர் வரட்டு பள்ளம் அணையை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் யானை கூட்டங்களும் வரட்டுப்பள்ளம் அணையை நோக்கி படையெடுத்து வருவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • புதிய ஆயக்காட்டு பாசனப் பகுதிகள் பாசன வசதி பெரும் வகையில் 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • வரட்டுப் பள்ளம் அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது. இந்த அணை 33 அடி கொள்ளளவு கொண்ட அணையாகும்.

    மழைக்காலங்களில் மலைப்பகுதிகளில் பொழியும் மழை நீர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு கோடை காலங்களில் பாசனத் திற்காகவும், வன விலங்குகளின் தாகம் தீர்க்கும் தண்ணீராகவும் பயன்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த வாரம் பாசனத்திற்காக புதிய ஆயக்காட்டு பாசனப் பகுதிகள் பாசன வசதி பெரும் வகையில் 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் நேரடியாக 3 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெருகின்றன. இதனைத் தொடர்ந்து இன்று வரட்டுப் பள்ளம் அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பர்கூர் அடிவார பகுதியில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை.
    • யானைகள் தண்ணீரை பருகி அதில் குளித்து மகிழ்ந்து செல்கின்றது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதி உள்ளது. இங்கு யானை, மான், கரடி, செந்நாய் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றனர்.

    பர்கூர் அடிவார பகுதியில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. இந்த அணையில் தேக்கி வைக்கப்பட்ட நீரினை குடிப்பதற்காக வனவிலங்குகள் காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் வருவது உண்டு. அதில் குறிப்பாக யானைகள் தண்ணீரை பருகி அதில் குளித்து மகிழ்ந்து செல்கின்றது.

    இந்த நிலையில் வரட்டுப்பள்ளம் அணை அருகே உள்ள சாலைகளிலும், அதனையொட்டி உள்ள வனப்பகுதிகளிலும் ஒற்றை யானையை சுற்றி திரிந்து வருகின்றது. இதனால் மலைப்பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்றும், யானையை பார்த்தவுடன் செல்பி எடுப்பது, செல்போனில் படம் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இந்த சம்பவத்தினால் வன விலங்குகள் வாகனத்தில் செல்பவர்களை துரத்துவதும், வாகனத்தை சேதப்படுத்துவதும் தற்போது நிகழ்ந்து வருகிறது. அவ்வாறு நிகழாமல் இருக்க வாகன ஓட்டிகள் ஒத்துழைத்து வனவிலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

    அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது. அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
    ஈரோடு:

    அந்தியூர் அருகே பர்கூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 33.46 அடியாகும். பர்கூர் மேற்கு மலைப்பகுதியில் மழை பெய்யும்போது கும்பரவாணி பள்ளம், கள்ளுப்பள்ளம், வரட்டுப்பள்ளம் ஓடைகள் வழியாக வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் வந்து சேரும்.

    கடந்த 15 நாட்களாக பர்கூர் மேற்கு மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் 3 ஓடைகள் வழியாக வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. இந்தநிலையில் நேற்று காலை வரட்டுப்பள்ளம் அணை தன் முழு கொள்ளளவான 33.46 அடியை எட்டியது. இதனால் அணை நிரம்பி வினாடிக்கு 17 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேறுகிறது. இந்த தண்ணீர் அந்தியூர் கெட்டி சமுத்திரம் ஏரிக்கு செல்கிறது.

    ×